Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 073 (The raising of Lazarus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
4. லாசருவை உயிர்ப்பித்தலும் அதன் விளைவுகளும் (யோவான் 10:40 – 11:54)

இ) லாசருவை உயிரோடு எழுப்புதல் (யோவான் 11:34-44)


யோவான் 11:34-35
34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35 இயேசு கண்ணீர் விட்டார்.

இயேசு அவளுக்கு வார்த்தைகளினால் பதிலுரைக்கவில்லை. துயரத்திலுள்ள ஒருவரோடு உரையாடுவதில் பயனில்லை. அந்தத் தருணத்தில் வார்த்தைகளைவிட செயல்களே அதிக பயனளிக்கும். அங்குள்ளவர்களிடத்தில் கல்லறை எங்கிருக்கிறது என்று இயேசு கேட்டார். இவர்கள் “வந்து பாரும்” என்று அவரை அழைத்துச் சென்றார்கள். இதே வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தன்னுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் இயேசு சீஷர்களை அழைத்தார். அவர்கள் வாழ்வைக் காண வேண்டும் என்று அவர்களை அழைத்தார். ஆனால் இந்த மக்கள் மரணத்தைக் காணும்படி கர்த்தரை அழைக்கிறார்கள். அவர் அவர்களுடைய அறியாமையையும் அவிசுவாசத்தையும் பார்த்தபோது அழுதார். அவருடைய சிறந்த சீஷர்கள்கூட மெய்யான விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறினார்கள். மாம்சம் ஒன்றுக்கும் உதவாது. அவர்களுடைய ஆத்துமாவிலும் விசுவாசம் இல்லை. பரிசுத்த ஆவியானவர் இன்னும் அவர்கள் மீது அருளப்படாதிருந்தது. ஆவிக்குரிய மரணம் அவர்களை ஆளுகை செய்த காரணத்தினால் அவர்களுடைய இழிநிலையைப் பார்த்து இறைமகனால் அழத்தான் முடிந்தது.

அழுகிறவர்களுடன் அழுகிறவரும் சந்தோஷப்படுகிறவர்களுடன் சந்தோஷப்படகிறவருமாக இயேசு உண்மையான மனிதனாக இருந்தார். அவர் தன்னுடைய ஆவியில் கலங்கினார். தன்னைப் பின்பற்றுகிறவர்களின் மரண பயத்தையும் ஜீவனுள்ள இறைவன் மீது அவர்களுக்கிருந்த அன்புக் குறைவையும் பார்த்து கவலையுற்றார். இன்றும் நம்முடைய பாவ நிலையையும் ஆவிக்குரிய மரணத்தையும் பார்த்து நமக்காகவும் நம்முடைய சபைகளுக்காகவும் அவர் அழுகின்றார்.

யோவான் 11:36-38
36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

இயேசுவின் கண்ணீரைப் பார்த்த யூதர்கள் லாசருவை அவர் எவ்வளவு நேசித்தார் என்று ஆச்சரியப்பட்டார்கள். அன்பு தர்க்கரீதியானதோ, அறிவுபூர்வமானதோ அல்ல, அது மற்ற ஆத்துமாக்களுடன் உணர்வுரீதியாக இசைந்திருப்பது. கிறிஸ்துவின் அன்பு நம்முடைய அறிவுக்கெட்டாததாகவும் நம்முடைய மரணத்தையும் தாண்டித் தொடர்வதாகவும் இருக்கிறது. மூடப்பட்ட கல்லறையில் வைக்கப்பட்ட லாசருவைப் பார்த்து மரணம் தன்னுடைய நண்பனை வென்று விட்டதற்காக கலங்கினார். ஆனால் அவருடைய இதயம் கல்லறையையும் தாண்டி தன்னுடைய அழைப்பைக் கேட்கும்படி அந்த பிணத்தை ஆயத்தம் செய்தது.

இயேசுவின் செயல்களைப் பார்த்து சிலர் அவருடைய அதிகாரத்தை விமர்சித்தார்கள். அதைக் கண்டு இயேசு கோபம் கொண்டார். நம்முடைய குறுகிய மனப்பான்மையிலிருந்து நம்மைக் காத்து, நம்முடைய துயரத்திலிருந்து நம்மை விடுவிக்கும்படி கிறிஸ்து தீர்மானித்திருக்கிறார். அப்போது நாம் மனித அளவுகோல்களின்படி சிந்தியாமல் அவருடைய வல்லமையை நம்பி அவரில் ஆறுதலடைவோம். பாவத்தில் மரித்திருக்கும் நம்மைச் சுற்றியிருக்கிறவர்களை எழுப்ப அவர் விரும்புகிறார். அவர் உங்கள் அவிசுவாசத்தைக் கண்டு வேதனைப்படுகிறாரா, அல்லது உங்கள் வலுவான அன்பில் மகிழ்ச்சியுறுகிறாரா?

விண்ணப்பம்: உம்மை நம்புவதற்கும் நேசிப்பதற்கும் நீர் கொடுத்த வாய்ப்புகளைத் தவறவிட்டமைக்காக, கர்த்தராகிய இயேசுவே, எங்களை மன்னியும். எங்கள் அவிசுவாசத்தையும் சுயவிருப்பத்தையும் மன்னித்தருளும். ஜீவனுள்ள நம்பிக்கைக்கு ஏதுவாக நீர் எங்களை நடத்தி, உம்மை எப்போதும் மதித்து, உமக்குக் கீழ்ப்படியப்பண்ணும்.

கேள்வி:

  1. இயேசு ஏன் மனங்கலங்கி அழுதார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:44 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)