Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Romans - 014 (The Wrath of God against the Nations)
This page in: -- Afrikaans -- Arabic -- Armenian -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Hebrew -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Malayalam -- Polish -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

ரோமர் - கர்த்தரே நம்முடைய நீதி
ரோமருக்கு பவுல் எழுதின நிரூபத்திலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - இறைவனுடைய நீதி எல்லாப் பாவிகளையும் நியாயந்தீர்க்கிறது, கிறிஸ்துவுக்குள் எல்லா விசுவாசிகளையும் நீதிக்குட்படுத்துகிறது, பரிசுத்தப்படுத்துகிறது. (ரோமர் 1:18-8:39)
அ - முழு உலகமும் துன்மார்க்கத்தின் கீழ் இருக்கிறது. இறைவன் அனைவரையும் தமது நீதியோடு நியாயந்தீர்க்கிறார் (ரோமர் 1:18-3:20)

1. தேசங்களுக்கு எதிரான இறைவனின் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது (ரோமர் 1:18-32)


ரோமர் 1:29-32
29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், 30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், 31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

பத்துக்கட்டளைகளின் வியாக்கியானமாக பவுல் நம் கண்களுக்கு முன்பாக பாவங்களின் பட்டியலை வைக்கிறான். நாம் கூறுவது போல நேர்மறையான வழியில் அவன் கூறவில்லை. தத்துவஞானிகள் கூறுவது போல இந்த அளவீடுகளை வைத்து நம்மை அளவிட மற்றும் நியாயந்தீர்ப்பதை பற்றி அவன் கூறவில்லை. ஆனால் பயத்துடன் நம்மை நாமே உணர்ந்து கொள்ளவும், நமக்குள் இருக்கும் பாவத்தின் எல்லா சாத்தியக் கூறுகளையும் காணவும் செய்கிறான். சிருஷ்டிகர் இல்லாமல் வாழுகிற ஒருவன் தவறான செயல்கள் மற்றும் அநீதியினால் நிறைந்திருப்பான். பரிசுத்த ஆவிக்கு இடம் கொடுக்காமல், தீய ஆவியின்படி நடக்கிறவர்கள் அதற்குரிய கனிகளைத் தான் கொடுப்பார்கள். ஒன்று, மனிதன் கிறிஸ்துவில் வாழவேண்டும். அல்லது தீமையில் வாழ வேண்டும். இதற்கு இடைப்பட்ட நிலை ஒன்று இல்லை.

ஆண்டவராகிய இயேசுவும், அப்போஸ்தலனாகிய பவுலும் விபசாரம் என்பதை முதல் பாவமாகக் குறிப்பிடுகிறார்கள். தூய்மையான அன்பை விபசாரம் கெடுக்கின்றது. வாழ்க்கைத் துணை கொண்டிருக்கும் நம்பிக்கையை சீரழிக்கிறது. இறைவனற்ற நிலைக்கும், அவிசுவாசத்திற்கும் கதவுகளை விசாலமாகத் திறக்கின்றது. இறைவனின் வல்லமையினால் சுயத்திற்கு மரிக்காதவர்களின் வாழ்வில் பாவம் நிறைந்த இச்சை ஆளுகை செய்கின்றது. மக்களில் பெரும்பாலானோர் சிந்தனை, வார்த்தை அல்லது செயலில் விபசாரக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அசுத்தமானவர்கள், கறைபடிந்தவர்கள். உன்னை நீ அறிவாயா? உன் மனச்சாட்சி உன்னிடம் தெளிவாகப் பேசுகிறது. உனது கடந்த காலத்தை மறுதலியாதே. நீ செய்ததை அறிக்கையிடு.

இறைவன் இல்லாமல் மனிதன் நீதிமானாக இருக்க முடியாது என்பது உனக்குத் தெரியுமா? அவன் துன்மார்க்கனாக இருக்கிறான். மனுக்குலமானது துன்மார்க்கத்திலும், பாவத்திலும் இருக்கும் போது ஏன் கல்விமான்கள் மனிதநேயம், கல்வி மற்றும் சமூகசேவை என்று பேசுகிறார்கள்? நமக்குத் தேவை மறுமலர்ச்சி அல்லது நாகரீக முன்னேற்றம் அல்ல. நமக்குத் தேவை புதிய படைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனங்களும், இருதயங்களுமே ஆகும்.

