Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 038 (Four witnesses to Christ's deity)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
அ - இரண்டாம் எருசலேம் பயணம் (யோவான் 5:1-47) -- கருப்பொருள்: இயேசுவுக்கும் யூதர்களுக்குமிடையில் பகைமை ஏற்படுதல்

4. கிறிஸ்துவின் தெய்வீகத்துக்கான நான்கு சாட்சிகள் (யோவான் 5:31-40)


யோவான் 5:31-40
31 என்னைக் குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. 32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக் குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். 33 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். 34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். 36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. 38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. 39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.

வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் செயல்களைச் செய்வதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று இயேசு தன்னுடைய எதிரிகளுக்கு அறிவித்தார். அவர்கள் தங்களுடைய அமைப்பை யும் விதிகளையும் தொந்தரவு செய்யும் இந்த கிராமத்தானை வெறுத்தார்கள். அவர் தன்னைப் பற்றி உரிமைபாராட்டிய காரியங்களுக்கு அவர்கள் சாட்சியங்களைக் கேட்டார்கள், ஆகவே இயேசு ஆதாரங்களைக் கொடுக்கும்படி இரக்கத்தோடு அவர்களுக்கு பதிலுரைத்தார். நாம் அனைவருமே நம்முடைய உண்மை நிலவரத்தை உணராமல் நாம் சிறந்தவர்கள் என்று கருதுகிறோம். ஆனால் இயேசு தன்னைப்பற்றிய பொய்யற்ற ஒரு மெய்யான அறிக்கையை முன்வைத்தார். சட்டம் ஒருவன் தன்னைக் குறித்து சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவரைப் பற்றிய அவருடைய சாட்சி உண்மையா யிருக்கிறது. நான் என்னைக் குறித்து சாட்சிகொடுத்தால் அந்த சாட்சி உண்மையாயிராது என்று அவரே கூறுகிறார். அவர் தன்னைப் பாதுகாக்கத் தேவையில்லை, காரணம் அவருடைய பரலோக பிதா அவரைக் குறித்து சாட்சிகொடுத்து, நான்கு அடையாளங்களினால் அல்லது ஆதாரங்களினால் அவரை ஆதரித்திருக்கிறார்.

கிறிஸ்துவைப் மக்கள் நடுவில் பிரசங்கிக்கும்படி இறைவன் யோவான் ஸ்நானகனை அனுப்பினார். கிறிஸ்துவின் முன்னோ டியான அவர் கிறிஸ்துவின் ஆசாரிய ஊழியத்தைக் குறித்தும் அவருடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பிரசங்கித்தார். ஆனால் யூதர்களுடைய ஆலோசனைச் சங்கம் யோவானுடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்தது (யோவான் 1:19 - 28). யோவானுடைய சாட்சி இயேசுவுக்குத் தூண்டுகோலாக இருக்கவில்லை, மாறாக இயேசு நித்தியத்திலிருந்து வருகிறார். ஆனால் மக்களுடைய அறியாமையினிமித்தம் யோவானுடைய சாட்சி சத்தியத்திற்கு கூடுதல் ஆதாரமாக இருக்கும் என்று அதை இயேசு ஏற்றுக்கொண்டார். இயேசு உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று யோவான் சொல்லியது மிகைப்படுத்தபட்ட சாட்சியல்ல.

ஸ்நானகன் இருளில் பிரகாசித்த விளக்காயிருந்தார், தன்னைப் பின்பற்றியவர்களையும் ஒளிரச் செய்தார். ஆனால் இயேசு என்னும் நபரில் சூரியன் வந்தபோது விளக்கின் தேவை இல்லா மல் போனது. இயேசு மட்டுமே அளவற்ற சக்தியுடன் உலகத் திற்கு வெளிச்சமாயிருக்கிறார். எப்படி சூரியன் பூமிக்கு வாழ்வை யும் வளர்ச்சியையும் கொடுக்கிறதோ, அவ்வாறே இயேசுவும் ஆவிக்குரிய வாழ்வையும் அன்பையும் அருளுகிறார். அவருடைய குணமாக்குதல்களும் பிசாசுகளைத் துரத்தியதும் இருளின் மேலான ஒளியின் வெற்றியைக் காட்டுகிறது. புயலைக் கட்டுப்படுத்தி மரித்தோரை உயிர்ப்பித்தது அவருடைய தெய் வீகத்தை நிரூபிக்கிறது. அவருடைய செயல்கள் பிதாவின் செயல்களோடு ஒத்தவைகளாயிருக்கிறது. அவர் சிலுவையில் தன்னுடைய ஊழியத்தை நிறைவேற்றி, தன்னுடைய உயிர்த் தெழுதலினால் தம்மை விசுவாசிக்கிறவர்கள் மீது பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். இறைவனுடைய செயல்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது மரித்தோரை எழுப்பி உலகத்தை நியாயம் தீர்க்கும்போது முடிவடையும். பிதாவுக்கும் குமாரனுக்கும் அவர்களுடைய செயல்களில் வித்தியாசமில்லை: பிதா பணி செய்வதைப் போலவே குமாரனும் பணி செய்கிறார்.

