Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 071 (Jesus across the Jordan)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)

அ) யோர்தானுக்கு அக்கரையில் இயேசு (யோவான் 10:40 – 11:16)


யோவான் 11:11-16
11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12 அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15 நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.

லாசரு இயேசுவுக்குப் “பிரியமானவன்” என்று சித்தரிக்கப்படுகிறான். இயேசுவும் அவருடைய சீஷர்களும் லாசருவின் வீட்டில் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். ஆகவே லாசரு அனைத்து சீஷர்களுக்கும் சிநேகிதனாயிருந்தான். “இயேசுவுக்குப் பிரியமான” லாசரு ஆபிரகாமைப் போல “இறைவனுடைய சிநேகிதன்” என்று அழைக்கப்படக்கூடியவன். இயேசு மரணத்தைக் குறிப்பிடுவதற்கு “நித்திரை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல என்பதைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறார். நம்முடைய சரீரம் அழிந்தாலும் நம்முடைய ஆத்துமா அழிவதில்லை. விசுவாசத்தினால் இன்று நாம் கர்த்தருக்குள் ஓய்வைப் பெறுகிறோம். நாம் அவருடைய வாழ்வில் திருப்தியும் அமைதியும் உள்ளவர்களாயிருக்கிறோம். நாம் உயிர்த்தெழுதலின்போது நம்மையும் உயிர்ப்பிப்பார். அவருடன் என்றென்றும் வாழ்வோம்.

“நான் போய் அவனை எழுப்பப் போகிறேன்” என்று இயேசு நம்பிக்கையுடன் கூறினார். “நாம் என்ன செய்ய வேண்டும் என்றும் அந்தக் குடும்பத்தை எவ்வாறு ஆறுதல்படுத்த வேண்டும் என்றும் அறியும்படி ஜெபம் செய்வோம்” என்று இயேசு சொல்லவில்லை. அவருடைய நண்பன் மரித்துவிட்டான் என்ற செய்தி அவருக்கு வருவதற்கு இரண்ட நாளைக்கு முன்பிருந்தே இயேசு தன்னுடைய பிதாவுடன் அது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய மகிமையான உயிர்த்தெழுதலுக்கு முன்பாகவே லாசரு உயிரோடு எழுப்பப்படுவான் என்று அவர் அறிந்திருந்தார். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், தான் மேசியா என்பதை தன்னுடைய எதிரிகளுக்கு நிரூபிக்கவுமே இந்த அற்புதத்தை அவர் செய்யப்போகிறார். பிறகு ஒரு தாய் “பள்ளிக்குச் செல்ல நேரமாகிறது. அதனால் உறங்கிக்கொண்டிருக்கும் என் மகனை எழுப்பப்போகிறேன்” என்று சொல்வதைப்போல தான் லாசருவை எழுப்பப் போவதைப்பற்றி இயேசு நம்பிக்கையோடு பேசினார். அவரே வாழ்வாகவும், மரணத்தின் மீதான அதிகாரியாகவும் இருந்தபடியால் அவருக்கு இந்தக் காரியத்தில் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

இயேசுவின் வெற்றி எது என்பதை அவருடைய சீஷர்கள் அத்தருணத்தில் அறிந்திருக்கவில்லை. அவர்கள் லாசரு உறங்கிக்கொண்டிருக்கிறான் என்றும் அவனை எழுப்புவதற்காக போக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். மேலும் அவர்கள் யூதர்களுடைய கரத்தினால் மரிக்கப்போகிறோம் என்பதைக் குறித்தும் பயந்தார்கள்.

அப்போது இயேசு லாசரு இறந்துவிட்டான் என்று வெளிப்படையாகச் சொன்னார். இந்தச் செய்தி சீஷர்களைத் துக்கப்படுத்தியது. ஆனால் இயேசு அவர்களைத் தேற்றி தான் “சந்தோஷப்படுவதாகச்” சொன்னார். மரணத்தைக் குறித்து இறைமைந்தனுடைய செயல்பாடு இதுதான். அவர் வெற்றியையும் உயிர்த்தெழுதலையும் காண்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு தன்னுடைய உயிரையே பகிர்ந்து கொடுப்பதால், மரணம் என்பது அவர்களுக்கு துக்கப்பட வேண்டிய ஒன்றாக இல்லாமல் மகிழ்ச்சிக்கு ஏதுவான ஒன்றாக இருக்கிறது. அவர் வாழ்வாயிருக்கிறார், அவரை விசுவாசிக்கிற எவரும் அவருடைய வாழ்வில் பங்கடைகிறார்கள்.

இயேசு தொடர்ந்து பேசினார். “நான் உங்கள் நிமித்தம் மகிழ்வடைகிறேன். அத்தருணத்தில் நான் அங்கிருந்து லாசருவைக் குணப்படுத்தாத காரணத்தினால் மகிழ்வடைகிறேன். மரணத்தில் இருக்கும் எந்த மனிதனும் அவரில் விசுவாசம் வைக்கும்போது புதிய வாழ்வைப் பெற்றுக்கொள்கிறான். அவனிடத்தில் போவோம் என்றார். இவ்விதமாக மரணவீட்டுக்குப் போகும் செயல் மற்ற மனிதர்களுக்கு கண்ணீரும் துக்கமும் நிறைந்த தருணம். ஆனால் கிறிஸ்துவுக்கு உயிர்த்தெழுதலின் தருணமாயிருந்தது. நாமும் மரிக்கும்போது இயேசு “நாம் அவனிடத்தில் போவோம் என்று சொல்வார். அதற்காக நாம் அவருக்க நன்றி சொல்லுவோம். அவர் நம்மிடத்தில் வருவது விடுழ்லையையும், வாழ்வையும், வெளிச்சத்தையும் நமக்குத் தரும். அப்போஸ்தலனாகிய தோமா இயேசுவை நேசித்து, தைரியத்துடன் அவருடன் செல்கிறார். லாசருவின் உடலைப் பார்க்க இயேசு போவதற்கு முடிவுடன் இருக்கிறார் என்பதை தோமா பார்த்தபோது, கிறிஸ்து அவனை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஆகவே அவர் தன்னுடைய தோழர்களைப் பார்த்து உறுதியுடன் சொன்னார். “நாம் இயேசுவைத் தனியாக விட்டுவிடக் கூடாது. நாம் அவரை நேசிக்கிறோம். மரணம்வரை அவருக்குப் பின் செல்வோம். நாம் அவரோடு இணைக்கப்பட்டுள்ளோம்“ என்று கூறி இறுதிவரை தான் விசுவாசமுள்ளவர் என்பதைக் காண்பித்தார்.

கேள்வி:

  1. லாசருவைக் காப்பாற்ற இயேசு ஏன் வெற்றிப்பயணமாகச் சென்றார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:36 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)