இறைவனை அறியாதவன் பணத்தை நேசிக்கிறான். அழிந்து போகும் இந்த பணக் கடவுள் மீது தன்னுடைய வாழ்வைக் கட்டுகிறான். அவன் பணம் பெருகுவதைப் போல, அவனது பண ஆசையும் பெருகுகின்றது. அது அவனை பெருமைக்கு நேராகவும், அழிவுக்கு நேராகவும் நடத்துகிறது. மேலும் தீமையின் ஆதிக்கத்திற்கும், வெறுக்கத்தக்க ஆசைகளுக்கும் அவனை வழிநடத்துகிறது.

வழிவிலகிப்போன மனத்தை உடையவர்கள் பொறாமை, தந்திரம், பழிஉணர்வு, மாய்மாலம், வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி இவைகளால் ஆளப்படுகிறார்கள். ஒரு பொறாமையுள்ள மனிதன் தனது எதிரிகள் தனது அயலகத்தாருக்கு எதிராக துன்மார்க்கமான காரியங்களைச் செய்கிறான். அவர்கள் மீது அன்பு உள்ளவன் போல் அவன் தோற்றமளிக்கிறான். ஆனால் அவனுடைய இருதயம் விரியம் பாம்புகளின் பொந்து போல் இருக்கிறது.

பொதுவாக ஒரு பொறாமையுள்ள மனிதன் மற்றவர்கள் மீது பொறாமை மற்றும் வீண் வைராக்கியம் உள்ளவனாக இருப்பான். மற்றவர்களின் ஆசீர்வாதங்களில் அவன் மகிழ்ந்திருக்க மாட்டான். ஏனெனில் அவர்களைப் போல அதிக செழிப்புடனும், வெற்றியுடனும் வாழ அவன் விரும்புகிறான். அவன் எல்லோரையும் விட பணக்காரனாக, அதிக அழகுள்ளவனாக, சிறந்த தோற்றமுள்ளவனாக, மதிக்கப்படத்தக்கவனாக இருக்க விரும்புகிறான். கஞ்சத்தனமும், பொறாமையும் அநேக தீய செயல்களுக்கு ஆரம்பமாய் இருக்கிறது. இன்றைய விளம்பரங்கள் பொறாமை மற்றும் பேராசையை மக்களுக்குள் தூண்டி தங்கள் பொருட்களை எந்த விலை கொடுத்தாவது வாங்கும்படி செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட அழிவுக்கு நேராக ஆசைகள் நன்மை செய்யாதபடி மனதை விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், கொலை, பகை, கடினமாக பேசுதல் மற்றும் அவமதிப்பாக பேசுதல் இவைகளுக்கு கதவைத் திறந்து விடுகிறது. புறக்கணித்தல், அலட்சியம் பண்ணுதல், மற்றவர்களை வெறுத்தல் இவைகளை சிந்தனையில் எண்ணும்போதே, அது பாவம் என்று இயேசு கற்றுக்கொடுத்ததை நினைவில் கொள்ளுங்கள். அது கொலைக்கு சமமான பாவம். ஏனெனில் நம்முடைய உள்நோக்கம் மற்றவர்களை அழிப்பதாய் உள்ளது. இறைவனின் பார்வையில் நாம் அனைவரும் கொலைகாரர்களாக, கொலைகாரர்களின் பிள்ளைகளாக இருக்கிறோம்.

நமது சமுதாயம் மற்றும் குடும்பங்களில் நாம் பிரிவுகளை மற்றும் குழுக்களை ஏற்படுத்தும் போது, உடனடியாக இந்த அழிவின் ஆவியானது செயல்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்கு சமாதானத்தை தந்து, பிரிந்திருக்கும் குழுக்களுக்கு இடையில் சமாதானத்தை கொண்டு வர எண்ணும்போது, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மத்தியில் பிரிவினை மற்றும் ஒழுங்கில்லாமைக்கு நீ காரணமாய் இருக்கிறாயா? நீ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாயா? அல்லது மன்னிப்பு மற்றும் ஒப்புரவாகுதலை நீ கொண்டு வருகிறாயா? பகைக்கு ஒரு முடிவை கொண்டு வருகிறாயா? அதற்காக உன்னை நீயே தியாகம் செய்கிறாயா?

