Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 048 (Jesus and his brothers)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

அ) இயேசுவும் அவரது சகோதரர்களும் (யோவான் 7:1-13)


யோவான் 7:1-5
1 இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். 2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.

தன்னுடைய மகிமையைக் குறித்த இயேசுவின் சாட்சியினால் மக்கள் கூட்டம் திகைப்படைந்தது. அவருடைய நண்பர்களில் பலர் எருசலேமில் அவரைவிட்டு விலகினார்கள், சிலர் கலிலேயாவில் அவரைவிட்டுப் பின்வாங்கினார்கள். தலைநகரத்திலிருந்த குறுகிய சிந்தையுள்ளவர்கள் இந்த வாலிபன் எப்படி இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறவனாகவும் உலகத்தை நியாயம் தீர்க்கிறவனாகவும் இருக்க முடியும் என்று அவரை விசுவாசிக்கவில்லை. ஆனால் பக்தியுள்ள கலிலேயரோ அவர் தன்னுடைய மாம்சத்தை உண்டு தன்னுடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்ற அவருடைய போதனையைக் கேட்டு வெறுப்படைந்து அவரை விசுவாசிக்க மறுத்தார்கள். அவை கர்த்தருடைய பந்தியின் அடையாளங்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள்.

எருசலேமில் ஆலோசனைச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் இயேசுவைக் கொல்ல தீர்மானித்தார்கள். அவர்கள் இயேசுவைக் கைதுசெய்வதற்கு ஆணை பிறப்பித்து, அவரைத் தொடர்ந்து பின்பற்றுபவர்களை ஜெப ஆலயத்தைவிட்டும் இறைவனுடைய ஆசீர்வாதங்களைவிட்டும் புறம்பாக்குவோம் என்று பயமுறுத்தினார்கள். ஆலோசனைச் சங்கத்திலிருந்து வந்திருந்த உளவாளிகள் கலிலேயாவில் தேடி இயேசுவைக் குறித்து விசாரித்தார்கள். மக்கள்கூட்டம் இயேசுவின் முடிவற்ற இரட்சிப்பா அல்லது தேசத் தலைவர்களின் தண்டனையா என்று சிந்தித்து அவரை விட்டுப் பின்வாங்கிச் சென்றதொன்றும் ஆச்சரியமானதல்ல. அவர்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய முடிவை எடுத்தார்கள், இனிவரும் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படவில்லை. இறைவனுடைய கொடையைக் காட்டிலும் தங்களுடைய பாதுகாப்பையே அதிகம் விரும்பினார்கள்.

இயேசுவின் சகோதரர்களும் தாங்களும் சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்பதை எண்ணி பயந்தார்கள். எனவே அவர்கள் யூதர்களுடைய ஜெபஆலயங்களைவிட்டுப் புறம்பாக்கப்படாதபடி மக்கள் காணும்படி அவரை விட்டு விலகினார்கள் (மாற்கு 6:3). மேலும் அவர்கள் அவரைக் குறித்த தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகும்படி அவரை கலிலேயாவை விட்டுப் போகும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அவர் எருசலேமில் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த அவர்கள் அவரை நிர்ப்பந்தித்திருக்கலாம். அத்தனை வருடங்கள் அவருடன் வாழ்ந்தவர்கள் அவருடைய இரக்கத்தையும் அன்பையும் சாதாரண காரியங்களாக நினைத்து அவருடைய தெய்வீகத்தை நம்ப மறுத்தார்ககள். பல விசுவாசிகள் இயேசுவின் அன்புக்காக அவரை மதிக்கிறார்களே தவிர அவரைப் பற்றிய சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

