Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 040 (The Complaint against the Stubborn People)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

ஈ) கடினமான மக்கள் மீது குற்றச்சாட்டு (அப்போஸ்தலர் 7:51-53)


அப்போஸ்தலர் 7:51-53
51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். 52தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள்.53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

ஸ்தேவான் தனது மெய்யான விசுவாசத்தை ஞானமுள்ள வார்த்தைகளால் அறிக்கையிட்டான். அவன் ஒரு ஹெலனிஸ்டிக் யூதனாக யூதப் பாரம்பரியத்திற்கு தனது நம்பிக்கை நிரூபித்தான். அவன் சட்ட நிபுணர்களின் பள்ளிகளில் பயிற்சி பெறவில்லை. அவனுக்கு உன்னதமான இறைவன் உடன்படிக்கையின் இறைவனாக இருந்தார். அவர் முற்பிதாக்களின் இறைவன் ஆவார். ஆபிரகாம், மோசே மற்றும் தாவீது பரிசுத்த மனிதர்களாக இருந்தார்கள். அவன் நியாயப்பிரமாணத்தையும் சாட்சியின் கூடாரத்தையும் உயர்ந்த காரியமாக கருதினான். இந்தத் தெளிவான அறிக்கையின் நிமித்தமாக அவன் சாவுக்கேதுவான வெறுப்பை தான், தன் வார்த்தைகளை கேட்டவர்களிடம் பெற முடிந்தது. அவனுடைய மக்களின் கடினமான இருதயத்திற்கு காரணமாய் இருந்தது நியாயப்பிரமாணத்தைப் பற்றிய காரியம் ஆகும். அவர்களுடைய ஆவிக்குரிய நிலையை அவன் உணர்ந்து கொண்டான். அவர்கள் மனந்திரும்ப ஆயத்தமற்றவர்களாக இருந்தார்கள். இறுதியில் பரிசுத்த ஆவியானவர் வார்த்தையால் தாக்கும்படி அவனை வழிநடத்தினார். அவருடைய நோக்கம் தொழில் சார்ந்த ரபீக்கள் மற்றம் கண்டிப்புமிக்க சட்ட நிபுணர்களின் முகங்களில் இருந்து மாய்மாலத்தின் திரையை நீக்குவது ஆகும். இந்த வாலிப மனிதன் சட்ட நியாயங்கள் மற்றும் தர்க்க முறைகள் பயின்றவன் அல்ல. ஆனாலும் அவர்களுடைய இருதயங்களின் உண்மையான நிலையை மிகவும் தெளிவாக அவர்களுக்கு காட்டினான்.

இவ்விதமாக ஸ்தேவான் தன்னுடைய நீதிபதிகளுக்கு அவர்களுடைய மனச்சாட்சியின் உண்மையை வெளிப்படுத்தினார். அவர்கள் சரீர விருத்தசேதனத்தைப் பெற்றிருந்தும் மனதிலும் அல்லது இருதயத்திலும் விருத்தசேதனம் பெறவில்லை. இதைச் சொல்லும் போது அவர்களுடனான இறைவனின் உடன்படிக்கையின் பிரசன்னத்திற்கான அடையாளங்களில் ஒன்றை உடைத்தான். ஏனெனில் யூதர்கள் இறைவனுடனான அவர்களுடைய நிலையான உறவின் அடையாளமாக விருத்தசேதனத்தை கருதினார்கள். விருத்தசேதனத்திற்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் இறைவனுக்கு எதிராக பேசியதாக கருதப்படுவார்கள்.

