Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 110 (Pilate awed by Christ; Pilate's unjust sentence)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)

ஈ) கிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தால் பிலாத்துவிடம் ஏற்பட்ட பயம் (யோவான் 19:6-7)


யோவான் 19:8-11
8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,9 மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

இயேசுவின் ஆள்தன்மையைக் குறித்து நிச்சயமற்றவனாக பிலாத்து இருந்தான். அவரது நேர்மை, தூய்மை, மற்றும் அன்பு ஆளுநரிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது. இயேசு ராஜா என்று போற்றப்பட வேண்டியவர் மட்டுமல்ல, அவர் இறைவனின் குமாரன் என பிலாத்து அறிந்தான். தெய்வங்கள் மனு உருவம் எடுத்து மக்கள் மத்தியில் வரும் என்று ரோமர்கள் மற்றும் கிரேக்கர்கள் நம்பியிருந்தார்கள். அவன் கருத்துடன் சிந்தித்தான், “அப்படிப்பட்ட மனு உருவில் வெளிப்பட்ட இறைவனா இவர்?” ஆகவே அவன் கேட்டான். “நீ எங்கேயிருந்து வருகிறாய்?”.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் தருணமாக இச் சந்தர்ப்பத்தை இயேசு பயன்படுத்தவில்லை. மாறாக அவர் அமைதியுடன் காணப்பட்டார். இந்த அமைதி ஏதோ ஒன்றை உணர்த்தியது. தர்க்க சாஸ்திரங்கள், வெற்று ஆர்வங்களின் கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிக்கிறதில்லை. ஆனால் அவரில் நம்பிக்கை வைக்கும் விசுவாசிக்கு அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். அவரைக் குறித்த கிரேக்க, ரோம அனுமானங்களுக்கு அப்பாற்பட்டவராக அவர் காணப்பட்டார். அவரைப் போல ஒருவரும் இல்லை. இந்த அமைதியின் தருணத்தில் பிலாத்து கோபத்துடன் கேட்டான், “நீ என்னுடன் பேசுகிறது இல்லையா? உன்னைக் கொல்லவும், விடுவிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு. நீ என்னுடைய அதிகாரத்தில் இருக்கிறாய். உனது எதிரிகள் உன்னைச் சிலுவையிலறைய கூச்சலிடுகிறார்கள். நான் ஒருவன் மாத்திரமே உன்னைக் காப்பற்ற முடியும், அல்லது உன்னை சிலுவையில் தொங்க வைக்க முடியும்.”

இயேசு இவ்விதம் பதிலளித்திருப்பார். “உண்மைதான் நீர் அதிகாரம் உடையவர், என் பிதா உமக்கு அந்த அதிகாரத்தை தந்துள்ளார். உன்னைப் பொறுத்தமட்டில் நீ முக்கியமற்றவன். நீதியற்ற தீர்ப்பின் மூலம் உனது கையாலாகாத தன்மை விரைவில் வெளிப்படும். பரலோகத்தில் இருக்கும் என் பிதா சர்வ வல்லமை உள்ளவர். நானும் அப்படித் தான்: அவருடைய அனுமதி இல்லாமல் இந்த பூமியில் எந்த அதிகாரமும் இல்லை. இறைவனின் அனுமதியினால் வல்லமை பெற்றவன் தான் இந்த பிலாத்து. இப்போது அதன் விளைவாக, பிலாத்து மூலம் அழிவு ஏற்பட்டது. இறைவன் வரலாற்றை கட்டுப்படுத்துகிறார். மக்கள் தங்கள் செயல்களுக்கான பொறுப்பில் ஒரு பங்கை நிறைவேற்ற பொறுப்புள்ளவர்கள் ஆவார்கள்.

இயேசு பிலாத்துவிடம் கூறினார் “நீ பெரிய பாவம் செய்திருக்கிறாய். ஆனால் அக் குற்றச் செயலில் நீ தனியாக இருக்கவில்லை, எல்லாரும் பாவங்களின் வலையில் பிடிக்கப்பட்டருக்கிறீர்கள். நீ என்னை சிலுவையில் அறைய விரும்பவில்லை. ஆனால் உனது கோழைத்தனமும், காய்பாவைக் குறித்த பயமும் என்னை நியாயம் தீர்க்கும்படி செய்தது. பொறாமை மற்றும் வெறுப்பினால் பிரதான ஆசாரியன் இயேசுவை சிலுவையில் அறைய விரும்பியதால் மிகப் பெரிய பாவத்தின் குற்ற உணர்வுடன் இருந்தான். அவன் உயர்ந்த பதவியை வகித்ததால், எதிரிகள் மீது இரக்கத்தைக் காண்பித்து, இறைவனுடன் அவர்களை ஒப்புரவாக்குவது அவசியமாய் இருந்தது. அவனோ தீய ஆவிகளுக்குக் கட்டுப்பட்டிருந்தான். இயேசுவைக் கொலை செய்யுமளவிற்கு அவரை வெறுத்தான்


உ)இயேசுவின் மீதான பிலாத்துவின் நேர்மையற்ற தீர்ப்பு (யோவான் 19:12-16)


