Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Romans - 082 (Paul’s Doxology)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

8. நிரூபத்தின் முடிவில் பவுலின் ஆசீர்வாதம் (ரோமர் 16:25-27)


ரோமர் 16:25-27
25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, 26 இயேசு கிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், 27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய இறைவனை ஆராதித்து, ரோமில் உள்ள சபைக்கு எழுதின இந்த நிரூபத்தை பவுல் முடிக்கிறான். அவரே பக்திவிருத்திக்கான வல்லமையை, நித்திய வல்லமையைத் தருபவர். தமது ஆவியின் வல்லமையினால் சபைகளை உருவாக்குகிறார். அவைகளை பாதுகாக்கிறார்.

பவுல் ஆரம்பத்தில் குறிப்பிட்ட குறிப்புடன் (ரோமர் 1:16) இந்த நிரூபத்தை முடிக்கிறான். பாவங்களில் மரித்தோருக்கு வாழ்வு அளிப்பது பவுலின் நற்செய்தியில் உணரப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்றும் யோவான் என்ற நான்கு மட்டும் நற்செய்தி நூல்கள் அல்ல. பவுல் மூலமாக பிரசங்கிக்கப்பட்ட இயேசுவின் இரட்சிப்பைக் குறித்து பேசும் ஒவ்வொரு செய்தியும் நற்செய்தி தான். ஆண்டவராகிய இயேசு தமஸ்குவிற்கு அருகில் தனக்கு தரிசனமானதையும், சிலுவையில் அறையப்பட்டவரைக் கண்டதையும், அவரே உண்மையான, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்து என்பதையும் வெளிப்படுத்தினான். இந்த நிரூபத்தை எழுதுவதற்கு அதுவே முதன்மையான நோக்கமாக இருந்தது. அக்காலம் வரை இரகசியமாய் வைக்கப்பட்டிருந்ததை, கேட்க விரும்பும் ஒவ்வொருவனுக்கும் பவுல் வெளிப்படுத்தினான். இப்போது அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் அது முன்னுரைக்கப்பட்டது. நித்திய பரிசுத்த இறைவனால் அது கொடுக்கப்படுகிறது.

புதிய ஏற்பாட்டின்படி அசுத்தமான மக்கள் மற்றும் தேசங்கள் அனைவரும் விசுவாசத்தின் கீழ்ப்படிதலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இந்த இரகசியத்தின் உள்ளடக்கம் ஆகும். ஆண்டவர் இலவச கிருபையினால் எல்லா மனிதர்களுக்கும் தமது மன்னிப்பை வழங்குகிறார். இயேசுவின் தியாக பலி மரணத்தினால் இது கிடைக்கிறது. இந்த அழைப்பை ஏற்று, இறைவனின் கிருபையை பெறுவோர் இரட்சிக்கப்படுகிறார்கள். கீழ்ப்படியாதவன் தன்னைத்தானே ஆக்கினைக்குட்படுத்துகிறான்.

தாம் ஒருவரே ஞானமுள்ள இறைவனை பவுல் ஆராதித்தான். அவருக்கே கனமும், மகிமையும் உண்டாவதாக என்று நன்றியுடனும், தாழ்மையுடனும் சாட்சியிட்டான். ஏனெனில் இயேசு தமது பணி, மரணம், உயிர்த்தெழுதல் மூலம், பரிசுத்த ஆவியின் ஐக்கியத்துடன் என்றென்றும் பிதாவுடன் ஆளுகை செய்கிறார். பவுல் கடைசியாக குறிப்பிடும் “ஆமென்” என்ற வார்த்தை, இது நிச்சயமான உண்மை, நிச்சயமாக நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.

விண்ணப்பம்: பிதாவே, உமது குமாரன் இயேசுவில் நீர் பவுலைத் தெரிந்துகொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். புறவினத்து மக்கள் மத்தியில் சபைகளை உருவாக்கவும், உமது பணிக்காக பாடுப்பட்டு, மரிக்கவும் அவனை அழைத்தீர். நாங்கள் சுயநலமாய் இராதபடி உதவும். சத்தியத்தை வாஞ்சிக்கும் அனைவருக்கும் முழுமையான இரட்சிப்பு கிடைக்க, உமது பரிசுத்த ஆவியினால் எங்களை வழிநடத்தும். ஆமென்.

கேள்வி:

  1. புறவினத்து அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இறைவன் வெளிப்படுத்திய இரகசியம் என்ன?