ஸ்தேவான் தன்னுடைய நாட்டு மக்களிடம் வெளிப்படையாக பேசினான். அவர்கள் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு எதிர்த்து நின்றார்கள். அவர்கள் இறைவனுக்கு செவிகொடுக்க விருப்பமற்றவர்களாக இருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் எதையும் கேட்பதற்கு ஆயத்தமற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயங்கள் துன்மார்க்கத்தினால் நிறைந்திருந்தது. அவைகள் நொறுக்கப்படவில்லை. அவர்கள் தங்களை நல்லவர்களாகவும், நீதிமான்களாகவும் கல்வியில் சிறந்தவர்களாகவும், மற்றும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் கருதினார்கள். மனந்திரும்புவதற்கான ஒவ்வொரு அழைப்பையும் அவர்கள் அவமதித்தார்கள். சுயமறுப்பின் சிந்தனையை ஏளனம் பண்ணினார்கள். மோசே, ஏசாயா, எரேமியா, திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு முன்னுரைத்த நியாயத்தீர்ப்பின் கடுமையான வார்த்தைகளை அவர்கள் கேட்டபோது பெரிதும் தாக்கப்பட்டார்கள். (யாத்திராகமம் 32:9; 33:3; ஏசாயா 63:10; எரேமியா 9:25; 6:10) அவர்கள் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுடைய கடின இருதயங்கள் மென்மையாக மாறவும் இல்லை. அதற்குப் பதிலாக அவர்கள் அதிக கோபம் அடைந்தார்கள்.

அருமையான சகோதரனே, இந்த தண்டனைக்கான காரணத்தை உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? மனித இருதயம் அவன் சிறுவயது தொடங்கி தீமையாய் இருக்கிறது. சிலர் மாத்திரமே மனந்திரும்புகிறார்கள். இறைவனுடைய வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். மனிதன் சுபாவத்தின்படி கலகம் செய்பவனாகவும், வன்மம் உள்ளவனாகவும் இருக்கிறான். அவன் கொண்டாடப்படுவதை விரும்புகிறான். குட்டி கடவுளாக இருந்து அவனை படைத்தவரை பகைக்கிறான். அவன் ஒருபோதும் அவருடைய வார்த்தையை கவனித்து கேட்பதில்லை.

தீமை நிறைந்த ஆவியுடன் யூதர்கள் எல்லா நல்ல தீர்க்கதரிசிகளையும் துன்பப்படுத்தினார்கள். அவர்களுக்கு இறைவனின் சித்தத்தை வெளிப்படுத்தி பிரசங்கித்தவர்களை பாடுபடுத்தினார்கள். “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்”. உண்மையான தீர்க்கதரிசிகள் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு செவி கொடுத்தார்கள். அவருடைய தீர்க்கதரிசனங்கள் சரியாக இருந்தன. அவர்கள் உலக ரட்சகரின் வருகையை அறிவித்தார்கள். அவர் நீதிமானாக்குகிறவர், நீதியுள்ளவர், தெய்வீக இராஜாவாக இருக்கிறார். அவர் அனைத்து துன்மார்க்க இருதயங்களையும் மாற்ற வல்லவர். அவர் நம்முடைய எளிய பூமியில் பரலோக ராஜ்யத்தை நிறுவுவதற்கு வல்லவர்.

கிறிஸ்துவானவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார். இருப்பினும் மாய்மாலக்காரர்கள் அவருக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. கல்வியில் சிறந்த வேதபாரகர்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை. ஸ்தேவான் யூதர்களை கிறிஸ்துவின் நம்பிக்கை துரோகிகள் என்று அழைத்தார். ஏனெனில் அவர்கள் தங்களுடைய நாட்டிற்கான இறைவனின் திட்டத்தை தவறவிட்டு விட்டார்கள். உன்னதமானவரின் குமாரனை அநீதியாகவும், தவறான முறையிலும் கொன்றார்கள். இந்த சாட்சியுடன் பரிசுத்த ஆவியானவர் மீண்டும் வெளிப்படையாக பேசினார். அவர் பிரதான ஆசாரியர்களை சாடினான். தேசத்தின் தலைவர்கள் தங்களது இருதயத்தில் குத்தப்பட்டு முற்றிலும் மனம்திரும்பும்படியாக அப்படிச் செய்தான். யூத ஆலோசனைச் சங்கம் வெறுமனே ஒப்பற்ற நாசரேத்தூர் வாலிப மனிதனை அநீதியாக கொலை செய்யவில்லை. அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை பட்சித்தார்கள். ஆதியிலிருந்து இறைவனால் நியமிக்கப்பட்ட விடிவெள்ளி நட்சத்திரத்தை அப்படிச் செய்தார்கள். இந்த செயல் அவர்களுடைய கீழ்ப்படியாமையின் உச்சகட்டத்தை குறிப்பிடுகிறது. முழு உலகத்தின் மீது பிசாசுகளின் ஆதிக்கத்தை கொண்டு வந்தது.

