Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- The Ten Commandments -- 09 Seventh Commandment: Do Not Commit Adultery

Previous Lesson -- Next Lesson

TOPIC 6: பத்து கட்டளைகள் - மனிதனை விழாது காக்க இறைவன் கட்டிய மதிற்சுவர்கள்

09 - ஏழாம் கட்டளை: விபசாரம் செய்யாதிருப்பாயாக



யாத்திராகமம் 20:14
“விபசாரம் செய்யாதிருப்பாயாக”
(யாத்திராகமம் 20:14)


09.1 - திருமணத்தின் அமைப்பு மற்றும் நோக்கம்.

இறைவன் தன்னுடைய ரூபத்தின் படியே மனிதனைப் படைத்தார். அவர் அவனை அவருடைய சாயலின்படியே படைத்தார். அவர் அவர்களை ஆணும்,பெண்ணுமாகப் படைத்தார். அவர்கள் இருவரும் தனது சாயலை பிரதிபலிக்கும்படி அவர் தெரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் ஒரே ஆவிக்குரிய நிலையில் இருந்தார்கள். அவர்களுடைய ஒழுக்கத்தின் இரகசியம் ஆண் மற்றும் பெண்ணிற்கு இறைவனுடன் உள்ள உறவாக இருந்தது.

ஒரு மனிதனுக்கு ஒரு பெண்ணை இறைவன் படைத்தார். அவர் இரண்டு, மூன்று அல்லது நான்கு மனைவிகளை அவனுக்காக உருவாக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். சரியான திருமண உடன்படிக்கையில் இறைவன் மூன்றாவது நபராக இருக்கிறார். அந்த இருவரையும் ஒரே மனம், ஒரே இலக்கு உடையவர்களாகவும், ஆவிக்குரிய விதத்தில் சமமாகவும் அவர் உருவாக்கினார். தியாகமுள்ள வாழ்விற்கு நேராக அவர்களை வழிநடத்தினார். அதில் அவருடைய அன்பு பரிபூரணமாக உள்ளது. இறைவனை நேசிப்பவன் அவனுடைய வாழ்க்கைத் துணையையும் நேசிப்பான். இரண்டு சுயநலமுள்ள மக்களை இறைவன் தன்னுடைய கிருபையால் ஒருங்கிணைத்து, அவருடைய சாந்தத்தின் வல்லமையினால் அவர்களுடைய சுயநலத்தை மேற்கொள்ளும்படி செய்கிறார்.

ஆணிலிருந்து இறைவன் பெண்ணைப் படைத்தார். அவர் இதை மாற்றிச் செய்யவில்லை. ஒரு யூத ரபி இவ்விதம் விளக்குகிறார். பெண்ணின் மீது ஆண் ஆதிக்கம் செய்யக் கூடாது என்பதற்காக சிருஷ்டிகர் மனிதனின் தலையில் இருந்து எலும்பை எடுக்கவில்லை. அவளை காலுக்கு கீழ் போட்டு தாழ்வாக நடத்தக் கூடாது என்பதற்காக அவனின் பாதத்தில் இருந்தும் எடுக்கவில்லை. அவனுடைய இடுப்புப் பகுதியில் இருந்து விலா எலும்பை எடுத்து, அவனுக்கு இணையாக அவள் இருக்கும்படியாக செய்தார். அவனுக்கு, ஏற்ற துணையாக, அவனுடைய சுமைகளை பகிர்ந்து கொள்ள, பரிபூரணம் அடையும்படி செய்தார்.

ஆணிலிருந்து இறைவன் பெண்ணைப் படைத்தார். அவர் இதை மாற்றிச் செய்யவில்லை. ஒரு யூத ரபி இவ்விதம் விளக்குகிறார். பெண்ணின் மீது ஆண் ஆதிக்கம் செய்யக் கூடாது என்பதற்காக சிருஷ்டிகர் மனிதனின் தலையில் இருந்து எலும்பை எடுக்கவில்லை. அவளை காலுக்கு கீழ் போட்டு தாழ்வாக நடத்தக் கூடாது என்பதற்காக அவனின் பாதத்தில் இருந்தும் எடுக்கவில்லை. அவனுடைய இடுப்புப் பகுதியில் இருந்து விலா எலும்பை எடுத்து, அவனுக்கு இணையாக அவள் இருக்கும்படியாக செய்தார். அவனுக்கு, ஏற்ற துணையாக, அவனுடைய சுமைகளை பகிர்ந்து கொள்ள, பரிபூரணம் அடையும்படி செய்தார்.


09.2 - திருமணத்தின் நிலைத்தன்மை

திருமண வாழ்வில் இருவரும் இறைவனுடன் உள்ள ஐக்கியத்தை விட்டு விலகிச் செல்லும் போது, குழப்பங்கள் நேரிடுகின்றன. மனிதனுடைய பாவ வீழ்ச்சி என்பது அவனது ஆவி மற்றும் ஆத்துமாவில் முதலில் நிகழ்கிறது. அவனது சரீரத்தில் அல்ல. தீமையின் பெருமையினால் மனிதன் தாக்கப்படுகிறான். மனுஷியும், மனுஷனும், இறைவனைப் போல மாற விரும்பினார்கள். இந்த சோதனை மனிதனின் மனம், சித்தத்தில் ஆரம்பித்தது. அதன் விளைவாக மிகப்பெரிய ஆக்கினை ஏற்பட்டது. அது வாழ்வின் அனைத்து பகுதிகளையும் சீரழித்தது. மனிதனுக்கு கீழாக பெண் அடங்கி காணப்பட்டாள். இந்த உலகில் எவ்விதமாக வாழ்வை நடத்துவது என்று அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை. அவள் வேதனையுடன் பிள்ளையைப் பெற்றெடுத்தாள். முற்கள் நிறைந்த நிலத்தில் கடினமான சூழ்நிலையின் மத்தியில் மனிதன் கடினமாக உழைத்தான். பாவத்தின் சம்பளமாக மரணம் நேரிட்டது.

