Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 049 (Disparate views on Jesus)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஆ) மக்கள் நடுவிலும் ஆலோசனைச் சங்கத்திலும் இயேசுவைக் குறித்த வேறுபட்ட கருத்துக்கள் (யோவான் 7:14-53)


யோவான் 7:14-18
14 பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15 அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.

இயேசு தன்னுடைய மரணத்தை நினைத்தோ எதிரிகள் தனக்குச் செய்யப்போகும் தீமையை நினைத்தோ பயப்படவில்லை. அவர் தம்முடைய பிதாவின் சித்தத்திற்கு ஏற்றதுபோல நடக்க வேண்டும் என்பதற்காகவே எருசலேமிற்கு இரகசியமாகப் போனார். அங்கு அவர் ஒழிந்திருக்காமல், ஆலயப்பிரகாரத்திற்குச் சென்று அங்கீகரிக்கப்பட்ட போதகராக தன்னுடைய நற்செய்தியை அறிவித்தார். இறைவனே தங்களிடம் நேரடியாகப் பேசுவதாக மக்கள் உணர்ந்தார்கள். ஆகவே அவர்கள் ஒருவரொருவரை நோக்கி, “இந்த வாலிபனுக்கு இத்தனை ஆளமான இறையியல் அறிவு எங்கிருந்து வந்தது? வேதாகமத்தின் புகழ்பெற்ற போதகர் ஒருவரிடமும் இவர் கற்கவில்லையே. ஒரு தச்சனுக்கு கல்வியறிவின்றி இறைவனுடைய சத்தியத்தைப்பற்றிய முழுமையான அறிவு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்டுக் கொண்டார்கள்.

இயேசு அவர்களுக்கு, “ஆம். நான் போதிக்கிறேன், நான் சத்தியத்தைப் போதிப்பவர் மட்டுமல்ல, இறைவனுடைய வார்த்தையே நான்தான். இறைவனுடைய ஒவ்வொரு சிந்தையும் விருப்பமும் என்னில் இருக்கிறது. என்னுடைய போதனை எனக்குச் சொந்தமானது அல்ல, நான் இறைவனுடைய சத்தம், எனக்குப் போதிப்பவர் என்னுடைய பிதா. நான் அவருடைய திட்டங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் மற்றும் வல்லமைகள் அனைத்தையும் அறிந்திருக்கிறேன். நான் என்னுடைய சொந்த சிந்தனைகளுடன் வரவில்லை, ஏனெனில் இறைவனுடைய சிந்தனைகளே சத்தியமானவைகள்” என்பது போல பதிலளித்தார்.

இவ்வாறு அவர் பிதாவை மகிமைப்படுத்தி, அவருக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார். தன்னை இறைவனுடைய அப்போஸ்தலன் என்று அழைத்தார். அவர் தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி வராமல், பிதாவின் நாமத்தில் முழு அதிகாரமுடையவராக வந்தார். ஆகவே ஒரே வேளையில் இறைவனுடைய மகனாகவும் அப்போஸ்தலனாகவும் இருக்கும் இயேசுவும் நம்முடைய விசுவாசத்திற்கும், கவனத்திற்கும், ஆராதனைக்கும் பிதாவைப் போலவே பாத்திரராயிருக்கிறார்.

யூதர்கள் தன்னை விசுவாசிக்க வகைசெய்யும்படியாக, தன்னுடைய போதனைகள் இறைவனுடைய சித்தத்திற்கு ஒத்திருக்கிறது என்று நிச்சயப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு ஒரு நடைமுறை வழியைக் காண்பித்தார். இயேசுவும் அவருடைய போதனைகளும் மெய்யானவை என்பதைக் காண்பிக்கும் இறுதியான அத்தாட்சி எது? அவர் சொன்னார், “நீங்கள் என்னுடைய நற்செய்தியின்படி வாழ முயற்சி செய்யுங்கள், அப்பொழுது அதன் மேன்மையை நீங்கள் கண்டு பிடிப்பீர்கள். அவருடைய வார்த்தைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துங்கள். அப்பொழுது அவை வெறும் மனித வார்த்தைகள் அல்ல தெய்வீகமானவை என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

கிறிஸ்துவின் போதனையை நீங்கள் பின்பற்ற முதலில் நீங்கள் அதைக் குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். அவர் விரும்புவதை நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய சித்தமும் இறைவனுடைய சித்தமும் ஒன்றாகச் சேரவில்லையென்றால் கர்த்தரைப் பற்றி உண்மையான அறிவை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. எங்கெல்லாம் நீங்கள் உங்களுடைய சித்தத்தைவிட்டு கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறீர்களோ, நீங்கள் புதிய நிலையில் உணர்வடைந்து இறைவனை அவர் இருக்கிற வண்ணமாகவே அறிந்துகொள்வீர்கள்.