அப்போஸ்தலர்கள் தொடர்ந்து ஆலோசனைச் சங்கத்து உறுப்பினர்கள் மீது கொலைமற்றும் குற்றச் செயல் என்று முன்வைத்த குற்றச்சாட்டை ஸ்தேவான் முன் வைப்பதில்திருப்தியடையவில்லை. பரிசேயர்களின் உத்தமத்தின் உள்ளான பகுதிக்கு சென்று சவால்விட்டான். அவர்களிடம் இவ்விதம் கூறினான். நீங்கள் இறைவனிடமிருந்து நேரடியாக நியாயப்பிரமாணத்தைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக தேவதூதர்கள் மூலமாக நீங்கள் நீயாயத்தீர்ப்பைப் பெற்றீர்கள். மேலும் பயனற்ற குறிப்புகளையும் பெற்றீர்கள். நீங்கள் முக்கியமானதற்கும், முக்கியமற்றதற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை அறியாதிருக்கிறீர்கள். கேள்விக்குள்ளாக்கப்படும் யூத நியாயப்பிரமாணத்தை தவிர நீங்கள் எதையும் பற்றிக் கொண்டிருக்கவில்லை. நீங்கள் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளும் தகுதியுடையவர்கள் அல்ல. மேலும் நீங்கள் நீதிமான்களும் அல்ல. நீங்கள் குற்றவாளிகளாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறீர்கள். “எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம்முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும்குற்றவாளியாயிருப்பான்.(யாக்கோபு 2:10)

இப்படிப்பட்ட வலிமையான மற்றும் ஆற்றல் மிக்க வார்த்தைகளினால் ஸ்தேவான் பழைய ஏற்பாட்டு நீதியின் அஸ்திபாரங்களை அசைத்தான். தேவாலயம், விருத்தசேதனம், நியாயப்பிரமாணம், ஒய்வுநாள் ஆகியவை இறைவனுடைய உடன்படிக்கையின் இரகசியங்கள் என்றும் தூண்கள் என்றும் யூதர்கள் நம்பினார்கள். இறைவனும் தன்னை இஸ்ரவேல் மக்களுக்கு உட்படுத்துகிறார். இப்போது ஸ்தேவான் வெளிப்படையாக, ஆலயம் வெறுமையாய் உள்ளது என்றும் அவர்களது இருதயங்கள் விருத்தசேதனடையவில்லை என்றும் சாட்சியிட்டான். அவர்களது நியாயப்பிரமாணம் உண்மையாய் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற கூறினான். ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது இன்னொருவர் வந்து, அதை அடியில் இழுத்து தள்ளிவிடுவதைப்போல இந்தக் குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த வீழ்ச்சி மிகவும் பெரியது. வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் பயம் மற்றும் கொடுஞ்செயலால் நிறைந்திருந்தார்கள். மற்றவர்கள் கோபங்கொண்டு பற்களை கடித்தார்கள். நரகம் அவர்களது மனங்களை ஆட்கொண்டிருந்தது.

விண்ணப்பம்: பரிசுத்தமான இறைவனே, என் மனம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு துரோகத்தில் இருந்தும் என்னை காப்பாற்றும். பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிய கற்றுத்தாரும். எனது மீறுதலை மன்னியும். இறைவனுக்கும் மனிதர்களுக்கும் எதிரான கீழ்ப்படியாமையின் சிந்தனைகளை என்னை விட்டு அகற்றம். எனது இருதயத்தை விருத்தசேதனம் செய்யும். என்னை மாற்றும் எனக்கு கேட்கும் செவிகளைத் தாரும். சுயத்திலிருந்து என்னை காப்பாற்றும். நான் உம்மை வெறுக்காதபடி, உம்மை நேசிக்க உதவும். உமது கரங்களில் என்றென்றும் என்னை ஒப்புவிக்கிறேன்.

கேள்வி:

  1. ஆலோசனைச் சங்கத்தில் ஸ்தேவான் அவனுடைய குற்றச்சாட்டுகளில் கூறிய முக்கியமான கருத்துகள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)