இயேசுவின் சகோதரர்களும் தாங்களும் சமூகத்தைவிட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்பதை எண்ணி பயந்தார்கள். எனவே அவர்கள் யூதர்களுடைய ஜெபஆலயங்களைவிட்டுப் புறம்பாக்கப்படாதபடி மக்கள் காணும்படி அவரை விட்டு விலகினார்கள் (மாற்கு 6:3). மேலும் அவர்கள் அவரைக் குறித்த தங்களுடைய பொறுப்பிலிருந்து விலகும்படி அவரை கலிலேயாவை விட்டுப் போகும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அவர் எருசலேமில் தன்னுடைய மகிமையை வெளிப்படுத்த அவர்கள் அவரை நிர்ப்பந்தித்திருக்கலாம். அத்தனை வருடங்கள் அவருடன் வாழ்ந்தவர்கள் அவருடைய இரக்கத்தையும் அன்பையும் சாதாரண காரியங்களாக நினைத்து அவருடைய தெய்வீகத்தை நம்ப மறுத்தார்ககள். பல விசுவாசிகள் இயேசுவின் அன்புக்காக அவரை மதிக்கிறார்களே தவிர அவரைப் பற்றிய சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.

யோவான் 7:6-9
6 இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. 7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. 8 நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். 9 இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.

பிசாசின் ஆவி மனிதர்களைக் கெடுத்துவிட்ட காரணத்தினால் அவர்கள் பெருமை மிகுந்தவர்களாயிருக்கிறார்கள். பெருமை என்பது ஆத்தும நோய்க்கான அறிகுறியாகவும் உளவியல் பிரச்சனைக்கான அடையாளமாகவும் காணப்படுகிறது. உண்மையில் யாரெல்லாம் இறைவனுக்கு எதிராயிருக்கிறார்களோ அவர்கள் சிறியவர்களாகவும், பெலவீனமானவர்களாகவும் மரணத்திற்கு விதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். தன்னுடைய பெலவீனத்தை மகிமையான அலங்காரத்தினால் மறைக்க முயற்சிக்கிறார்கள். தான் விரும்புவதைச் செய்யவும் அல்லது எதுவும் செய்யாதிருக்கவும் வல்லமையுள்ள சிறிய இறைவன் என்று பெருமையுள்ள மனிதன் தன்னைப் பற்றி கற்பனை செய்துகொள்கிறான். அவன் இறைவனை மறந்தவனாக தன்னுடைய நாளையும் வழிகளையும் குறித்துத் திட்டமிடுகிறான். சுபாவப்படி அவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு எதிராகக் கலகம் பண்ணுகிறான். மனிதன் தன்னைத்தான் நேசிக்கிறான் கடவுளை அல்ல. அவன் தன்னுடைய பெயரையே மகிமைப்படுத்துகிறான், பரலோக பிதாவின் நாமத்தை அவன் மகிமைப்படுத்துவதில்லை.

மனிதர்களுடைய சிந்தனைகளும் நோக்கங்களும் மட்டும் தீமையானவைகள் அல்ல, அவர்களுடைய முழுமையான செயல்களும் தீமையானவைகள்தான். கர்த்தரில்லாமல் வாழும் எவரும் அவருக்கு எதிராக வாழ்கிறார்கள். விஞ்ஞானத்தின் பெரும்பான்மையான கண்டுபிடிப்புகள், அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவஞானக் கருத்துக்கள் அனைத்தும் பாவம் என்னும் காரியத்துடன் தொடர்புடையவையாகவே இருக்கிறது. அவைகளில் மரணத்தின் வித்துக்கள் இருக்கிறது.

இயேசு தான் விரும்பியதைச் செய்கிறவராக வராமல் தம்முடைய பிதாவோடு ஒன்றாக இருப்பராகவும் அவரோடு ஐக்கியப்பட்டு செயல்படுகிறவராகவும் வந்த காரணத்தினால்தான் உலகம் அவரைப் பகைத்தது என்பதை அவர் காண்பித்தார். இயேசு வலியுறுத்திய அன்பு சட்டத்தினால் உருவாகும் அன்பாயிராமல் தெய்வீக அன்பாயிருந்த காரணத்தினால் சமய பக்தியுள்ளவர்களுக்குக் கூட அவர் இடறலாகத்தான் இருந்தார். அவருடைய பிரசன்னம் சுயநீதியை அழித்த காரணத்தினால் அவர்கள் அவரை வெறுத்தார்கள்.

