Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, யாக்கோபின் புத்திரர் கடினப்பட்டுபோன பின்பும் இறைவனின் நீதி நிலையானதாக இருக்கிறது (ரோமர் 9:1-11:36)
3. இஸ்ரேலின் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராக இருந்தும் இறைவன் நீதியில் நிலைத்திருந்தார் (ரோமர் 9:6-29)ஆண்டவராகிய இயேசுவுக்கு பணி செய்வதில் பவுல் மகிழ்ச்சியுள்ள அப்போஸ்தலனாக இருந்தான். அதே சமயத்தில் அவனுக்குள் ஆழமான துன்பம் மற்றும் அதிகரிக்கும் மன அழுத்தம் காணப்பட்டது. விசுவாசியாத நூற்றுக்கணக்கான புறஜாதியார் மனந்திரும்புவதையும், இறைவனின் ராஜயத்திற்குள் இணைக்கப்படுவதையும் அவன் கண்டான். ஆனால் ஆயிரக்கணக்கான தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் இயேசுவையும், அவருடைய ராஜ்யத்தையும் புறக்கணித்தார்கள். அவரை விட்டு விலகிப் போனார்கள். அவருடைய சத்தத்தைக் கேட்கவும் அவரைப் பின்பற்றவும் விருப்பமில்லாமல் இருந்தார்கள்.
அ) இறைவனின் வாக்குத்தத்தம் ஆபிரகாமின் இயற்கையான சந்ததியை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை (ரோமர் 9:6-13)ரோமர் 9:6-13 நியாயப்பிரமாண மேதை பவுல் இந்த உண்மையை தெளிவுபடுத்த விரும்பினான். அது யூதர்களுக்கும், ரோமாபுரியில் இருந்து யூதக் கிறிஸ்தவர்களுக்கும் புதிதான ஒன்றாக இருந்தது. இறைவனின் வார்த்தை மட்டுமே சத்தியம். அதுவே இதை தெளிவுபடுத்தும் என்று அவன் எழுதினான் அது இந்த இரகசியத்திற்கு சரியான பதிலைக் கொடுக்கிறது. அந்த பதில் இரண்டு தன்மைகளை உடையது. முதலாவது: ஆபிரகாமின் எல்லாப் பிள்ளைகளும் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகள் அல்ல. கிறிஸ்துவின் மூதாதையரில் ஒருவனாக இருக்கும்படி இறைவன் இஸ்மவேலைத் தெரிந்துகொள்ளவில்லை. இஸ்மவேல் மற்றும் அவனுடைய சந்ததியாக தெரிந்துகொள்ளப்பட்ட யாக்கோபின் பிள்ளைகளுக்கு வெளியே இருக்கிறார்கள். இதன் மூலம் மனிதனின் இயற்கையான சந்ததிப் பிறப்பு அவனது ஆவிக்குரிய எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லை என்று நாம் கற்றுக்கொள்கிறோம். கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொருவனும் உண்மைக் கிறிஸ்தவனாக உடனடியாக மாறுவது கிடையாது. அவன் இறைவனிடம் தனிப்பட்டவிதத்தில் திரும்ப வேண்டும். இறைவனுக்கு பிள்ளைகள் உண்டு. ஆனால் பேரப்பிள்ளைகள் கிடையாது. இந்த உண்மை தெரிந்துகொள்ளப்பட்ட யூதர்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் அல்ல என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகிறது. கிறிஸ்துவின் நற்செய்திக்கு தங்களை மனப்பூர்வமாக திறந்து கொடுப்போர் மட்டுமே அவரின் பிள்ளைகள். ஆபிரகாமின் புத்திர சுவிகாரம் என்ற உரிமை அவர்கள் மீது