வினா - 4

அருமையான வாசகரே,
இந்த புத்தகத்தில் உள்ள பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் எங்கள் வியாக்கியானங்களை நீங்கள் வாசித்துள்ளீர்கள். இப்போது உங்களால் கீழே உள்ள கேள்விகளுக்கு விடை எழுத முடியும். நீங்கள் 90 கேள்விகளுக்கு பதில் எழுதினால் உங்கள் பக்திவிருத்திக்காக நாங்கள் இதன் அடுத்த பகுதியை அனுப்புவோம். உங்கள் முழுப்பெயர் மற்றும் முகவரியை தெளிவாக விடைத்தாளில் குறிப்பிட மறவ வேண்டாம்.

  1. உனது இரட்சகர் இயேசுவிற்கு நீ உன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறாயா? அல்லது நீ இன்னும் உனது சுயநலத்தில் உனக்காக வாழ்கின்றாயா?
  2. இயேசுவைப் பின்பற்றுவோர் பரிசுத்தமான வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் என்ன?
  3. மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் இன்று மிகவும் தேவையான பணி என்று எதை நீ கருதுகிறாய்?
  4. உங்கள் ஐக்கியத்தில் மிகவும் முக்கியமானதும் தேவையுள்ளதுமான இறை அன்பு எப்படிப்பட்ட அன்பு ஆகும்?
  5. பகையுணர்வு மற்றும் பழிவாங்குதல் இன்றி எவ்விதம் நம்முடைய பகைவர்களை நாம் மன்னிக்கிறோம்?
  6. ஒவ்வொரு அரசின் அதிகாரத்தின் எல்லைகள் என்ன? ஏன் மனிதனுக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவது அவசியம்?
  7. “நீ உன்னை நேசிப்பது போல பிறரை நேசிப்பாயாக” என்ற கட்டளையை பவுல் எவ்விதம் நடைமுறையில் விளக்குகிறான்?
  8. கிறிஸ்துவின் உடனடி வருகையைக் குறித்த அறிவு எந்த குணங்களை நம்மில் கொண்டு வருகிறது?
  9. வாழ்வில் உள்ள இரண்டாம் தரமான காரியங்களைக் குறித்து கிறிஸ்துவை பின்பற்றுவோர் கொண்டுள்ள வேறுப்பட்ட கருத்துக்களைக் குறித்து நாம் எப்படி எண்ண வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்?
  10. இறை அரசு என்பது புசிப்பும், குடிப்பும் அல்ல, அது ஆவியினால் உண்டாகும் நீதியும், சமாதானமும், மகிழ்ச்சியுமாய் இருக்கிறது. (ரோமர் 14:17) என்ற வசனத்தின் அர்த்தம் என்ன?
  11. ரோமர் 15:5-6 ன் பொருள் என்ன?
  12. ரோம சபையில் காணப்பட்ட முக்கியமான வேறுபாடுகளை பவுல் எவ்விதம் மேற்கொள்ளும்படி செயல்பட்டான்?
  13. பவுல் தனது நிரூபத்தில் ஒரு பகுதி மட்டும் தான் என்று கருதி எதை எழுதினான்?
  14. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியங்களில் இருந்த இரகசியம் என்ன?
  15. தனக்கு பிரச்சினைகளும், ஆபத்துகளும் சூழ்ந்திருப்பதை அறிந்திருந்தும், ஏன் ஸ்பானியா தேசத்திற்கு பயணம் செய்யும் முன்பு பவுல் எருசலேமிற்கு போக விரும்பினான்?
  16. ரோமில் உள்ள சபை அங்கத்தினர்களின் பெயர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
  17. இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் பெயர்களில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?
  18. சாத்தானின் சோதனைகளுடைய நோக்கம் என்ன?
  19. பவுல் யாரிடம் இந்த நிரூபத்தை எழுதும்படி கேட்டுக்கொண்டான்?
  20. புறவினத்து அப்போஸ்தலனாகிய பவுலுக்கு இறைவன் வெளிப்படுத்திய இரகசியம் என்ன?

ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து பகுதிகளையும் நீங்கள் கற்று முடிக்கும்போது கிறிஸ்துவுக்காக நீங்கள் செய்யும் பணிகளில் உங்களை உற்சாகப்படுத்தும்படி, நாங்கள் ஒரு சான்றிதழை அனுப்புவோம்.

நீங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை அடையும்படி பவுல் ரோமருக்கு எழுதின நிரூபத்தின் அனைத்து வினாப்பகுதிகளுக்கும் பதில் அனுப்பும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கிறோம். எங்களது முகவரி.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 08:17 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)