இயேசு நமக்குக் கற்பித்தபடி யாரெல்லாம் பிதாவினுடைய சித்தத்தைச் செய்யும்படி தங்களைப் பயிற்றுவிக்கிறார்களோ, அவர்கள் நற்செய்திக்கும் சட்டத்திற்கும் இடையிலிருக்கும் பெரிய வேறுபாட்டை அறிந்துகொள்வார்கள். நம்முடைய கர்த்தர் நம்மால் சுமக்க முடியாத பாரமான சுமையை வெறுமனே நம்முடைய தோள்களில் சுமத்தாமல், அதைச் சுமப்பதற்குத் தேவையான வல்லமையையும் தருகிறார். அப்பொழுது நீங்கள் அவருடைய சித்தத்தை மகிழ்வுடன் நிறைவேற்றுபவராயிருப்பீர்கள். யாரெல்லாம் கிறிஸ்துவினுடைய கட்டளைகளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்களோ, அவர்கள் அவருடைய அன்பை வாழ்ந்து காட்டுவதற்கான வல்லமையைப் பெற்றுக்கொள்கிறார்கள். மோசேயினுடைய சட்டத்தைப்போல அவருடைய போதனைகள் நம்மைத் தோல்விக்கு நடத்தாமல், இறைவனுடைய கிருபையின் முழுமையில் வாழ்வதற்கு வழிநடத்தும். கிறிஸ்துவின் போதனைகளில் வெளிப்பட்ட இறைவனுடைய சித்தத்தைச் செய்ய யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் இறைவனோடு தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டு, கிறிஸ்து மனிதப் போதகர்களில் ஒருவர் அல்ல என்றும் அவர் மாம்சத்தில் வந்த இறைவார்த்தையாகவே இருக்கிறார் என்றும் உணர்ந்துகொள்வார்கள். அவர் வெற்று தத்துவ ஞானத்துடன் வராமல், நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்புடன் வந்து, இறைவனுடைய வாழ்வை வாழும் வல்லமையை நமக்குத் தருகிறார்.

யோவான் 7:19-20
19 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். 20 ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள்.

கிறிஸ்து பரிசுத்த நடக்கையுள்ளவராக இருந்த காரணத்தினால் யூதர்களைப் பார்த்து, “நீங்கள் சட்டத்தைப் பெற்றுக்கொண்டீர்கள், ஆனால் அதைச் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” என்று கூறக்கூடியவராக இருந்தார். யூத இனத்தினுடைய இருதயத்தை இந்தக் கூற்று உருவக்குத்தியது. பழைய ஏற்பாட்டிற்குரியவர்கள் யாருமே சட்டத்தின் கோரிக்கைகளை சரிவர நிறைவேற்றவில்லை. ஒருவன் நியாயப்பிரமாணத்தின் ஒரு கட்டளையை மீறினாலும் அனைத்துக் கட்டளையையும் மீறிய குற்றவாளியாகி இறைவனுடைய கோபத்திற்கு ஆளாவான். இந்த அறிவிப்பின் மூலமாக தாங்கள் நீதிமான்கள் என்ற யூதர்களுடைய கோரிக்கையை நிராகரித்து, சட்டவாதிகளுடைய முயற்சியும் வைராக்கியமும் வெறும் நயவஞ்சகமே என்பதைக் காண்பித்தார்.

அவர்களுடைய தலைவர்கள் தன்னை அழிக்கத் தேடுகிறார்கள் என்பதை அவர்களுக்கு அவர் அறிவித்தார். இயேசுவுக்கு எதுவும் மறைவாயிருக்கவில்லை. தம்மைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை எச்சரித்து அவர்களது மேலோட்டமான வைராக்கியத்தைக் குறித்தும் அவரைப் பின்பற்றும்போது அவர்கள் செலுத்த வேண்டிய விலையைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதேவேளையில், “நீங்கள் ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.

யாரும் நீதிமான்கள் இல்லை என்று இயேசு சொன்னபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுடைய பதில் அவர்களுடைய சதித்திட்டத்தை மறைப்பதாக இருந்தது: “யார் உன்னைக் கொல்லத் தேடினார்கள்?” சிலர் ஒரு தீய ஆவிதான் அவர் மீது வந்து அவர் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று சொன்னார்கள். அவர்கள் தங்கள் இருதயத்தில் குருடர்களாக இருந்த காரணத்தினால் தூய ஆவியின் செயலையும் தீய ஆவியின் செயலையும் பிரித்தறிய முடியாதவர்களாயிருந்தார்கள். இறையன்பை அறியும் உணர்வனைத்தையும் அவர்கள் இழந்துவிட்டார்கள்.

கேள்வி:

  1. நற்செய்தி இறைவனிடமிருந்துதான் வருகிறது என்பதற்கான ஆதாரம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)