Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba
ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)
8. நிரூபத்தின் முடிவில் பவுலின் ஆசீர்வாதம் (ரோமர் 16:25-27)ரோமர் 16:25-27 நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஆராதித்து, ரோமில் உள்ள சபைக்கு எழுதின இந்த நிரூபத்தை பவுல் முடிக்கிறான். அவரே பக்திவிருத்திக்கான வல்லமையை, நித்திய வல்லமையைத் தருபவர். தமது ஆவியின் வல்லமையினால் சபைகளை உருவாக்குகிறார். அவைகளை பாதுகாக்கிறார். பவுல் ஆரம்பத்தில் குறிப்பிட்ட குறிப்புடன் (ரோமர் 1:16) இந்த நிரூபத்தை முடிக்கிறான். பாவங்களில் மரித்தோருக்கு வாழ்வு அளிப்பது பவுலின் நற்செய்தியில் உணரப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என்ற நான்கு மட்டும் நற்செய்தி நூல்கள் அல்ல. பவுல் மூலமாக பிரசங்கிக்கப்பட்ட இயேசுவின் இரட்சிப்பைக் குறித்து பேசும் ஒவ்வொரு செய்தியும் நற்செய்தி தான். ஆண்டவராகிய இயேசு தமஸ்குவிற்கு அருகில் தனக்கு தரிசனமானதையும், சிலுவையில் அறையப்பட்டவரைக் கண்டதையும், அவரே உண்மையான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்து என்பதையும் வெளிப்படுத்தினான். இந்த நிரூபத்தை எழுதுவதற்கு அதுவே முதன்மையான நோக்கமாக இருந்தது. அக்காலம் வரை இரகசியமாய் வைக்கப்பட்டிருந்ததை, கேட்க விரும்பும் ஒவ்வொருவனுக்கும் பவுல் வெளிப்படுத்தினான். இப்போது அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் அது முன்னுரைக்கப்பட்டது. நித்திய பரிசுத்த இறைவனால் அது கொடுக்கப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி அசுத்தமான மக்கள் மற்றும் தேசங்கள் அனைவரும் விசுவாசத்தின் கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த இரகசியத்தின் உள்ளடக்கம் ஆகும். ஆண்டவர் இலவச கிருபையினால் எல்லா மனிதர்களுக்கும் தமது மன்னிப்பை வழங்குகிறார். இயேசுவின் தியாக பலி மரணத்தினால் இது கிடைக்கிறது. இந்த அழைப்பை ஏற்று, இறைவனின் கிருபையை பெறுவோர் இரட்சிக்கப்படுகிறார்கள். கீழ்ப்படியாதவன் தன்னைத்தானே ஆக்கினைக்குட்படுத்துகிறான். தாம் ஒருவரே ஞானமுள்ள இறைவனை பவுல் ஆராதித்தான். அவருக்கே கனமும், மகிமையும் உண்டாவதாக என்று நன்றியுடனும், தாழ்மையுடனும் சாட்சியிட்டான். ஏனெனில் இயேசு தமது பணி, மரணம், உயிர்த்தெழுதல் மூலம், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்துடன் என்றென்றும் பிதாவுடன் ஆளுகை செய்கிறார். பவுல் கடைசியாக குறிப்பிடும் “ஆமென்” என்ற வார்த்தை, இது நிச்சயமான உண்மை, நிச்சயமாக நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது. விண்ணப்பம்: பிதாவே, உமது குமாரன் இயேசுவில் நீர் பவுலைத் தெரிந்துகொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். புறவினத்து மக்கள் மத்தியில் சபைகளை உருவாக்கவும், உமது பணிக்காக பாடுப்பட்டு, மரிக்கவும் அவனை அழைத்தீர். நாங்கள் சுயநலமாய் இராதபடி உதவும். சத்தியத்தை வாஞ்சிக்கும் அனைவருக்கும் முழுமையான இரட்சிப்பு கிடைக்க, உமது பரிசுத்த ஆவியினால் எங்களை வழிநடத்தும். ஆமென். கேள்வி:
வினா - 4அருமையான வாசகரே,
ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து பகுதிகளையும் நீங்கள் கற்று முடிக்கும்போது கிறிஸ்துவுக்காக நீங்கள் செய்யும் பணிகளில் உங்களை உற்சாகப்படுத்தும்படி, நாங்கள் ஒரு சான்றிதழை அனுப்புவோம். நீங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அடையும்படி பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து வினாப்பகுதிகளுக்கும் பதில் அனுப்பும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கிறோம். எங்களது முகவரி. Waters of Life Internet: www.waters-of-life.net |