இறைவனே தன்னுடைய சத்தத்தை உயர்த்தி கிறிஸ்துவைக் குறித்த சாட்சியை உறுதிப்படுத்தியிருக்கிறார். இவர் என்னுடைய பிரியமான குமாரன் என்று கூறினார் (மத். 3:17). இறை வனுடைய சித்தப்படி வாழ்ந்த இயேசுவைத் தவிர இத்தகைய சாட்சியைப் பெற்றவர் வேறு ஒருவரும் இல்லை. பிரியமான குமாரன் மெய்யான அன்பினாலும் தூய்மையினாலும் நிறைந்திருந்தார்.

யூதர்கள் இறைவனை அறியவில்லை என்று இயேசு அவர்களிடம் சொன்னார். நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசனங்களிலும் இருந்து அவருடைய சத்தத்தைக் கேட்க அவர்கள் தவறி விட்டார்கள். அவர்கள் தரிசனங்களிலும் சொப்பனங்களிலும் அவருடைய முகத்தை தெளிவாக அவர்கள் கண்டதில்லை. இதற்கு முன்னுள்ள வெளிப்பாடுகள் அனைத்தும் குறை வுள்ளவை, ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் அவர்களை பரிசுத்தரிடமிருந்து பிரித்து வைத்திருந்தது. ஏசாயா இறை வனுடைய வஸ்திரத்தொங்கலை தேவாலயத்தில் கண்டபோது ஐயோ அதமானேன், நான் அசுத்த உதடுகள் உள்ள மனிதன் என்று கத்தினார். இறைவனுடைய மனுவுருவான வார்த்தையாகிய கிறிஸ்துவை அவர்கள் புறக்கணிப்பதே அவர்களுடைய ஆவிக் குரிய செவிட்டுத் தன்மைக்கும் அறியாமைக்கும் காரணம். இறை வனுடைய வார்த்தையை நான் புரிந்துகொள்கிறேன் என்று ஒருவன் நினைத்துக்கொண்டு, இறைவனுடைய வார்த்தையாகிய இயேசுவைப் புறக்கணித்தால், அது அவன் உண்மையான வெளிப் படுத்தலைப் பெற்றுக்கொள்ளவில்லை அல்லது அதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கிறது.

நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையோடு பழைய ஏற்பாட்டு மக்கள் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தார்கள். ஆனால் அவர்கள் மரணத்தின் நியாயப்பிரமாண எழுத்துக்களையே கண்டார்கள். மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தங்கள் பழைய ஏற்பாட்டிலே ஏராளமாக இருந்தபோதிலும் அவர்கள் அவற்றைத் தவற விட்டார்கள். அவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களையும், விளக்கங்களையும், விதிமுறைகளையுமே விரும்பியதால் அவர்கள் நடுவில் வந்திருந்த கிறிஸ்துவே இறைவனுடைய இறுதியான வார்த்தை என்பதை உணரத் தவறினார்கள்.

அவர்களுடைய புறக்கணிப்புக்கான காரணத்தை இயேசு குறிப்பிட்டார் உண்மையாக இறைவன் இருக்கிறபடி அவர்க ளுக்குத் தேவையில்லை. அவர்கள் கிறிஸ்துவை வெறுத்ததால் நித்திய வாழ்வை இழந்தார்கள், விசுவாசத்தின் பொருளையும் கிருபையையும் தவறவிட்டார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் உம்முடைய எதிரிகளையும் நேசித்து அவர்களுடைய அவிசுவாசத்தைக் கண்டு மனம்வருந்தியமைக்காக நாங்கள் உமக்கு நன்றி சொல்லுகிறோம். உம்முடைய தெய்வீகத்தைக் குறித்த நான்கு சாட்சிகளை நீர் அவர்களுக்குக் காட்டினீர். நாங்கள் நற்செய்திகளையும் மற்ற வேதப் பகுதிகளையும் ஆராய்ந்து, உம்முடைய தெய்வீகத்தைக் கண்டுகொள்ள, உம்முடைய செயல்களை விசுவாசித்து நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு உதவிசெய்யும். எங்களுடைய காலத்தில் உம்முடைய வார்த்தைக்கு செவிடாயிருக்கிற லட்சக்கணக்கான மக்களுடைய செவிகளைத் திறந்தருளும்.

கேள்வி:

  1. யார் அந்த நான்கு சாட்சிகள், அவைகள் எதைக் குறித்து சாட்சியிடுகின்றன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:09 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)