மனிதன் பாவத்தில் வீழ்ந்தபோது, அது திருமணத்தையும் பாதித்தது. இறைவனுக்கு எதிராக மனிதன் கலகம் செய்தபின்பும் ஒரு குறிப்பிட்ட அளவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை தொடர்ந்தது. ஆனால் துரதிர்ஷடவசமாக பழைய ஏற்பாட்டில் மனிதன் அநேக மனைவிகளுடன் வாழ்பவனாக மாறினான். அது அநேக தீவிரமான பிரச்சினைகளைக் கொண்டு வந்தது. அவர்களுடைய சந்ததியின் மீதும் இவர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இறைவனுக்கு கீழ்ப்படியாமல், அவர்கள் பலதாரமணத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாமில் அரேபியர்கள் மற்றும் முஸ்லீம்கள் அனைவரின் முற்பிதாவாக கருதுகின்ற ஆபிரகாமின் முதல் மகன் இஸ்மாயில் குறித்த சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். இறைமனிதனாகிய ஆபிரகாமின் கீழ்ப்படியாமையில் அந்தத் தாக்கம் மிக நீண்டதாக சந்ததி தோறும் தொடர்வதைப் பார்க்கிறோம். ஒரே தகப்பனிடத்தில் பிறந்த சகோதரர்களின் சந்ததிகளுக்கிடையில் கிழக்குப் பகுதி நாடுகளில் இன்று வரை நடைபெறும் போர்களை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

யாக்கோபிற்கு அவன் நேசித்த மனைவி ராகேல், அவனுடைய முதல் மனைவி லேயாள் மற்றும் மறுமனையாட்டிகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இருந்தார்கள். திருமணமான பெண்ணின் மீது ஆசைப்பட்டு தாவீது கொலைக்காரனாக மாறினான். பின்பு அவன் மனந்திரும்பினான். அநேகர் தாவீதைப் போல் பாவம் செய்கிறார்கள். ஆனால் வெகு சிலரே அவனைப் போல் மனந்திரும்புகிறார்கள். நாம் அனைவரும் சங்கீதம் 51-ஐ மனனம் செய்ய வேண்டும். இந்த இறைவனுடைய மனிதனின் மெய்யான மனந்திரும்புதலை நாமும் வெளிப்படுத்த வேண்டும். ஞானம் நிறைந்த சாலமோன் முட்டாள்தனமாக நடந்துகொண்டான். ஞானமற்ற முறையில் நூற்றுக்கணக்கான புறஜாதி பெண்களை திருமணம் செய்துகொண்டான். அவர்களுடைய தேவர்களை தன்னுடைய நாட்டில் அறிமுகப்படுத்த அனுமதித்தான். உண்மையான இறைவனிடம் இருந்து மக்கள் பின்வாங்கி போவதற்கு இந்த விக்கிரகங்கள் காரணமாக இருந்தன.

இன்றும் இஸ்ரேலில் பலதாரமணம் என்பது ஒழிக்கப்படவில்லை. அரேபிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த யூதர்கள் தங்களுடைய எல்லா மனைவிகளுடன் வாழ்கிறார்கள். முதல் மனைவி மகன்களை பெற்றெடுக்கவில்லையென்றால் விவாகரத்து மற்றும் மறுமணம் என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் இறைவன் பலதாரமணத்தை பொறுத்துக் கொண்டிருந்தாலும், தங்களுடைய பாவங்களின் விளைவுகளை அவர்கள் அனுபவிக்கத்தக்கதாக காணப்பட்டது. விபசாரக்காரனும், விபசாரக்காரியும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று அவர் கட்டளையிட்டார். (லேவியராகமம் 20:10-16; உபாகமம் 22:22-26). மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகை விபசாரப் பாவங்களுக்கான தண்டனையின் பட்டியலைப் பார்க்கும்போது நமக்கு நடுக்கம் ஏற்படுகின்றது. அவைகள் இன்றும் அந்தரங்கமாகவும், வெளியரங்கமாகவும் செய்யப்படுகின்றன. குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்குள் செய்யப்படும் பாலியல் நடவடிக்கைகளுக்குக் கூட, அவர்கள் மீது தண்டனை கூறப்பட்டுள்ளது. வேதாகமத்தில் ஓரினச்சேர்க்கை ஒரு போதும் அனுமதிக்கப்படவில்லை. அதற்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மிருகத்தோடு பாலுறவில் ஈடுபடுகிறவன் இறைவனுடைய பார்வையில் அருவருப்பானவனாக இருக்கிறான். திருமணம் என்ற எல்லைக்குள் கணவன் மற்றும் மனைவிக்கிடையேயுள்ள உறவைத் தவிர வேறு எந்தவொரு பாலுறவையும் இறைவன் அனுமதிக்கவில்லை. இறைவனுடைய இந்த நியதிக்கு எதிர்த்து நிற்கும் எவனும் சாபத்திற்கும், இறைவனுடைய கோபாக்கினைக்கும் ஏதுவானவன். முழு உலகிற்கும் எப்போதும் சத்தியம் தேவையாக உள்ளது. தொடர்ச்சியான மனந்திரும்புதல், தூய உள்ளம், இருதயம் மற்றும் செயல் அவசியமாக உள்ளது.


09.3 - விபசாரத்தின் நிமித்தம் ஏற்படும் துன்பங்கள்

விபசாரம் என்பது குடும்பத்தில் உள்ள ஒருவர் இன்னொருவரிடம் தகாத உறவில் ஈடுபடும் போது ஆரம்பிப்பது அல்ல. அது இறைவனுடனான உறவில் இருந்து படிப்படியாக விலகுவது, அதன் தொடர்ச்சியாக தனது வாழ்க்கைத் துணையுடனும் பிரிவதில் இது ஆரம்பிக்கின்றது. ஆனால் இறைவனுடனான ஐக்கியத்தில் நிலைத்திருப்பவர்கள் ஆழமான மற்றும் முதிர்ச்சியான அன்பை தங்களது வாழ்க்கைத் துணையிடம் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் எந்த சூழ்நிலையிலும் விபசாரம் செய்ய மாட்டார்கள். ஆகவே விபசாரம் என்பது ஆவிக்குரிய, உணர்வு ரீதியான மற்றும் உடல் ரீதியான ஐக்கியத்தில் ஏற்படும் வீழ்ச்சியைத் தொடர்ந்தே நிகழ்கின்றது. தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் பாவச்சேற்றினில் ஆழமாக அமிழ்ந்து போகிறார்கள்.