ஏமாற்றுதல் என்பது பிசாசின் குணம். நம்முடைய ஆண்டவரிடம் துளியளவு கூட இல்லாத ஒரு குணம். தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகள், மற்றும் நயவஞ்சக வார்த்தைகள் மூலம் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றுகிறவன் தீமையின் மகன் ஆவான். உண்மை, வெளிப்படையானதன்மை மற்றும் பாரபட்சமின்மை என்பது இறை ஆவியின் கனிகள் ஆகும். ஆனால் பொய் மற்றும் அதன் கிளைகள் மிகுந்த தீமை வாய்ந்தவை.

நம்முடைய பெயரை உயர்த்திக் காண்பிப்பதற்காக புறங்கூறுதல் மற்றும் பிறரை அவமதிப்பாகப் பேசுதல் நரகத்தின் மற்ற கனிகள் ஆகும். நம்முடைய உதடுகள் விஷத்தினால் நிறைந்திருக்கிறது. நம்முடைய கால்கள் மற்றவர்களுக்கு தீவினை செய்ய தீவிரிக்கிறது. நம்மைநாமே காப்பாற்றிக் கொள்வதற்கும், நம்மை முதன்மைப்படுத்துவதற்கும், நம்முடைய நெருங்கிய உறவினர்களையும் மறுதலிக்க நாம் ஆயத்தமாயிருக்கிறோம்.

மனமின்றி அல்லது கவனமின்றி இப்படிப்பட்ட பாவங்களை செய்கிற அனைவரும் இறைவனை வெறுக்கிறார்கள். ஆண்டவரை நேசிக்கிற அனைவரும், மக்களையும் அவ்விதமாகவே நேசிக்கிறார்கள். பொறுமையின்றி நீங்கள் மக்களிடம் பேசும்போது, அவர்களை அவமதிக்கிறீர்கள், அவர்களை நியாயம் தீர்க்கிறீர்கள். இந்த அக்கிரமங்களோடு பேசுகின்ற ஆவி உங்கள் சுயமாக இருக்கின்றது. நீங்கள் சிலரை வெறுக்கும் போது, இறைவனை நீங்கள் வெறுக்கிறீர்கள். ஏனெனில் இறைவன் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனின் நிலைத்திருக்கிறான். மன்னிப்பு, ஆசீர்வாதம், அன்பற்றவர்களை நேசிப்பது, ஒருமனம் இவைகள் அனைத்தும் அன்பின் அடிப்படையாக இருக்கிறது.

பிசாசானவன் தன்னுடைய உள்ளான இருதயத்தில் பெருமை மிக்கவனாய் இருப்பதால், எல்லா துன்மார்க்கரின் நிலையும் அப்படி உள்ளது. இதனால் அவர்களது இருதயத்தில், எல்லாவித பாவங்கள், பொறாமை மற்றும் குறைபாடுகள் உள்ளன. அவர்கள் தங்கள் கறைபட்ட ஆத்துமாக்களை மூடி மறைக்க முயலுகிறார்கள். அவர்கள் மயிலைப்போல தங்களைத் தாங்களே பெருமைமிக்கவர்களாக, அழகுள்ளவர்களாக எண்ணிக்கொண்டு, தங்களை கெடுத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் கொடுமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இச்சைகளின்படி நடக்கிறார்கள். அவர்கள் பொறாமையினாலும், குரோதத்தினாலும் நிறைந்துள்ளார்கள். அவர்கள் நல்லவர்களாக, வரம் பெற்றவர்களாக, முக்கியமானவர்களாக தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களை இறைவன், நெறிக்கெட்டவர் என்ற ஒரு வார்த்தையை கூறி நியாயம்தீர்க்கிறார்.

