Previous Lesson -- Next Lesson
ஈ) சீஷத்துவத்தின் விதிமுறைகள் (மாற்கு 4:21-25)
மாற்கு 4:21-25
21 பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா? 22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை. 23 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். 24 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். 25 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டால், அதை புரிந்துகொள்ளுங்கள், அதை விசுவாசியுங்கள். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் விசுவாசம் உயிருள்ளது. அதை மறைக்க முடியாது. உங்கள் இருதயத்தில் இறைவனுடைய அன்பு பரலோக ஒளியை ஏற்றியுள்ளது. கிறிஸ்து உலகின் ஒளியாக இருப்பது போல, உங்களைச் சுற்றியுள்ள இருளை மேற்கொள்ளும் ஒளியாக உங்களை உருவாக்குகிறார். நீங்கள் மனிதர்கள், பாடுகள், மரணம் அல்லது பிசாசுகளுக்குப் பயப்படுகிறீர்களா? இறைவன் உங்களுடன் இருக்கிறார். அவருடைய குமாரன் உங்களில் வாசம்பண்ணுகிறார். எனவே எதற்கும் பயப்பட வேண்டாம். விசுவாசியுங்கள், இரட்சகருக்கு சாட்சியாக இருங்கள். அவர் உங்களுக்கு மகிழ்ச்சி, ஞானம், தாழ்மையைத் தருகிறார்.
எல்லா நேரங்களிலும் ஒரு மனிதனில் விசுவாசம் என்பது மறைந்திருக்காது. அதைப் போல கிறிஸ்துவை விசுவாசியாதோர் வாழ்வில் பாவம் மறைந்திருக்காமல் வெளிப்படுகின்றது. சில காலம் தனது வாயை மூடியிருந்தாலும் பாவிகளின் வாயில் இருந்து கெட்ட வார்த்தைகள் வருகின்றன. எதிர்பாராத நேரத்தில் அவனுடைய அசுத்தமான இருதயத்தில் இருந்து அசுத்த ஆவி தோன்றுகிறது. அசுத்தமான வார்த்தைகள் வெளி வருகின்றன. இவ்விதமாக உங்கள் வார்த்தைகள் உங்களை நியாயம் தீர்க்கின்றன.
பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பவன் அன்பு, பரிசுத்தம், சத்தியத்தை வெளிப்படுத்துகிறான். எல்லா நேரங்களிலும் உலகின் பிள்ளைகளோடு உங்களால் ஒத்துப்போக முடியாது. நீங்கள் மறுபடியும் பிறந்தவராக இருக்க முடியாது. ஒன்று நீங்கள் இறைவனுடைய உத்திரவாதத்தை இழந்து போவீர்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு உண்மையுடன் கிறிஸ்துவின் இரட்சிப்பை சாட்சியிடுவீர்கள்.
உங்கள் விசுவாசம் என்பது மனனம் செய்யப்பட்ட வெறும் கொள்கை அல்ல. அது கிறிஸ்துவின் ஐக்கியத்தில் உள்ள உன்னத சேவை. சோம்பேறியாய் உள்ளவன் அல்லது பேராசை பிடித்தவன் ஆவிக்குரிய நிலையில் மரித்தவன் தனது எஜமானின் வார்த்தையை தினமும் கேட்பவன், ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்துகிறான். பரிசுத்த ஆவியின் வாழ்வில் வளர்கிறான். தீய நட்புகளிடம் இருந்து விலகி நிற்கிறான். அவன் அசுத்தமான நகைச்சுவைகளைத் தவிர்க்கிறான். ஆபாசங்களுக்கு தனது கண்களை மூடுகிறான். கிறிஸ்துவின் மீது நோக்கமாயிருங்கள். உங்கள் வாழ்வு முழுவதும் அவர் உங்களை நன்மையினால் திருப்திப்படுத்துவார்.