திருமண வாழ்வில் பாவம் என்பது எப்போதுமே மனதில் ஆரம்பிக்கின்றது. இயேசுவின் பெயராலே கடிந்துகொள்ளப்படாத மற்றும் தீய பிம்பங்களாக ஆழமாக வேரூன்றியுள்ள மனதின் காட்சிகள் விரைவில் சாவுக்கேதுவான வலையில் சிக்க வைக்கும். மனிதன் இப்படிப்பட்ட அசுத்தமான கனவுகளை செயல்படுத்த விரும்புகிறான். மேலும் துணிகரமாக பாவத்தில் ஈடுபடுகிறான். ஒருவர் வஞ்சிக்கப்படலாம் அல்லது பாவம் செய்ய கவரப்படலாம். இருவரும் எதிர்த்து நிற்காமல் சோதனையில் விழும்வரை இப்படி நடக்கும். மனச்சாட்சியின் சத்தம் முதலாவது தெளிவாக கேட்கும். ஆனால் கலகக்காரன் தொடர்ந்து மனதைக் கடினப்படுத்துகிறான். விபசாரம் என்பது பழக்கத்தினால் செய்யப்படுகிற பாவம் அல்ல. அது வலுக்கட்டாயமாக செய்யப்படுகிற ஒரு பாவம். ஒரு விபசாரக்காரன் தன்னுடைய பாவம் வளர்ந்து பெருகுவதை ஆரம்பத்தில் இருந்து கவனிக்கும்போது, அவனுடைய செயல் அநீதியானது மற்றும் அசுத்தமானது என்று கூறுகிறான். பாவத்தை துவங்குகிற ஒருவன் தொடர்ந்து அதில் நிலைத்திருப்பான்.

பாவத்திற்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவனிடம், பாவமே இயக்கு விசையாக மாறுகின்றது. ஆனாலும் பாவத்திலிருந்து விடுதலையாகும் நித்திய நம்பிக்கை நமக்கு இருக்கிறது. எனவே ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இயேசு கூறுகிறார். “பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான்…. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” (யோவான் 8:34-36) மனித மனங்களின் ஆழமான பகுதிகளையும், கிருபை நிறைந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி சந்திக்கின்றது. அது நம்மை சுத்தப்படுத்துகிறது, முழுமையாக குணமாக்குகின்றது. சில தழும்புகள் தொடர்ந்து இருப்பினும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சுத்திகரிக்கின்றது. சோதனைகளை மேற்கொள்வதற்கு நம்மை பெலப்படுத்துகிறது. குமாரன் ஒருவனை விடுதலையாக்கினால், அவன் விடுதலையைப் பெறுவான்.


09.4 - இயேசு கிறிஸ்து திருமணத்தை உறுதிப்படுத்தினார்

இயேசு கிறிஸ்து திருமணத்தை உறுதிப்படுத்தினார். வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்கக்கூடிய ஆண் மற்றும் பெண்ணுக்கிடையில் உள்ள ஐக்கியத்தை வலியுறுத்தினார். (மத்தேயு 19:4-6) தனது எதிராளிகளிடம் இவ்விதம் கூறினார். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.(மாற்கு 10:1-12ஐ பார்க்கவும்)

இந்த வசனங்களில் ஆண், பெண், மற்றும் இறைவனுக்கிடையில் உள்ள ஒரு வகையான திரியேகத்துவத்தை இயேசு உறுதிப்படுத்தினார். அவரைப் பின்பற்றுபவர்களின் இருதயங்களில் பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு அவர் முத்திரையிடுகிறார். அவர் நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை பரிசுத்தப்படுத்துகிறார். உயிருள்ள இறைவனின் ஆலயமாக நாம் இருக்கும்படி செய்கிறார். ஆண்டவர் வாசம்பண்ணுகிற, ஆளுகை செய்கிற நம்முடைய அழிந்துபோகும் வாழ்வை பரலோகிற்கு நேராக அழியாமையுடன் நடத்திச் செல்கிறார். இயேசுவின் இரத்தத்தினால் பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலம் ஆத்துமா மற்றும் தூய சரீரம் அருளப்பட்டு, முழுக் குடும்பத்திலும் ஒரு புதிய சூழல் உருவாக்கப்படுகிறது. கிறிஸ்துவிற்குள் அழிந்துபோகும் வாழ்வு ஒரு புதிய அர்த்தம் பெறுகின்றது, ஆசீர்வதிக்கப்படுகிறது, திருமணத்திற்கு ஒரு புதிய நோக்கத்தைத் தருகின்றது. எந்த ஒரு கிறிஸ்தவனும் ஒரு அவிசுவாசியை அல்லது கிறிஸ்தவரல்லாத ஒருவரை திருமணம் செய்யக் கூடாது என்பது முக்கியமான கட்டளை ஆகும். இதன் மூலம் அவன் அநேக பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். இயேசுவை நேசித்தல் என்பது உங்களது வாழ்க்கைத் துணையை நேசிப்பது, அவருக்கு அல்லது அவளுக்கு பணி செய்வது, மரணம் மட்டும் உண்மையுடன் இருப்பது ஆகும்.

இயேசுவோ அல்லது அவருடைய அப்போஸ்தலர்களோ மனிதர்கள் மீதான பாசம் மற்றும் பெண்களை விட்டு விலகி இருக்கவில்லை. அவர்கள் ஆணுக்கு பெண் ஒப்புக் கொடுத்து கீழ்ப்படிந்து நடப்பதை மாற்றியமைக்கவில்லை. இருப்பினும் பரிசுத்த ஆவியானவர் தம்பதிகளை அவர்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் தாழ்மை மற்றும் சாந்தத்துடன் நடக்கும்படி வழி நடத்துகிறார். இயேசு சபைக்காக தம்மையே தியாகமாய் பலியிட்டதைப் போல ஒவ்வொரு கணவனும் அவனுடைய மனைவியை நேசிக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். உண்மையான அன்பு என்பது எந்தவொரு கண்டிப்பும் இல்லாமல் தொடர்ந்து ஆசையுடன் நேசித்துக் கொண்டேயிருப்பது அல்ல. வாழ்க்கைத் துணையை மதிப்புடன் நடத்தி அவருக்கு பணி செய்வது ஆகும். பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்கிற ஒரு இடம் மட்டும் அல்ல. திருமணம் என்ற நிலையில் தான் பரிசுத்த ஆவியானவரில் நிலைத்திருப்பதன் மூலம் இச்சையடக்கம் ஏற்படுகின்றது. ஏனெனில் திருமண வாழ்வு என்பது இருவரும் இணைந்து இறைவனை மகிமைப்படுத்துவதாகும்.


