Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
Home -- Tamil -- John - 111 (Crucifixion and the grave clothes; Dividing the garments and casting the lots)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
4. சிலுவையும் இயேசுவின் மரணமும் (யோவான் 19:16b-42)
அ) சிலுவையிலறையப்படுதல்&அடக்கம்பண்ணப் பயன்படுத்திய துணிகள் (யோவான் 19:16ஆ-22)யோவான் 19:16ஆ-18 இரண்டு கள்வர்களை சிலுவையிலறைய போர்வீரர்களின் ஒரு குழு ஆயத்தமாய் புறப்பட்டது. அப்போது மூன்றாவது கைதியாக இயேசுவை பிலாத்து ஒப்புவித்தான். வீரர்கள் மூன்று பேர் மீதும் சிலுவையை சுமத்தினார்கள். ஒவ்வொருவரும் அந்த கொலைக் கருவியை சுமக்க வேண்டியதாய் இருந்தது. மூன்று பேரும் நகரவீதிகளில், மூச்சுதிணற அதை சுமந்து வடமேற்கு வாசலை அடைந்தார்கள். பின்பு கொல்கதா மலைக்கு வந்தார்கள். அது கபாலத்தைப் போல தோன்றிய கற்பாறையாய் இருந்தது. நகர சுற்றுச் சுவர்களை விட சற்று உயரமாய் காணப்பட்டது. நகரத்தில் வசிக்கும் மக்கள் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் குற்றவாளிகளை பார்க்கக் கூடியதாய் காணப்பட்டது. சிலுவையைப் பற்றிய விவரங்களை யோவான் விவரிக்கவில்லை. அவரது எழுதுகோல் திகில் நிறைந்த அக் காட்சியை எழுத மறுத்தது. தெய்வீக அன்பை மனிதர்கள் புறக்கணித்தார்கள். அவர்கள் மீது நரகத்தின் வெறுப்பு காணப்பட்டது. தங்கள் பாவங்களினால், ஆவியினால் பிறந்த அவரை அவர்கள் விலக்கினார்கள். அவர்களது பாவங்களுக்கான முழுமையான பலியாகிய கிறிஸ்துவை வேண்டாமென்று விலக்கினார்கள். இயேசு சபிக்கப்பட்ட சிலுவைமரத்தில் தங்க நிற ஒளிவட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. பொறுமை மற்றும் பரிசுத்த சுயமறுப்பின் மூலமாக தன்னுடைய தாழ்மையில் ஆழங்களில், அவர் தனது மகிமையை வெளிப்படுத்தினார். இரு கள்வர்கள் மத்தியில் இயேசு தொங்கியதின் மூலம், அவமதிக்கப்பட்டார். அவர்கள் சிலுவையில் தொங்கியவர்களை சபித்தார்கள். அந்தக் கடைசி தருணத்திலும் இரக்கம், பரிசுத்தம் நிறைந்த அவர் பாவிகளின் சிநேகிதனாக தன்னை அடையாளப்படுத்தினார். இதற்காகத் தான் குமாரனாகிய இறைவன் மனுஷகுமாரனாக பிறந்தார். இதன் மூலம் இறைவனின் மக்கள் நீதிமானாக்கப்பட்ட இறைவனின் மக்களாக மாறினார்கள். என் அளவுக்கு இயேசு இறங்கி வரவில்லை என்று எவரும் சொல்ல முடியாத அளவிற்கு, அவர் அவமதிப்பின் ஆழங்கள் வரை இறங்கினார். நீங்கள் எங்கேயிருந்தாலும், எப்படி வீழ்ச்சியடைந்திருந்தாலும், கிறிஸ்து உங்கள் குற்றத்தை மன்னிப்பார். உங்களைக் கழுவி முழுமையாக பரிசுத்தப்படுத்துவார். யோவான் 19:19-20 இயேசு தன்னை இராஜா என்று கூறியதால், அவரைப் பரியாசத்தின் அடையாளமாக இரு கள்வர்கள் மத்தியில் இயேசுவை தொங்க வைத்தார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தீர்ப்பளிக்க தன்னைத் தூண்டிய யூத ஆலோசனைச் சங்கத்தாரை பிலாத்து தொடர்ந்து பரியாசம் செய்தான். யூதர்கள் வைத்த குற்றச்சாட்டை தலைப்பாக மாற்றி சிலுவை மரத்தின் மீது பிலாத்து வைத்தான். யூதர்களை நியாயந்தீர்க்க சிலுவையின் மீது இருந்த இந்த அறிவிப்பை இறைவன் பயன்படுத்தினார். இயேசு மெய்யாகவே அவர்கள் இராஜாவாய் இருந்தார். நீதி, அன்பு, இரக்கம், தாழ்மையுடன் வெளிப்பட்ட உண்மையான இராஜாவாக இயேசு இருக்கிறார். அவர் பூமியில் பரலோகத்தை நிறுவினார். யூதர்கள் நரகத்தை தெரிவு செய்தார்கள். தங்கள் சமூகத்தை விட்டு தங்கள் தெய்வீக அரசரை புறக்கணித்தார்கள். அவர் இப்போது அனைத்து தேசங்களின் அரசராக இருக்கிறார். ஆனால் சிலுவையிலறையப்பட்ட அரசரை இன்று நாடுகள் ஏற்றுக் கொள்கிறதா? அல்லது கர்த்தரின் அன்பை மறுபடியும் புறக்கணிக்கிறதா?. யோவான் 19:21-22 பிலாத்துவின் பரியாசம் மற்றும் பயமுறுத்தல் இவைகளின் அர்த்தத்தை பிரதான ஆசாரியர்கள் புரிந்து கொண்டார்கள். அவர்கள் தங்கள் அரசரைப் புறக்கணித்திருந்தார்கள். பிலாத்து கூறியதின் அர்த்தத்தை கண்டார்கள். அவர்கள் இன்னும் அதிகமாக சிலுவையிலறையப்பட்டவரை வெறுத்தார்கள். அந்த அறிவிப்பு இராயனின் விருப்பத்திற்கு இசைந்ததாக இருக்கும் என்று பிலாத்து உணர்ந்தான். ஆகவே மூன்று மொழிகளில் அதை எழுதினான். ரோமை எதிர்க்கும் கலகக்காரன் எவனும் இதைப் போன்ற முடிவை அடைவான் என்று படித்தவர்கள், தேசமக்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் அது உணர்த்தியது. கி.பி 70-ல் யூதர்கள் ரோமிற்கு எதிராக கலகம் செய்தார்கள். அப்போது எருசலேமின் சுற்றுச் சுவரைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் சிலுவையில் தொங்கவிடப்பட்டார்கள்.