இந்த தத்துவத்தில் உள்ள முக்கியமான காரியத்தின் இரகசியத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உள்ளே வருவதெல்லாம் வெளியே போகும். நீங்கள் இறை வார்த்தையைக் கேட்டால், அதைப் பேசுவீர்கள், நீங்கள் அரசியல் செய்தியைக் கேட்டால், நிச்சயம் நீங்கள் அசுத்தமானவராக மாறுவீர்கள். எனவே உங்கள் இருதயத்தை நற்செய்தியினால் நிரப்புங்கள். நீங்கள் மற்றவர்கள் வாசிக்கக் கூடிய இறைவார்த்தையின் நடமாடும் நிரூபங்களாக இருங்கள்.
இந்த பொல்லாத, விபச்சார சந்ததியில் இருந்து இயேசு மனிதர்களை அழைக்கிறார். அநேக மக்கள் இறைவனின்றி வாழ்கிறார்கள். தங்கள் வாழ்வில் தேவைப்படும் போது மட்டும் அவரை நாடுகிறார்கள். மனிதர்களில் செயல்படும் அசுத்த ஆவியை இயேசு அறிகிறார். ஒவ்வொருவரும் சுபாவத்தின்படி சுயநலமுள்ளவர்கள். இறைவனைத் தவிர ஒருவரும் நல்லவர் இல்லை. எச்சரிக்கையாயிருங்கள், ஒருவனுடைய தீயசெயலைக் கண்டு, உங்கள் அறிவின்படி அவரை நியாயம் தீர்க்காதிருங்கள். அவர்கள் இறைவனுக்கு எதிராக கலகம் செய்யும் பொல்லாத, விபச்சார சந்ததியாக இருந்தாலும், அவர்களுக்கு கிறிஸ்துவில் வெளிப்பட்டுள்ள இறை அன்பை உணர்ந்துகொள்ள செய்யுங்கள். இறைவன் துன்மார்க்கரை நேசிக்கிறார். அவர்களை அவர் கடிந்துகொள்வதில்லை அல்லது அழிப்பதில்லை. இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் இரட்சிக்கிறார். அவர் உங்களையும் இரட்சிப்பது நிச்சயம். யாரையும் நாம் நியாயந்தீர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ வேண்டாம். அவரை நேசித்து, அவருக்கு சாட்சி பகிர்ந்து, அவருக்காக மன்றாடுவோம்.
கிறிஸ்துவின் சாட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்பவன் இறைவனுடைய பணியில் வளர்கிறான். அவன் புதிய காரியங்கள், ஆவிக்குரிய வல்லமைகள், பரலோக ஆசீர்வாதங்கள், நித்திய மகிழ்ச்சி, தெய்வீக அன்பைப் பெற்றுக்கொள்கிறான். ஆவியில் ஐசுவரியமுள்ளவன் இன்னும் அதிகமாய் வளர்கிறான். சாட்சியாக வாழ்வதில் பலவீனன், மற்றவர்களுக்கு உதவுவதில் சோம்பேறியானவன் இறை ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவன் அல்ல. எனவே பேசுங்கள் அமைதியாய் இராதீர்கள். இறைவன் உங்களுடன் இருக்கிறார். அவரே உங்கள் கேடகம், அவரே உங்கள் பரிசு.
விண்ணப்பம்: பிதாவே, நீர் எங்களை நித்திய வாழ்வுக்கென்று அழைத்ததால் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம் எங்கள் பலவீனம், பயம், முட்டாள் தனத்தை எங்களுக்கு மன்னியும். உமது நற்செய்தியை கற்றுக்கொள்ளும்படி எங்களை வழிநடத்தும். நாங்கள் மகிழ்ச்சியினாலும், தைரியத்தினாலும் நிறைந்திருக்கச் செய்யும். உமது அன்பை எங்கள் நண்பர்களுக்கு அறிவியும். தீய ஆவிகளிடம் இருந்து எங்களை காத்துக்கொள்ளும். எல்லா நேரங்களிலும் உமது அன்பின் பணியில் நாங்கள் தொடர்ந்திருக்கச் செய்யும். ஆமென்.
கேள்வி:
- இறை ராஜ்யத்தில் வளர்வதின் இரகசியம் என்ன?