09.5 - புதிய ஏற்பாட்டில் திருமணம்

நமது ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்திற்கு மிக உயர்ந்த ஒரு பரிசுத்த நிலையை இயேசு வைத்திருக்கிறார். அவர் கூறினார். “ஒரு பெண்ணை இச்சையுடன் பார்க்கிற எவனும் அவளுடன் விபசாரம் செய்தாயிற்று”. (மத்தேயு 5:28) இந்த நிலையில் பரிசுத்தமுள்ள இறைவன் முன்பு எல்லா மனிதர்களும் பாவம் நிறைந்தவர்களாக காணப்படுகிறார்கள். இறைவன் முன்பு ஒருவனும் நீதிமான் இல்லை என்பதால் நாம் அனைவரும் நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டியது அவசியமாக உள்ளது. இயேசுவின் பள்ளியில் நமது பரிசுத்தத்திற்கு அடித்தளமாக, நம்முடைய பாலியல் பாவங்களை முழுமையாக அறிக்கையிட வேண்டும் நித்திய நியாயதிபதி முன்பு நம்முடைய சுயம் நொறுக்கப்படுதல் அவசியம் ஆகும். அவர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த இறைவனுடைய ஆட்டுக்குட்டியாய் இருக்கிறார். அவரிடம் திரும்புகிற ஒவ்வொருவனும் நீதிமானாக்கப்படுகிறான், சுத்திகரிக்கப்படுகிறான் மற்றும் பரிசுத்தமாக்கப்படுகிறான்.

தேசத்தின் மூப்பர்கள் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். அவர் அவளுடைய பாவத்தை சுட்டிக்காட்டவில்லை. மாறாக மூப்பர்கள் தங்களுடைய நிலையை சிந்தித்து உணரும்படியாக செய்தார். நியாயப்பிரமாணத்தின்படி அவள் கல்லெறியப்பட வேண்டும். ஆனால் அவர் ஒரு சிறிய திருத்தம் செய்தார். ஒரு போதும் பாவமே செய்யாதவன் முதலாவது அவள் மீது கல்லெறிய வேண்டும் என்றார். அவர்கள் அனைவரும் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக காணப்பட்டார்கள். அவர்களின் மத்தியில் பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள் மற்றும் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் இருந்தார்கள். அமைதியாக ஒருவர் பின் ஒருவராக அனைவரும் கடந்து சென்றார்கள். இறுதியில் இயேசுவும், விபசாரப்பெண்ணும் மட்டும் அங்கு இருந்தார்கள். இப்போது அவள் மீது முதலாவது கல்லெறியக் கூடிய ஒரே பாவமற்ற நபர் மட்டும் அங்கு இருந்தார். ஆனால் அவள் மீது அவர் கல்லெறியவில்லை. நீ போ இனிப் பாவம் செய்யாதே என்றார். அவள் மீது கல்லெறியாததினாலே இயேசு நியாயப்பிரமாணத்தை மீறிவிட்டாரா? இல்லை, அவளுடைய பாவத்தை தன்மீது எடுத்துக்கொண்டு, அவளுக்குப் பதிலாக மரித்தார். ஆகவே அவளுடைய பாவங்களை மன்னிக்க அவருக்கு உரிமை இருந்தது. இயேசுவின் சிலுவை மரணம் மட்டுமே கசப்பான நியாயத்தீர்ப்பிலிருந்து விபசாரக்காரர்களை விடுவிக்கிறது. சிந்தனை, வார்த்தை மற்றும் செயலில் விபசாரம், பாவம் செய்கின்ற ஒவ்வொருவனும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் மூலம் மட்டுமே இரட்சிப்பைக் காண முடியும்.

இயேசு விவாகரத்தை தடைசெய்தார். திருமணமான தம்பதியரின் ஒற்றுமையை உறுதிப்படுத்தினார். திருமணத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொருவரும் கருத்துடன் விண்ணப்பம் பண்ண வேண்டும். அந்த மனிதன் இவ்விதம் கேட்கவேண்டும். “எனக்கு இறைவனால் நியமிக்கப்பட்டவள் இவள் தானா? அல்லது எனது சுயநல நோக்கங்களுக்காக நான் அவளை தெரிவு செய்கிறேனா? அல்லது வயது, திறமைகள், கல்வி மற்றும் குடும்பம் இவைகளுக்கு நாம் முக்கியத்தும் தருகிறோமா? அந்த நபர் திரியேக ஆண்டவரில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது இறைவனுடன் ஒரு மேம்போக்கான உறவுடையவராய் உள்ளாரா? இப்படிப்பட்ட கேள்விகளும், மற்ற கேள்விகளும் எழுப்பப்பட வேண்டும். திருமணத்திற்காக முன்பு கருத்துடன் விண்ணப்பம் செய்து தீர்மானிக்க வேண்டும். நாம் திருமணம்பண்ணப் போகும் நபர் ஏற்ற துணை இல்லையென்றால், திருமணம் செய்வதைவிட, நிச்சயதார்த்தத்தை முறிப்பது நலமாக இருக்கும்.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நீங்கள் திருமணம் பண்ணப்போகும் நபரை நேசித்தால், அவளை கனப்படுத்துங்கள், அவளை பாழ்படுத்தாதிருங்கள். திருமணம் நடைபெறும்வரை உயிருடன் இருப்பார் என்று ஒருவரும் உறுதி சொல்ல முடியாது. ஆகவே திருமண வாழ்க்கைக்காக ஆயத்தப்படுவதில் ஒரு வாலிபனாக சுய அடக்கத்தை நீங்கள் கற்றுக்கொள்வது அவசியம். நீங்கள் உடலுறவு கொள்ள முடியாதபடி, உங்கள் மனைவி வியாதியாயிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அன்பு என்பது வெறும் சந்தோஷம் மட்டுமல்ல. அது சுய மறுப்பையும், தியாகத்தையும் எதிர்பார்க்கிறது. திருமணம் நடைபெறும் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று யாரேனும் சொன்னால், அவன் திருமணம் பண்ணாமலிருப்பதே நலம். ஏனெனில் திருமணத்திற்கு பின்பு அவன் உண்மையுடன் இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது. தொலைக்காட்சி அல்லது சில மதங்கள் உடலுறவு களியாட்டங்களை முக்கியத்துவப்படுத்துகிறது. கிறிஸ்து அதற்காக நம்மை அழைக்கவில்லை. அவர் இச்சையடக்கத்துடன் வாழும்படியாக நம்மை அழைத்துள்ளார்.

