Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Romans - 075 (Paul’s Worthiness to write this Epistle)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek? -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish? -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி -3 துணைப்பகுதி - ரோம சபையில் உள்ள தலைவர்களுக்கு பவுலின் குணாதிசயங்களைக் குறித்த சிறப்பு அறிக்கைகள் (ரோமர்15:14 – 16:27)

1. இந்த நிரூபத்தை எழுதிய பவுலின் தகுதித்தன்மை (ரோமர் 15:14-16)


ரோமர் 15:14-16
14 என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். 15 அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, 16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன்.

இறையியல் கொள்கைகள் மற்றும் நடைமுறை கருத்துகளை பவுல் பகிர்ந்து கொண்ட பின்பு, இந்த நிரூபத்தை எழுதுவதற்கான தனது திட்டம் மற்றும் தகுதித்தன்மையை தொகுத்துக் கூறினான். வாசகர்கள் விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களால் குழப்பம் அடையக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்தான்.

ரோம் விசுவாசிகள் ஒரு கொள்கை அல்லது தத்துவத்தை பின்பற்றவில்லை என்பதை பவுல் உறுதிப்படுத்தினான். அவர்களுக்குள் நற்செய்தியின் கனிகள் உணரப்பட வேண்டும். ஆவியினாலும் சத்தியத்தினாலும் இறைவனின் பிள்ளைகளாக மாறியுள்ள இறை குடும்பத்தாரை தனது சொந்த சகோதரர்கள் என்று அழைத்தான். அவர்கள் இறைவனால் அருளப்பட்ட நன்மையைப் பெற்றதினால் இந்த சிலாக்கியத்தை பெற்றிருந்தார்கள். அவர்கள் ஆண்டவரைக் குறித்து மட்டும் பேசாமல், அவருடன் உள்ள உறவைக் குறித்து பேசினார்கள். அவர்கள் அன்பு, தாழ்மை மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்கள். சபைக்கு வெளியில் உள்ளோர் அவர்களிடம் காணப்பட்ட நற்பண்புகளைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

குமாரன் மீது வைக்கும் விசுவாசத்தினால் பிதாவாகிய இறைவனை அறிகிற அறிவினால் இறைவனின் குணங்களும், ஆவிக்குரிய சிலாக்கியங்களும் ஏற்படுவதை பவுல் உறுதிப்படுத்தினான். அவர்கள் எல்லா அறிவினாலும் நிறைந்திருந்ததாக சற்று மிகைப்படுத்தி கூறினான். பரிசுத்த இறைவன் பிதா என்பதையும், இயேசு கிறிஸ்து அவருடைய நேசகுமாரன் என்பதையும் அறிந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையை அவர்கள் அனுபவித்திருந்தார்கள். அவர்கள் யூதர்கள் மற்றும் புறவினத்தாரை போல இல்லாமல் இன்னொரு நிலையில் வாழ்ந்தார்கள்.

இக்காரியம் ஒருவரையொருவர் சீர் பொருந்தப்பண்ணும்படியான பொறுப்பை அவர்களுக்கு வழங்கியது பெருமை, அகங்காரம் இல்லாமல் கிறிஸ்துவின் தாழ்மையுடன், சத்திய ஆவியின் வழிநடத்துதலுடன் நடக்கிறார்கள். சத்தியம் பகிரப்படும்போது உண்மை அன்பு உணரப்படுகிறது. பயிற்சி அறிவு, மற்றும் கல்வி, சரியாக பேசுவதற்கு தேவைப்படுகிறது. பவுல் கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் வாழ்வு முறை கோட்பாடுகளில் அவனுக்கிருந்த ஆவிக்குரிய முதிர்ச்சியுடன் இந்த நிரூபத்தை எழுதினான். இந்த நிரூபம் ஒரு சிறு பகுதி தான் என்று கூறுகிறான்.

பகுதி 1-ல் இறை நீதியை விளக்குகிறான். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் பாவிகளை ஆவியினாலும், நித்திய அன்பினாலும் நிரப்புகிறார் என்று பவுல் விளக்குகிறான்.