யோவான் 19:12
12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

பிலாத்து இயேசுவை விடுவிக்க விரும்பினான். ஏனெனில் சிறைக்கைதியானவர் அவனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டிருந்தார். கிறிஸ்துவின் மகத்துவம் மற்றும் இறைப்பற்று அந்த அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. இயேசு பிலாத்துவை பயமுறுத்தவில்லை. அவனை மென்மையாகக் கடிந்து கொண்டார். பிலாத்துவின் பாவத்திற்கும், காய்பாவின் குற்றச்செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்தினார். அவரை அடைய விரும்புபவன் மற்றும் இறைவனின் உண்மைகளுக்கு நேராக கவரப்படுபவனுக்கு இயேசு நியாயாதிபதியாக இருக்கிறார்.

யூத ஆசாரியர்கள் பிலாத்துவின் இருதயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தார்கள். அவர்கள் அரசியலுக்கு நேராக தங்கள் குற்றச்சாட்டைத் திசை திருப்பினார்கள். இயேசு இறைவனுக்கு சமமாய் தன்னை தன்னை உயர்த்தியது பற்றிய குற்றச்சாட்டு ரோம வழக்கு மன்றத்தில் பயனற்றதாய் போய்விட்டது. ஆகவே பிலாத்து இயேசுவுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கவில்லையென்றால், ஆளுநர் சீஷருக்கு (இராயனுக்கு) விரோதி என்று பயமுறுத்தினார்கள்.

“சீஷருக்கு சிநேகிதன்” என்பது இராஜாவுக்கு நெருக்கமானவர் என்று பொருள்படும். அவனது தூதுவர்களுக்கு மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது. பிலாத்துவின் மனைவி ஒரு வேளை நெருங்கிய உறவினர்களில் ஒருத்தியாக இருக்கலாம். திபேரியு சீஷர் ஒருவனையும் நம்பாதவர் மற்றும் எதிலும் குறை காணும் குணத்தை உடையவர். தன்னைப் பின்பற்றுபர்களின் உண்மையை சந்தேகிக்கத்தக்கதாய் தனது மனதை திருப்பியவர் ஆவார். எப்போதுமே மற்றவர்கள் மூலம் ஏற்படும் கலகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.சீஷரின் சிநேகிதனை குற்றம் சாட்டுபவர் தண்டனையை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவர் தன் மீது அழிவைக் கொண்டுவருகிறார். அவர் நாடு கடத்தப்படுகிறார்.

யூதத் தலைவர்கள் தங்கள் கலகத்தினால் வெறுப்புற்று, “யூதர்களின் ராஜா”வை பிலாத்து விடுவித்தார் என்று ரோமிற்கு எழுதினார்களா? அப்படியென்றால் அவன் சீஷருக்கு விரோதமாக எதிரிகளை உருவாக்குகிறான் என்று அர்த்தம். அதைத் தொடர்ந்து பிலாத்துவின் பதவி ஆட்டம் காணும். இயேசுவின் பக்கம் உண்மை இருந்தாலும், அவன் தனது பதவியை இயேசுவிற்காக விட்டுக் கொடுக்க விருப்பமற்று இருந்தான். இந்த அச்சுறுத்தல் அவனது எதிர்த்து நிற்கும் தன்மையைக் குலைத்தது. அவன் இயேசுவின் மீது அதிகாரப்பூர்வ தீர்ப்பை வழங்க ஆயத்தப்பட்டான். கிறிஸ்துவின் இரத்தப்பழிக்கு தான் நீங்கலானவன் என்பதற்கான சடங்குகளை செய்யத் திரும்பினான். அவன் தீர்ப்பை வழங்கும் படி வந்தான். அவன் நீதியற்ற தீர்ப்பை வழங்கப்போவதை(தனது இருதயத்தின் ஆழத்தில்) அறிந்திருந்தான.

யோவான் 19:13-16அ
13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.15 அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.16 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்.

யூதர்களின் மேசியாவைக் குறித்த நம்பிக்கையை இகழ்பவனாக பிலாத்து இருந்தான். ரோமர்களிடம் அவர்கள் அடைந்த வீழ்ச்சியைப் பற்றிக் கூறி பரியாசம் செய்தான். “தன்னை ராஜா என்று கூறும் இயேசுவை நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். உங்களது உறுதியற்ற அரசை அகற்றுங்கள், நீங்களும் அவனைப் போலவே எதற்கும் பயனற்றவர்களாக உள்ளீர்கள்.

இந்த பரியாசத்தின் தன்மையை யூதர்கள் புரிந்துகொண்டார்கள். இயேசுவிற்கு விரோதமாக மக்களின் வெறுப்புணர்வை தூண்டிவிட்டார்கள். அவர்கள் இணைந்து சத்தமிட்டார்கள், “இவனை அகற்றுங்கள், இவன் சபிக்கப்பட்டவன், இவனை சிலுவையில் அறையுங்கள்.