பாலியல் ஆசை என்பது அசுத்தமான ஒன்றல்ல. அது இறைவன் கொடுத்த கொடை. அதற்காக நாம் நன்றி செலுத்த வேண்டும். ஆனால் மனிதன் அவனுடைய ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்களை பாவம் செய்ய அவன் தூண்டக் கூடாது சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குபவனைக் குறித்து இயேசு கூறினார். “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” மத்தேயு 18:6 அப்படிப்பட்ட மனிதனுக்கு கடுமையான நியாயத்தீர்ப்பு உண்டு. அவன் உண்மையாக மனந்திரும்ப வில்லையெனில், இறைவனின் இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது. அவன் பாவத்திலிருந்து முற்றிலும் மனந்திரும்ப வேண்டும். ( 1 கொரிந்தியர் 6:9-11). உண்மையான அன்பு யாருக்கும் தீங்கு செய்யாது.

பெண் பிள்ளைகளும் தங்களது வாழ்க்கைத் துணைக்காக அவர்கள் இயேசுவைப் பின்பற்றும் போது ஆயத்தம் செய்ய வேண்டும். பரலோகத்தில் அல்ல, நரகத்தில் உருவாகும் அநாகரிகமான படங்கள், வக்கிரமான பத்திரிக்கைகள் மற்றும் கொடூரமான தொலைக்காட்சி காட்சிகளில் காண்பிக்கப்படுவது போல இது எளிதான ஒன்று அல்ல. ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பம் அல்லது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாலிபர் முழு ஒரு சீரான வளர்ச்சியை நோக்கி ஆவி, ஆத்துமா, சரீரம் செல்லும்படி உதவ முடியும். ஒரு பெண் எவ்வளவு சீக்கிரம் தன்னை இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கிறாளோ, அவ்வளவு சிறப்பாக அவள் வாழ்க்கை இருக்கும். அவள் வளர்ந்து வருவாள், அவள் எல்லா சோதனைகளிலும் பாதுகாக்கப்படுவாள். ஒரு பெண் தனக்கு கணவனைத் தேடும்போது, செல்வம் மற்றும் உயர்ந்த பதவிகளை உடைய ஒருவனை தேடக் கூடாது. ஒரு வாலிபன் தனது பணியை நேர்மையுடன், உண்மையுடன் செய்யும்போது அந்த வாலிபனில் இருக்கக் கூடிய புதிய இருதயத்தை வேறுபடுத்தி அறிந்திருக்க வேண்டும். அநேக கவரக்கூடிய விஷயங்களை விட ஆவியின் கனிகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. கர்த்தர் கூறுகிறார். “துன்மார்க்கனுக்கு சமாதானம் இல்லை”. இது திருமண வாழ்விலும் பொருந்தும்.

நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. சர்ப்பமானது பரதீசில் காணப்பட்டது. மனித வாழ்வில் பாதுகாப்பு அல்லது சமாதானம் என்பது இயேசுவுக்கு ஒப்புக் கொடுக்கும் போது வருகிறது. அவரில் நிலைத்திருக்க வேண்டும். அவர் ஒருவர் மட்டுமே சோதனைகளை நாம் மேற்கொள்ளும்படி நமக்கு உதவுகிறார். நம்மில் ஒருவரும் பாவத்திலிருந்து முழு விடுதலை பெறவில்லை. நம்முடைய பாவங்களை, மீறுதல்களை நாம் இயேசுவிடம் அறிக்கையிட வேண்டும். நீங்கள் அறிக்கையிட தாமதித்தால், பாவம் உங்களை மேற்கொள்ளும். ஆண்டவரிடம் திரும்புங்கள். அவர் உங்களை உடனடியாக விடுவிப்பார். நீங்கள் ஒவ்வொரு முறையும் சோதனைகளினால் தாக்கப்படும்போது, அவரிடம் ஓடுங்கள்.

இயேசுவின் நாமத்தில் திருமண உடன்படிக்கை ஏற்படுத்தப்படுகிறது. திருச்சபையில் நடைபெறும் இந்த ஆராதனை மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை துவங்குகிறது. பணம், ஆடை, ஆரோக்கியம் மற்றும் உலக மதிப்பீடுகள் அனைத்தும் திருமண வாழ்வின் மையம் அல்ல. இறைபக்தியுள்ள தம்பதியர் மீது ஆண்டவர் மற்றும் அவருடைய வார்த்தையின் மூலம் கிருபையின் மேல் கிருபை உறுதியாக அருளப்படுகிறது. இயேசு கூறுகிறார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” மத் 6:33. திருமண வாழ்வில் குழந்தையின்மை, மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சினை இருந்தாலும், அது வெற்றியுள்ள வாழ்க்கையாக அமையக் கூடும். அந்த தம்பதியர் சிறப்பான ஆசீர்வாதத்தையும், இறைவனின் ஞானத்தையும் பெற்று பல வழிகளில் இயேசுவிற்கு சேவை செய்ய முடியும். அவர்கள் வீடில்லாத குழந்தைகளை தத்து எடுக்கலாம் அல்லது ஆண்டவருக்காக இரக்கம் சார்ந்த பணிகள் செய்யலாம். பிதா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய இறைவன் இல்லாமல் திட்டமிடப்பட்ட திருமணத்தில் திருமண முறிவு மற்றும் விவாகரத்து அனுமதிக்கப்படுகிறது. ஏனெனில் அவிசுவாசிகள் சுய வெறுப்பை கற்றுக்கொள்வது அபூர்வமாய் உள்ளது. அவர்கள் சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையுடன் உள்ளார்கள். குறுகிய காலத்திற்கு ( மூட்டா ) மட்டும் திருமணம் செய்பவர்கள் அல்லது பரிசோதனைக்காக சேர்ந்து வாழ்பவர்கள் ஆண் மற்றும் பெண்ணிடம் உள்ள மனரீதியான மற்றும் உயிரியல் ரீதியான இரகசியங்களை அறிந்து கொள்வதில்லை. அவர்களிடம் இறைவனைக் குறித்த பயம் இல்லை. விசுவாசத்தினால் கீழ்ப்படிதல் இல்லாத சுதந்திரம் தவறான ஆளுகைக்கு கதவைத் திறக்கிறது. கண்ணியம் என்பது ஒவ்வொரு கலாச்சாரத்தின் அடிப்படையாக உள்ளது. ஆகவே சிருஷ்டிகர் மற்றும் உங்கள் இறைவனாகிய ஆண்டவரை பரீட்சை பாராதிருங்கள். பரிசுத்த ஆவியானவர் ஒரு போதும் அசுத்தம் விபச்சாரம், தவறான ஆடைகள், ஆபாச நகைச்சுவைகள், அளவுக்கதிமான உணவு, மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவற்றை அனுமதிப்பதில்லை. இவைகள் அனைத்தும் இருதயத்தை பாழ்படுத்தும் அடையாளங்கள் ஆகும். மனதை நச்சுப்படுத்துகிறது மற்றும் மில்லியன்கணக்கான சரீரங்களை அழிக்கின்றது. நாம் இந்த உலகில், உலகத்தின் அதிபதியாகிய பிசாசின் அதிகாரத்தின் கீழ் வாழவேண்டும் அல்லது நமது பலவீனத்தில் நம்மை பெலப்படுத்துகிற ஒரே இரட்சகர் கிறிஸ்துவில் வாழ வேண்டும். நமது உலகம் பொருள் சார்ந்ததாக மாறிவிட்டது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசிகள் கொண்டுள்ள மதிப்பீடுகளின்படி வாழத் தயாராக இல்லை. கிறிஸ்து அவரது தூய்மை மற்றும் அவரது பரிசுத்தத்தில் நிறைந்தவராக உள்ளார்.