ஆ) வஸ்திரங்களைப் பங்கிடுதல் மற்றும் சீட்டுப்போடுதல் (யோவான் 19:23-24)யோவான் 19:23-24 அவருடைய வஸ்திரத்தைப் பங்கிடுவதற்கு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த நான்கு வீரர்களும் உரிமை பெற்றிருந்தனர். இந்த மட்டுப்படுத்தும் செயலை இவர்களுடன் இணைந்து செய்ய நூற்றுக்கு அதிபதி தன் நிலையில் இருந்து கீழிறங்கி வரவில்லை. எனவே இயேசுவிடம் இருந்த கடைசி பொருளான ஆடையையும் அந்த நான்கு பேர் உரிந்து கொண்டார்கள். பொதுவாக சிலுவையிலறையப்படுபவர்கள் நிர்வாண நிலையில் இருக்கும்படி ஆடைகளை உரிந்துவிடுவார்கள். இந்த தாழ்மை நிலை இயேசுவின் மகத்துவத்தை பறை சாற்றுகிறது. அவருடைய தையலில்லாத அங்கி பிரதான ஆசாரியரை பிரதிபலிக்கிறது. எல்லா மனுக்குலத்திற்கும் பரிந்து பேசுகிற தெய்வீக பிரதான ஆசாரியராக இயேசு இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் துன்பப்பட்டார் மற்றும் வேதனைக்குள்ளாக்கப்பட்டார். ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் சிலுவையைப் பற்றிய விபரங்களை தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார். சங்கீதம் 22 இவ்விதம் கூறுகிறது “என் வஸ்திரங்களை தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டார்கள்.” பரிசுத்த ஆவியானவர் மேலும் கூறுகிறார், “என் உடையின் பேரில் சீட்டுப் போட்டார்கள்”. சிலுவையின் உண்மையை மிகத் துல்லியமாக ஆவியானவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுவின் சிலுவை மரணம் என்பது இறைவனின் சித்தம் என்று இது உணர்த்துகிறது. இயேசு கூறியிருக்கிறார், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் உங்கள் தலையில் ஒரு மயிரும் விழாது. சிலுவை மரணம் என்பது நிகழவில்லை என்று எவர் கூறினாலும், அவர் வரலாற்று உண்மைகளை மறுதலிக்கிறார், மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னுரைத்த இறைவனின் ஆவியானவருக்கு எதிர்த்து நிற்கிறார். சிலுவையின் அடியில் வீரர்கள் இதை உணராமல், அறியாமையில் செயல்பட்டார்கள். வேதனைப்பட்டவரின் கடைசிப் பொருளுக்காக அவர்கள் சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலுவையில் உலகத்தின் மீட்பர் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணரவே இல்லை. சகோதரரே, அவருடைய மரணத்தின் ஐக்கியத்தின் மூலம் நீங்கள் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறீர்களா? அல்லது செல்வங்கள் மற்றும் புகழின் பின்னால் ஒடுகிறீர்களா? சிலுவையிலறையப்பட்டவரை நேசிக்கிறீர்களா? தெய்வீக நீதியையும், உண்மையான பரிசுத்தத்தையும் அவருடைய மரணத்தின் மூலம் பெற்றிருக்கிறீர்களா? அல்லது மேற்போக்கான பார்வையாளராக உள்ளீரா? சிலுவையிலறையப்பட்டவரை கருத்தூன்றிப் பார்க்காமல் கவலையீனமாய் உள்ளீரா? இறைவனின் மகனுடன் விசுவாசம், அன்பு நம்பிக்கையில் பரிசுத்த ஆவியானவர் நம்மை இணைக்கிறார். அதன் மூலம் நாம் அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், பலி செலுத்துகிற வாழ்க்கை மற்றும் மகிமையில் பங்கெடுக்கிறோம். விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, நீர் சிலுவையை சுமந்ததற்காக நன்றி கூறுகிறோம். உமது பொறுமை, அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்கள் பாவங்களை மன்னித்ததற்காகவும், உலகத்தாரின் பாவங்களை மன்னிப்பதற்காகவும் நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். அவமானமான சிலுவை மரத்தில் நீர் தொங்கிய போது எனது பாவங்களை என்னை விட்டு எடுத்துப் போட்டீர். மனுக்குலத்தை இறைவனுடன் ஒப்புரவாக்கிக் கொண்டீர். நீரே எங்கள் மீட்பர் மற்றும் பரிந்து பேசுபவர். கேள்வி:
|