Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16b-42)
உ) இயேசு விலாவினில் குத்தப்படுதல் (யோவான் 19:31-37)யோவான் 19:31-37 யூதர்கள் தங்களது நியாயப்பிரமாணத்தின் மேல் கொண்டிருந்த மத வைராக்கியத்தால் மனித உணர்ச்சிகள் அற்று மனம் மரத்துப் போயிருந்தார்கள். சிலுவையில் கொல்லப்பட்டவர்களின் சரீரங்கள் இரவுக்குள்ளாக அகற்றப்பட வேண்டும் என்று மோசேயின் சட்டங்கள் கூறுகிறது. ஆகவே யூதர்கள் இந்த மூன்று பேருக்கும் இதன் படி செய்ய முயற்சித்தார்கள். பண்டிகையின் நேரத்தில் அலங்கோலமாய் காட்சியளித்ததை அவர்கள் வெறுத்தார்கள். அந்த மூன்று பேரின் காலெழும்புகளை முறித்து சீக்கிரமாய் முடிவைக் கொண்டு வரும்படி பிலாத்துவிடம் அவர்கள் கேட்டார்கள். சில நேரங்களில் சிலுவையிலறையப்பட்டவர்கள் மூன்று நாட்கள் வரை உயிருடன் இருப்பதுண்டு. துளையிடப்பட்ட கைகள் மற்றும் கால்களில் இருந்து எப்போதும் அதிகமான இரத்தம் வெளியேறுவதில்லை. ஆகவே கை கால் எலும்புகளை பலமாக அடித்து நொறுக்கும்படி சேவகர்கள் சென்றார்கள். இயேசு ஏற்கெனவே மரித்து விட்டதைக் கண்டு சேவகர்கள் அங்கேயே நின்றார்கள். பலத்த அடிகளினால் அவருடைய மென்மையான சரீரம் பலவீனமடைந்திருந்தது. உலகத்தின் மீதான இறைவனின் கோபாக்கினை மற்றும் நமது பாவங்களின் பாரத்தினால் அவரது ஆத்துமா பெருந்துயரம் அடைந்திருந்தது. இறைவனுடன் நம்மை ஒப்புரவாக்கும்படி இயேசு, அவருடைய தீர்மானத்தின் படியே மரித்தார். மத காரியங்களைக் குறித்த அக்கறையுடன் அல்லாமல், யூதர்கள் இயேசு மரித்ததை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஆர்வத்துடன் இருந்தார்கள். சேவகர்களில் ஒருவன் ஈட்டியை எடுத்து கிறிஸ்துவின் இதயத்தின் அருகில் விலாவிலே குத்தினான். நீரும், இரத்தமும் புறப்பட்டு வந்தது. பெரிய வெள்ளியின் ஆறாம் மணி நேரத்திற்கு முன்பே இயேசு மரித்துவிட்டார் என்பதை அது நிரூபித்தது. இச் சம்பவம் ஒரு கிறிஸ்தவனுக்கு இறைவனின் வெற்றியை மூன்று விதங்களில் கூறுகிறது. முதலாவது யூதர்கள் சாத்தானால் தூண்டப்பட்டு கிறிஸ்துவின் எலும்புகளை முறித்துப்போட எண்ணினார்கள். அப்போது ஒருவரும் சிலுவைப் பலியை தெய்வீகமான பலி என்று உரிமை கோர முடியாது. பஸ்கா பண்டிகையின் போது பலி செலுத்தப்படும் ஆடு பழுதற்றதாக, இருக்க வேண்டும், எலும்புகள் முறிக்கப்படக் கூடாது. (யாத்திராகமம் 12:46) ஆகவே இறைவன் தனது குமாரனை மரணத்திலும் பாதுகாத்தார். அவர் நியமித்த இறைவனின் ஆட்டுக்குட்டியை ஒருவரும் தவறு என்று மறுத்துப் பேச முடியாது. இரண்டாவது சேவகர்களால் இயேசு விலாவினில் குத்தப்பட்டது குறித்து சகரியா12:10 வசனம் கூறுகிறது. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு பழைய ஏற்பாட்டு மக்கள் தங்கள் மேய்ப்பரை மதிப்பிட்டதை தீர்க்கதரிசி காண்கிறார். சகரியா11:13, இருப்பினும் இறைவன் தமது கிருபையின் ஆவியை, விண்ணப்பத்தின் ஆவியை தாவீதின் வீட்டார் மேலும், எருசலேம் நகர மக்கள் மீதும் பொழியப்பண்ணுவார். அப்போது அவர்கள் கண்கள் திறக்கப்படும், சிலுவையில் அறையப்பட்டவரை அறிந்து கொள்வார்கள். அவருடைய பிதாவானவரையும் அறிவார்கள். இந்த ஒளியூட்டப்படுதல் இல்லாமல் அவர்கள் இறைவனை அறிய முடியாது அல்லது அவருடைய இரட்சிப்பை அறிய முடியாது. இறைவனின் ஆவியைப் பெற்றவர்கள் சிலுவையில் அறையப்பட்டவரை காண்பார்கள். நாம் வேதத்தில் வாசிப்பது போல, “தாங்கள் குத்தினவரை அவர்கள் நோக்கிப் பார்த்தார்கள்”. மூன்றாவதாக நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாக சிலுவையினருகே இறுதி வரை உண்மையாக இருந்த சீஷன் பேசியிருக்கிறான். அவன் சேவகர்களை விட்டு தூரமாய் ஒடிப்போகவில்லை. மரணத்தின் பின்பும் ஆண்டவரை விட்டு விலகவில்லை. அவன் இயேசுவின் விலாவினருகே ஈட்டியால் குத்துவதைப் பார்த்தான். நமக்கு இறைவனின் அன்பைக் குறித்து சாட்சி கொடுக்கிறார். திரியேகத்தில் ஒற்றுமை, நித்திய வாழ்வில் விசுவாசம் வைத்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொள்வோம். விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, நீர் பாவங்கள், சாத்தான் மற்றும் நியாயத்தீர்ப்பு அனைத்தின் மீதும் வெற்றி பெற்றிருக்கிறீர். நீர் உயிருள்ள இறைவன், பிதாவுடன் பரிசுத்த ஆவியானவரால் ஆளுகை செய்கிற அரசர். கேள்வி:
|