09.6 - முஸ்லீம் கண்ணோட்டத்தில் திருமணம்.

திருமணத்திற்காக சிறப்பான சட்டங்களை இஸ்லாம் ஷரியாவில் வழங்குகிறது. ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் அடைந்துள்ள ஒழுக்க நிலை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர ஷரியாவை ஏற்றுக்கொள்வது அவசியம் என கூறுகிறார்கள்.

முகம்மது தன்னைப் பின்பற்றுபவர்கள் நான்கு மனைவிகளை வைத்திருக்க அனுமதித்தார். குறிப்பிட்ட பணத்திற்காக குறுகிய கால திருமணமான மூட்டா திருமணத்தைக் கூட அவர் அனுமதித்திருந்தார். (சுரா-அன்னிஸôவு 4:4,24). அவரைப் பின்பற்றியவர்கள் தீவிர போராளிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் ஆவர். அவர்கள் நீண்ட காலம், அடிக்கடி வீட்டை விட்டு தூரமாக இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பாலியல் ஆசைகளை திருப்தி செய்ய விரும்பினார்கள். துறவறம் மற்றும் சுய மறுப்பு என்பது இஸ்லாமில் ஆணுக்கு ஒரு பொருட்டல்ல, அது பெண்ணுக்கு மட்டும் தான். இஸ்லாமைத் தோற்றுவித்தவர் சட்டப்படி பதின்மூன்று மனைவிகளை மணந்திருந்தார். இது தவிர யூத, கிறிஸ்தவ மற்றும் புற இனத்து மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.

அநேக இஸ்லாமிய நாடுகளில் ஆண் தன்னுடைய மனைவியை எவ்வித காரணமுமின்றி விவாகரத்து செய்ய முடிகிறது. அவளை விவாகரத்து செய்ததற்காக மனம் வருந்தினால் புதிய மணவாட்டிக்குரிய விலையை செலுத்தாமல் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியும். இரண்டாவது விவாகரத்து மற்றும் இரண்டாவது மறுமணம் கூட சட்டபூர்வமாக இருந்தது. ஒரு முஸ்லீம் தன்னுடைய மனைவியை மூன்றாம் முறை விவாகரத்து செய்தால், அவன் அவளை மறுபடியும் திருமணம் செய்ய முடியாது. அவள் முதல் முறை இன்னொரு மனிதனை சட்டப்பூர்வமாக மணந்திருந்தால், அவளை மறுபடியும் திருமணம் செய்ய முடியும். இந்த கடைசி கணவன் அவளை விவாகரத்து செய்யும்போது, அவள் தன்னுடைய முதல் கணவனை மீண்டும் திருமணம் செய்ய முடியும். இப்படிப்பட்ட பெண்ணின் மனதில் என்ன எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும்? அவள் ஒரு போகப்பொருள் போல கருதப்படுகிறாள். அவள் மதிப்பு, உரிமை மற்றும் கடமைகளுடன் கணவனுக்கு சமமான ஒரு உயிருள்ள ஆத்துமாவாக வாழ்க்கைத் துணையாக கருதப்பட வேண்டும். அப்போது தான் தம்பதியர் ஆவிக்குரிய ஐக்கியத்துடன் வாழமுடியும். அவர்கள் இணைந்து வாழ்க்கை பிரச்சினைகளை மேற்கொள்ள முடியும்.

ஒரு முஸ்லீம் தனது சொந்தக் குடும்பத்தில் நான்கு மனைவிகளுடன் வாழும் போது அவன் ஒரு முற்பிதாவைப் போல் இருக்கிறான். அவன் அனைவரையும் சமமாக நேசிக்க வேண்டும் என்பது ஓர் நிபந்தனையாகும். அவன் ஒரு மனைவிக்கு பரிசு வழங்கினால், மற்ற மனைவிகளுக்கும் சமமாக அதே பரிசை வழங்க வேண்டும். ஒரு மனைவியின் பிள்ளைக்கு புதிய துணி வாங்கினால், அவன் மற்ற மனைவிகளின் எல்லா பிள்ளைகளுக்கும் அதே தரத்துடன் புதிய துணிகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். பொருளாதாரக் காரணங்களுக்காக அநேக முஸ்லீம்கள் ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்யவில்லை. இருப்பினும் துருக்கி மற்றும் துனிசியா நாடுகளைத் தவிர, அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் பலதாரமணம் வழக்கத்தில் உள்ளது. வயதான மனைவி பொதுவாகத் தூக்கி எறியப்பட்டு, இளம் மனைவி சேர்த்துக் கொள்ளப்படுகிறாள். ஒரு கணவன் இரண்டு, மூன்று மற்றும் நான்கு மனைவிகளுடன் இருக்கும் போது, அப்படிப்பட்ட குடும்பங்களில் பொறாமை மற்றும் பகை காணப்படுகிறது. முகம்மது பெண்ணுடனான தன்னுடைய அனுபவங்களின் விளைவாக, வீட்டில் உள்ள தீமைக்கு ஆதாரம் பெண் என்று கூறினார். அவர்கள் மத சம்பந்தமான காரியங்களை புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்று கூறினார். (மசூத் இஃப்ன் ஹான்பல் 11,373). குடும்ப சுமையை சுமக்கக் கூட தகுதியற்ற கழுதை என்று கருதப்பட்டாள். பெண்ணால் ஆளப்படும் ஒரு நாடு கண்டிப்பாக அழிந்து போகும் என்று கூறினார்.