பகுதி 2-ல் தெரிந்துக்கொள்ளப்பட்ட மக்களின் இருதயக் கடினத்தின் மத்தியிலும் இறைவன் நீதியில் நிலைத்திருந்து, அவருடைய கிருபையின் முழுமையில் முழு உலகமும் பங்குகொள்ளச் செய்து, விசுவாசப் பிதாக்களுக்கு அருளப்பட்ட வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதை அவன் வலியுறுத்துகிறான்.

பகுதி 3-ல் கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் வாழ்வில் இறைநீதி நடைமுறையில் உணரப்படுவதை அவன் விளக்குகிறான். ஒருவருக்கொருவர் வித்தியாசம் இருந்தாலும் குறை கூறாமல், ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதை விளக்குகிறான்.

பவுல் தனது நிரூபத்தில் கீழ்க்காணும் கொள்கைகளைக் குறிப்பிடுகிறான். “விசுவாசத்தின் ஆதாரங்கள்” “முன்குறித்தல் பற்றிய கொள்கை” “கிறிஸ்தவ நடக்கை பற்றிய விதிகள்”. விசுவாசிகள் மீது அருளப்பட்ட இறைவனின் உலகளாவிய முழுமையையும், இறைவனின் ஆவியின் வரங்களையும் சபைக்கு அவன் நினைவுபடுத்தினான். கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கைகளை அவன் வலியுறுத்த எண்ணினான். ஏனெனில் அவன் சபையைத் துன்பப்படுத்தின போதிலும் தனது வாழ்வில் இறைவனின் மன்னிப்பை அனுபவித்திருந்தான். மேலும் பரிசுத்தமானவர் கிறிஸ்துவின் அடிமையாக அவன் இருக்கும்படி அழைத்திருந்தார். புறவினத்தாருக்கு நற்செய்தியை அறிவிக்க கட்டளை பெற்றிருந்தான். இப்பணி வன்முறை, பட்டயம், இரத்தம் சிந்துதல், அசாதாரண திறமை இவற்றால் நடைபெறவில்லை. மாறாக விண்ணப்பம், விசுவாசம், இறைவனின் சிங்காசனத்திற்கு முன்பு நன்றி செலுத்துதல் இவைகளினால் நடைபெற்றது. இறைவனிடம் பெருந்திரளான யூதரல்லாத மக்களை ஒப்புரவாக்கும் பணி செய்த ஆவிக்குரிய ஆசாரியனாக பவுல் மாறினான்.

அறியாமையில் இருந்த மக்களை ஆயத்தப்படுத்தும்படி பவுலின் வார்த்தைகள் காணப்பட்டது. விசுவாசக் கீழ்ப்படிதல் மூலம் கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்தி அவர்களை அர்ப்பணிக்க அழைத்தான். அவர்கள் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரத்தில் அங்கங்களாக இணைகிறார்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவனது பணி நடைபெற்றது. அவன் கிறிஸ்துவின் சித்தப்படி அப்போஸ்தலப் பணியை நிறைவேற்றினான். அவன் ஆவியின் நடத்துதலுக்கு கீழ்ப்படிந்திருந்தான். எனவே இறைவன் அவனது பணியில் மகிழ்ந்திருந்தார்.

விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். கீழ்ப்படியாத மத போதகனாய் இருந்த சவுலை தமஸ்குவிற்கு அருகில் கிறிஸ்துவுக்குள் தாழ்மையுள்ளவனாக நீர் மாற்றினீர். நீர் அவனை இரட்சித்தீர், அழைத்தீர், பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தினீர். மத்தியதரைக்கடலைச் சூழ உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் கிறிஸ்துவின் இரட்சிப்பை அறிவிக்க செய்தீர். ரோமாபுரி சபைக்கு எழுதப்பட்ட இந்த புகழ்வாய்ந்த நிரூபத்தற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் உலகில் உள்ள எல்லா சபை மக்களுக்கும் அவர்களது விசுவாசக் கொள்கைகளை இது நினைவுப்படுத்துகிறது.

கேள்வி:

  1. பவுல் தனது நிரூபத்தில் ஒரு பகுதி மட்டும் தான் என்று கருதி எதை எழுதினான்?

www.Waters-of-Life.net

Page last modified on August 11, 2021, at 07:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)