இருந்தது. ஆனால் தனிப்பட்டவர்களின் சித்தத்தை சார்ந்தே அது பலனளிப்பதாக இருக்கிறது. இரண்டாவது: நாம் வேதாகமத்தில் இவ்விதம் வாசிக்கிறோம். அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். (ஆதி 25:23) இருவருமே ஒரே தகப்பனின் குமாரர்கள். ஆனால் ஒவ்வொருவருடைய செல்கள் மற்றும் ஜீன்கள் வித்தியாசமாய் வளர்ந்து வருவதை இறைவன் முன்னறிந்திருந்தார். இறைவன் இளையவனாகிய யாக்கோபைத் தெரிந்துகொண்டார். மூத்தவனாகிய ஏசாவை வெறுத்தார். மேலும் யாக்கோபு ஏசாவை விட ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும் இல்லை. ஏசாவை விட மனந்திரும்புவதற்கான வாய்ப்புகளில் அவன் மகிழ்ந்தான். அவன் உண்மையாக மனந்திரும்பினான். ஏசாவில் அப்படிப்பட்ட குணாதிசயம் இருந்ததாக வேதம் குறிப்பிடவில்லை. அவருடைய முன்னறிவு என்பது அவருடைய சுயசித்தம் மற்றும் அவருடைய சர்வஞானத்தை சார்ந்தது என்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிப்படுத்துகிறது. அவனைப் புறக்கணித்ததற்காக ஒருவரும் இறைவனை குற்றம் சாட்ட இயலாது. நம்முடைய இரகசியங்கள் அல்லது நமது சரீரத்தில் உள்ள காரியங்களைக் கூட நாம் அறியவில்லை. இறைவன் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், அவருடைய முடிவில் அப்பழுக்கற்றவர். இறைவனின் தெரிந்தெடுப்பு என்பது மனிதனின் தோற்றம் அல்லது செயல்களை சார்ந்தது அல்ல, அது படைத்தவரின் தீர்மானம் என்று சில இறையியல் வல்லுநர்கள் கண்டார்கள். இறைவனின் நோக்கங்கள் மற்றும் திட்டங்களை மனிதன் உணர்ந்து கொள்வதில்லை. எல்லோரும் இந்த கண்ணோட்டத்தை ஒத்துக்கொள்கிறதில்லை. பிதாவாகிய நம்முடைய இறைவன் பரிசுத்தமானவர் மட்டுமல்ல. அவர் அன்புள்ளவர், மனதுருக்கம் உள்ளவர். இயேசு தமது ஊழியத்தின் போது இந்த வார்த்தைகளைக் கூறினார். (யோவான் 10:27,28). எல்லோரும் அவருடைய சத்தத்தைக் கேட்கிறதில்லை. அவருடைய சத்தத்தைக் கேட்கிற எல்லோரும் அவருக்கு பிரதியுத்தரம் தருவதில்லை அல்லது அவருடைய கட்டளைகளின் படி நடப்பதில்லை. நாம் நற்செய்தியைக் கேட்டும் அதை புரிந்துகொள்ளாத ஒரு சமூகம், ஒரு தேசம், ஒரு குடும்ப மக்களைக் காண்கிறோம். ஆனால் மற்றவர்கள் மகிழ்ச்சி மற்றும் சமாதானத்தினால் நிரப்பப்படுகிறார்கள். விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் முற்பிதாக்களாக ஈசாக்கு, யாக்கோபு, இருக்கும்படி நீர் தெரிந்து கொண்டதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் பரிசுத்தராக இருந்ததில்லை. எங்களுக்கு நேரிடுகிற துன்பங்கள், எங்களுக்குள் உள்ள தீமைகளை நாங்கள் மேற்கொள்ளும்படி எங்கள் விசுவாசத்தை தயவாய் பெலப்படுத்தும். நாங்கள் மற்றவர்களைவிட மேலானவர்களாக பெருமை பாராட்டாதபடி தாழ்மை மற்றும் சுய மறுப்புக்கு நேராக எங்களை நடத்தும். கேள்விகள்:
|