ஒரு ஆண் தன்னுடைய மனைவியை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று குரானும், ஹாதீத்தும் கற்றுக்கொடுக்கிறது. அவன் முதலாவது அவளை எச்சரிக்க வேண்டும். (அவளது கலகத்தினிமித்தம் அவன் பயப்படும் தருணத்தில்) பின்பு அவளுடன் படுக்க அவன் மறுதலிக்கிறான். இறுதியில் அவனுக்கு அவள் அடங்கி நடக்கும் வரை, அவன் அவளை அடிக்கிறான். (சுரா-அன்னிஸôவு 4:34).

கணவனின் சாட்சியில் பாதி மதிப்பைத் தான் பெண்ணின் சாட்சி நீதிமன்றத்தில் பெறுகிறது. ஆகவே ஒரு மனிதனின் வார்த்தை என்பது இரு பெண்களின் சாட்சிக்கு சமமாக இருக்கிறது. கணவனின் சொத்தில் எட்டில் ஒரு பங்கைத்தான் மனைவி பெறுகிறாள். அவனுக்கு மகன் குழந்தையாக இருந்தாலும், அது கால் பங்கைப் பெறுகிறது. அவனது மதிப்பு என்பது அவனது தாயை விட இரட்டிப்பாக உள்ளது. சொத்தைப் பிரிக்கும் போது அந்த மனைவி முன்பு கணவனின் உறவினர்களும் வரலாம். (சுரா-அன்னிஸôவு 4:7-11)

கணவனுக்கு மட்டுமே பிள்ளைகள் சொந்தம். விவாகரத்து செய்யப்பட்ட மனைவி குழந்தைகள் பருவநிலையை அடையும் வரை, அவர்களை வளர்க்கக் கூடிய பாக்கியத்தைப் பெறலாம். பொதுவாக மனைவி அவளது கணவனுடன் தனித்து வாழ முடியாது. அவள் முழுக் குடும்பத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும். அங்கு (கணவனின் தாய்) மாமியாரின் வார்த்தை தான் முதலும் கடைசியுமாக இருக்கும். வாழ்வின் பிரச்சினைகளை கணவனும், மனைவியும் ஒத்திசைந்து ஒற்றுமையுடன் எதிர்கொள்வது இஸ்லாமிய திருமணத்தில் முக்கியமான கொள்கை அல்ல. அவர்கள் சந்ததி தொடர்வதற்கான ஒரு அச்சாரமாகத் தான் திருமணம் காணப்படுகிறது. மனைவி என்பவள் கணவனுக்கு சேவை செய்யும் ஒரு உயர்நிலை பணியாளாக இருக்கிறாள். அந்த சந்ததி பெருக, அநேக குமாரர்களை பெற்றுக் கொடுப்பது தான் அவளது பணி. அவள் அநேக ஆண் பிள்ளைகளை பெற்றால், அவளது செல்வாக்கு அதிகரிக்கும். அவள் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தால் அவர்கள் கூறுவார்கள். “ஓ வெட்கக் கேடானது”

திருமணமான பெண் அல்லது வாலிபப்பெண் விபசாரத்தில் பிடிபட்டால், முகம்மது இவ்விதமாக கட்டளையிடுகிறார். அவள் வாரினால் 100 முறை அடிக்கப்பட வேண்டும் அல்லது கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். ஒரு முறை வழிப்போக்கன் ஒருவனால் கருவை சுமந்த ஒரு பெண்ணை முகம்மதுவிடம் கொண்டு வந்தார்கள். அவர் அந்த பெண்ணை அனுப்பிவிட்டார். அவள் குழந்தையைப் பெற்றபின், மீண்டும் திரும்பி வரச் செய்தார். பின்பு அந்த குழந்தையை தனியே எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். எவ்வளவு பெரிய வித்தியாசம் முகம்மது மற்றும் இயேசுவிற்கு இடையில் காணப்படுகிறது. இயேசு தனது தியாக அன்பினால், அவளது விபசாரப் பாவங்களை தன் மீது சுமந்து, அப்படிப்பட்டவர்களுக்காக மரித்தார். இறைவனின் நியாயத்தீர்ப்பில் எந்த ஒரு மத்தியஸ்தரையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே தான் ஒரு முஸ்லீம் மற்றவனின் பாவங்களை மன்னிக்க முடிகிறதில்லை. இரக்கமற்ற முறையில் அவன் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறான்.

இஸ்லாமில் வெளிப்படையான விபசாரம் என்பது ஆபத்தாக இருப்பதால், அது அடிக்கடி நிகழ்வதில்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வடிவில் சட்டபூர்வமாக விபசாரத்தை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது. ஒரு முஸ்லீம் எப்போதும் தன்னுடைய மனைவிகளை தூக்கி எறிந்து, இளமையான இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியும். சில இஸ்லாமிய நாடுகள் அநேக மனைவிகளை திருமணம் செய்வதை தடை செய்திருப்பினும், இன்னும் ஆண்கள் மற்றும் பெண்களில் இஸ்லாமிய ஆவி செயல்படுகிறது.

இஸ்லாமில் பெண்களின் தாழ்வான நிலை என்பது பரதீசிலும் தொடர்கின்றது. முகம்மது கூறுகிறார், “பரதீசில் இருக்கும் கீழான மக்கள் பெண்கள் ஆவார்கள்”. பல்வேறு இன்பங்களை அனுபவிக்க மனிதர்கள் அங்கு காத்திருக்கிறார்கள். இருளான நிழலில் தங்கள் கணவன்மார்களுடன் பெண்கள் படுத்திருந்தாலும், பரதீசில் டஜன் கணக்கில் கன்னிகைகள் இன்னும் கற்புத் தன்மையுடன் இருக்கிறார்கள்”. பரதீசில் முஸ்லீம் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்து முகம்மது கூறுகிறார். “எனக்கு நரகம் காண்பிக்கப்பட்ட பொழுது, அங்கு எரிந்து கொண்டிருப்பவர்களில் 90 சதவீதம் பெண்களாக இருப்பதை நான் பார்த்தேன்.