சகோதரரே, இவர்கள் தங்கள் சட்டத்தின்படி பக்தியுடன் கூச்சலிட்டவர்கள். இவர்கள் குருடாக்கப்பட்டவர்கள், இவர்கள் மனுவுருவில் வெளிப்பட்ட அன்பையும், தெய்வீக அருள் பொழிவையும் புரிந்து கொள்ளத் தவறியவர்கள். இயேசுவில் வெளிப்பட்ட இறைவனின் பரிசுத்தத்தையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை வெறுத்தார்கள், அவரை விட்டு விலக விரும்பினார்கள். மதவெறி அல்லது பேரார்வம் மக்களை இறைவன் பக்கம் ஈர்க்க முடியும். ஆனால் இயேசுவில் வெளிப்பட்ட அன்பு மாத்திரமே அவரது இரக்கம் மற்றும் தியாகப் பலியைப் புரிந்து கொள்ள உங்கள் கண்களை திறக்கும்.

கோபம் நிறைந்த யூதர்கள் மீது தனது பரியாசத்தை பிலாத்து வெளிப்படுத்தினான். மீண்டும் இயேசுவை “இராஜா” என்று அழைத்தான். எல்லா மக்களும் இயேசுவைக் கொல்லும்படி தீர்மானித்திருந்தார்கள். தனது குற்றப்படுத்தும் மனச்சாட்சியில் இருந்து தப்பிக்கும் வழியைக் காண பிலாத்து முயற்சித்தான். ஆனால் இயேசுவை சிலுவையில் அறையும் நோக்கத்தில் கூச்சலிட்ட கூட்டம் ஒரே நோக்கமாய் இருந்தார்கள். அந்த மக்களின் சத்தம் இறைவனின் சத்தமாய் இருக்கவில்லை. அவர்கள் தங்களுடைய நோக்கங்களில் தவறினார்கள். உலக எண்ணங்களால் நிறைந்திருந்தார்கள். இந்த தோல்விகளை சாத்தான் தனக்காக பயன்படுத்திக் கொண்டான்.

பிலாத்துவின் தொடர்ச்சியான பரியாசத்தால் ஆசாரியர்கள் கோபமுற்றார்கள். அவர்கள் ஆச்சரியமூட்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். “எங்களுக்கு இராயனைத் (சீஷர்) தவிர வேறு இராஜா இல்லை. இதுவும் ஒரு மாய்மால அறிக்கையாகக் காணப்பட்டது. ஆசாரியக் குடும்பம் மேசியாவைச் சார்ந்த இயக்கங்களைக் கண்டு பயப்பட்டது. மேலும் பொம்மை அரசராக விளங்கிய ஏரோதுவை பகைத்தது. அவர்கள் இராயனுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட, கிரேக்க கலாச்சாரத்தின் காவலனாக அவன் இருந்தான். அவர்கள் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் மற்றும் மேசியாவைக் குறித்த எல்லா எதிர்பார்ப்புகளுக்கு துரோகம் இழைத்தார்கள். இறைவனின் மக்கள் மீது பொய்களின் பிதா தாக்கத்தை ஏற்படுத்தினான். அந்த வழக்குமன்றத்தில், சத்தியத்திற்காக, இயேசு தனியாக நின்றார். இறைவனின் சத்தத்தை தனது மனதில் கேட்டு, தன்னுடைய நேர்மையில் உறுதியாக இருந்தார்.

தற்பெருமை, வன்மம் மற்றும் வஞ்சகத்தினால் உந்தப்பட்டு, பிலாத்து கடினமான தீர்ப்பை வழங்கினான். பிதாவின் வழிநடத்தலை சார்ந்து குமாரனாகிய இறைவன் அமைதி காத்தார். தனது குமாரனை சிலுவையிலறைய அவர் ஆளுநரை அனுமதித்திருந்தார். இந்த நீதியற்ற தீர்ப்பின் மூலம் இயேசு இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையே ஒப்புரவாக்குதலின் பணியை நிறைவேற்றி முடித்தார். பிசாசின் ஆவிகள் தாங்கள் வெற்றி பெற்றதாக கற்பனை பண்ணின. நரகத்தின் வல்லமைகள் வெளிப்பட்ட வஞ்சகம் நிறைந்த செயல்கள் வெளிப்பட்டாலும், அது நிறைவேற வேண்டிய இறைவனுடைய திட்டமாயிருந்தது.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மைப் பணிந்து வணங்குகிறோம். உலகப் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறைவனுடைய ஆட்டுக்குட்டியாக நீர் இருக்கிறீர். எங்களுக்கு இரக்கம், சத்தியம், உத்தமம் உள்ள இருதயத்தைத் தாரும். எங்கள் சுய லாபங்களுக்காக மற்றவர்களைப் பயன்படுத்தாதிருக்க எங்களுக்கு உதவும். வஞ்சகம் மற்றும் தீமையுடன் ஒத்துப் போவதற்குப் பதிலாக மரணத்தைத் தெரிந்தெடுக்க எங்களைப் பெலப்படுத்தும்.

கேள்வி:

  1. ஏன் இயேசுவின் மீதான தீர்ப்பை பிலாத்து வழங்கினான்.

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:16 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)