கிறிஸ்துவின் சகோதரர்கள் பரிசுத்த ஆவியானவரைப் புறக்கணித்தார்கள். அவர்கள் உலக ஆவியினால் நிரம்பியவர்களும் பரிசேயருடைய கொள்கைகளை அதிகம் ஏற்றுக்கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு விசுவாசம் இல்லை என்பது இறைவனுடைய அன்பின் ஆவியானவர் அவர்களில் இல்லை என்பதையே காண்பிக்கிறது. மாறாக அவர்களுக்குள் தங்களைக் குறித்துப் பெருமைப்படுகிறதும் இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறதுமான வேறொரு ஆவியினால் அவர்கள் நடத்தப்பட்டார்கள். அவர்கள் தங்கள் நற்செயல்களில் நம்பிக்கை வைத்து தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள்.

யோவான் 7:10-13
10 அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார். 11 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். 12 ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். 13 ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.

ஒவ்வொரு வருடமும் யூதர்கள் தங்களுடைய கூடாரப்பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் வீட்டின் மேல்தளத்தில் அல்லது தெருவோரங்களில் மரக்கிளைகளைக் கொண்டு கூடாரங்களை உண்டுபண்ணி அவற்றில் தங்குவார்கள். மக்கள் ஒருவரையொருவர் அக்கூடாரங்களில் சென்று சந்தித்து, சுவையான உணவுகளை உண்டு மகிழ்வார்கள். இறைவன் தங்களுக்குக் கொடுத்த நிறைவான விளைச்சலுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகையாக இது கொண்டாடப்பட்டது. அந்த கூடாரங்கள் அவர்களுடைய வனாந்தர வாழ்க்கையை நினைவுபடுத்தியது. அவர்களுக்கு நிலையான நகரம் இவ்வுலகத்தில் இல்லை.

இயேசு தம்முடைய சீடர்களோடு துன்பப்படுத்தப்பட்ட காரணத்தினால் விருந்தின் மகிழ்ச்சியில் அவர் நிலைத்திருக்கவில்லை. அவருடைய சொந்த சகோதரர்களே அவரைவிட்டுப் போய்விட அவர் அனுமதித்தார். பின்பு அவர் உலகத்தில் தம்முடைய சொந்த நகரமான கலிலேயாவிற்கு பிரியாவிடை கொடுத்து எருசலேமை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அவருடைய மரணத்தின் மூலமாக இறைவனுடைய கோபாக்கினையிலிருந்து நம்மை விடுவிக்கும் வரலாற்றின் உச்சகட்டமான முக்கியமான தருணத்திற்கு அவர் வந்தார்.

யூதர்கள் நடுவில் இயேசுவைக் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவியது. சிலர் அவர் இறைவனிடமிருந்து வந்தவர் என்றும் நல்ல மனிதர் என்றும் ஒரு சீர்திருத்தவாதி என்றும் கருதினார்கள். வேறு சிலர் அவர் மக்களைத் தவறான வழியில் இட்டுச் செல்வதால் மரணத்திற்குப் பாத்திரமானவர் என்று கருதினார்கள். அவர் அவர்கள் நடுவில் இருப்பதால் அது அவர்கள்மீது இறைவனுடைய கோபத்தை வருவித்து அவர்களுடைய பண்டிகைகளையும் கெடுத்துவிடும் என்றும் கருதினார்கள். சனகதரின் சங்கம் அவரைப் பின்பற்றுபவர்கள் நடுவில் தயக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவருக்கு எதிரான அறிவிப்பை அனைத்துப் பகுதிகளிலும் கொடுத்திருந்தார்கள். இவையனைத்திற்கும் பிறகு யாரும் இயேசுவைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் துணியவில்லை.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே உம்முடைய தாழ்மைக்காகவும் இறைவனுக்கு நீர் கீழ்ப்படிகிறதற்காவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களை நிரப்பும்படி, உலக சிந்தைகளிலிருந்து எங்களை விடுவியும். உமக்குத் தகுதியான முறையில் நாங்கள் உமக்கு சேவை செய்யும்படி தீய வழிகளிலிருந்து எங்களைக் காத்து, எங்கள் உள்ளான மனிதனைக் குணப்படுத்தும்.

கேள்வி:

  1. உலகம் இயேசுவை ஏன் பகைக்கிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)