இயேசு கிறிஸ்து குறிப்பிடும் பரதீசு முற்றிலும் நேர் மாறாக இருக்கிறது. பரலோகத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் மகிமையுடன், இறைவனின் தூதர்களைப் போல இருப்பார்கள். அங்கே திருமணம் என்பது இல்லை. இறைவனின் ராஜ்யம் என்பது புசிப்பும், குடிப்பும், திருமணமும் அல்ல. அது ஆவிக்குரிய அன்பு, சந்தோஷம், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உண்டாகும் சமாதானமாக இருக்கிறது. உண்மையான பரதீசு என்பது இந்த உலகில் இருந்து வருவது அல்ல. இயேசுவின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிடும்போது, குரான் என்பது இறை வெளிப்பாட்டினால் வந்தது என்று யாரேனும் ஒருவர் கூற முடியுமா? அது ஆண் மக்களையும் ஆளுகையையும் பெரிதும் பெருமைப்படுத்திப் பேசுகிறது. அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் தரத்திற்கு அதிக கீழான நிலையிலேயே உள்ளது.


09.7 - மனந்திரும்புதலுக்கான அழைப்பு

கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை கீழானவர்களாகப் பார்க்கக் கூடாது. வேதப்பூர்வமற்ற சுதந்திரம் என்பது இன்று அநேக மேலை நாடுகளில் இருக்கிறது. குறிப்பிடத்தக்க விகிதத்தில் விவாகரத்து ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ஐரோப்பாவிலும் இருக்கிறது. அநேக குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்வு இதனால் அழிக்கப்படுகிறது. உடைக்கப்பட்ட குடும்பங்களை விட்டு பிள்ளைகள் ஓடிப் போகிறார்கள். பள்ளிகளில் வழங்கப்படும் பாலியல் கல்வி முறையைக் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். தினசரி நாளிதழ்கள், வாராந்திர பத்திரிக்கைகள், காணொளிக் காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் படங்கள் எவ்வளவு ஆபாசம் நிறைந்தவையாக இருக்கிறது? இருப்பினும் சில பெற்றோர்கள் மட்டுமே அவைகளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.

இறைவனைக் குறித்த பயம் இல்லாததால், அபாயகரமான விளைவுகள் ஏற்படுகின்றன. ஐரோப்பாவில் அநாகரிமான வழியில் செல்லுவதற்கான சாத்தியக் கூறுகள் புகைப்பட வல்லுநர்களுக்கு இருக்கிறது. இறைவனுடனான ஐக்கியத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பாலியல் குழப்பத்தை தோற்றுவித்திருக்கிறது. பிறப்புக் கட்டுப்பாட்டு சட்டங்கள் மக்கள் எல்லையற்ற இச்சையில் வாழும்படி செய்கிறது. ஆணுறைகளைப் பயன்படுத்துவது எய்ட்ûஸ கட்டுப்படுத்தவில்லை. ஓரினச்சேர்க்கையாளர்களான ஆண்புணர்ச்சிக்காரர்கள், பெண் புணர்ச்சிக்காரர்கள், விபசாரத்தில் ஈடுபடுவோர், போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் தன்னுடைய மனைவிக்கு உண்மையற்றோர் ஆகிய அனைவரின் மீதான கடுமையான தண்டனையாக இது உள்ளது. ரோமர் 1:24-ல் பவுல் கூறுகிறார். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக. தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இறைவனின் நியாயத்தீர்ப்பு என்பது முஸ்லீம், யூதன் அல்லது கிறிஸ்தவன் ஆகியோருக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காண்பிப்பது கிடையாது. “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளையை மீண்டும் பார்ப்போம். மில்லியன் கணக்கான மக்கள் பாலியல் பாவங்களினால் ஆபத்தான நிலையில் இருப்பதை இது காண்பிக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என்ற வசனத்தின் அர்த்தம் இன்றும் மிகத் தெளிவாக அறியப்படுகிறது.

இரத்தம் ஏற்றப்படுவதன் மூலமாக அப்பாவி மக்கள் துரதிர்ஷ்டவசமாக எய்ட்ûஸப் பெற்றுக்கொள்கிறார்கள். எனவே இந்த வியாதியை உடைய ஒருவரை நியாயத்தீர்ப்பது பொருத்தமற்ற ஒன்றாக உள்ளது. நம் ஒவ்வொருவருடைய கடந்த காலத்தை இறைவன் ஒருவர் மட்டுமே அறிந்திருக்கிறார். விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒருவரை விட நாம் எந்தவிதத்திலும் சிறந்தவர்கள் அல்ல நம்முடைய இருதயங்களில் உள்ள எண்ணங்களை இயேசு அறிகிறார். அவர் கூறுகிறார். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகள், கொலைபாதகங்கள், விபசாரம், வேசித்தனம் ….. புறப்பட்டுவரும். (மத்தேயு 15:19). எய்ட்ஸ்க்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டிய முறைகளை நாம் அறிந்திருக்கத் தேவையில்லை. மாறாக, ஒவ்வொருவருக்கும் தூய்மையான இருதயம், தூய்மையான ஆவி மற்றும் புதிய சிந்தனைகள் தேவை. தாவீது இச்சைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விபசாரம் மற்றும் கொலை என்ற பாவங்களைச் செய்தான். நாம் விண்ணப்பிக்கும்படி அவன் கற்றுக்கொடுக்கிறான். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். (சங்கீதம் 51:10,11.)

இந்த வார்த்தைகளைக் கூறி உண்மையாக விண்ணப்பண்ணும் போது, நம்முடைய பாவங்களை அறிக்கையிடும் போது, இயேசு தனது தெய்வீகத்துடன் பதிலளிப்பார், “மகனே, திடன்கொள்; உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது. (மத்தேயு 9:2, மேலும் பார்க்க லூக்கா 7:48) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன், நாம் தூய வாழ்க்கை நடத்தும்படி பரிசுத்த ஆவியின் வல்லமையை, பரிசுத்தமுள்ள இறைவன் நமக்கு வழங்குகின்றார். நம்முடைய சோதனைகளில் நம்மைத் தனியாக தவிக்க விட்டுவிட்டு இயேசு ஒருபோதும் செல்வதில்லை. அவருடைய நாமத்தினால் நாம் அவைகளை மேற்கொள்ளும்படி அவர் நம்மைப் பெலப்படுத்த ஆயத்தமாயிருக்கிறார்.

www.Waters-of-Life.net

Page last modified on March 18, 2015, at 06:45 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)