அவர்கள் இரக்கத்தை காண்பிப்பது போல் செயல்பட்டு, தங்கள் குற்றங்களை அதிகப்படுத்தி, மற்றவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களது தீய ஆவி கீழ்ப்படியாமையின் வடிவத்தில் அவர்களது குடும்பங்களில் தோன்றுகிறது. இறைவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் தங்களுடைய பெற்றோர்களை கனப்படுத்துகிறதில்லை. சேவை, தியாகம், அன்பு மற்றும் வேலைசெய்தல் இவைகளுக்கு ஆயத்தமாயிராமல், அவர்கள் பணம், சுதந்திரம், உரிமைகள் பற்றி தீவிரமாக பேசுகிறார்கள். அவர்கள் அன்பை வெளிப்படுத்தாமல், தங்களது கல்வியறிவற்ற பெற்றோர்களை புறக்கணித்து, அனுமதிக்கிறார்கள். இது மிகப்பெரிய மூடத்தனம் என்பதை அவர்கள் அறியவில்லை. இறைவனுக்குப் பயப்படுதலே உயர்ந்த ஞானம். இறைவனின் ஆவிக்கு தங்களை ஒப்புக்கொடாதவர்கள் எந்தவொரு காரியத்தையும் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அனைத்து காரியங்களையும் தவறாக பார்க்கிறார்கள். அவர்கள் முழு சமுதாயம் மற்றும் தங்களுக்கான நிலையை இழந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்நிலையில் அவர்கள் தங்களில் உண்மையாயிருக்கும் பெலத்தை பெற்றிருக்கவில்லை. ஆகவே அவர்கள் இப்படி செயல்படுகிறார்கள். இறைவனுக்கு தங்களை ஒப்புக் கொடுக்காதவர்கள் மனிதனுடன் இணைந்து செயல்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள். இறைவனின் உண்மை தான் ஒரு உண்மையுள்ள மனிதனை உருவாக்குகிறது. ஆனால் ஆண்டவர் இல்லாமல் வாழுகிற ஒருவன் இழந்து போனவனாக, பரிதாபத்திற்குரியவனாக இருக்கிறான்.

நம்முடைய இறைவன் அன்பு, இரக்கம், நேசம் உள்ளவராக இருக்கிறார். எல்லா நன்மைக்கும் காரணராய் இருப்பவரை விட்டு விலகுகிறவர்களுக்கு ஐயோ. அவர்கள் இருதயம் கல்லை விட கடினமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களையே நேசிக்கிறார்கள். மற்றவர்களை வெறுக்கிறார்கள். உன்னை நீ ஆராய்ந்து பார். நீ உனது எதிரிகளை நேசிக்கிறாயா? ஏழைகள் மீது நீ இரக்கம் காண்பிக்கிறாயா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக, அவர்களுடைய பாவங்கள் நிமித்தம் பாடுபட்டார். நீங்கள் உங்களுடைய மக்களை நியாயம்தீர்க்கிறீர்களா அல்லது அவர்களை நேசிக்கிறீர்களா? நீங்கள் இரக்கம் மற்றும் அன்பு இல்லாதவர்களாக உள்ளீர்களா? அல்லது இறைவனின் பரிசுத்த ஆவியானவர் அவர் முன்பாக நீ ஒரு ஆசாரியனாக நிற்கும்படி உன்னை புதுப்பித்துள்ளாரா?

நம்முடைய இறைவன் அன்பு, இரக்கம், நேசம் உள்ளவராக இருக்கிறார். எல்லா நன்மைக்கும் காரணராய் இருப்பவரை விட்டு விலகுகிறவர்களுக்கு ஐயோ. அவர்கள் இருதயம் கல்லை விட கடினமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களையே நேசிக்கிறார்கள். மற்றவர்களை வெறுக்கிறார்கள். உன்னை நீ ஆராய்ந்து பார். நீ உனது எதிரிகளை நேசிக்கிறாயா? ஏழைகள் மீது நீ இரக்கம் காண்பிக்கிறாயா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக, அவர்களுடைய பாவங்கள் நிமித்தம் பாடுபட்டார். நீங்கள் உங்களுடைய மக்களை நியாயம்தீர்க்கிறீர்களா அல்லது அவர்களை நேசிக்கிறீர்களா? நீங்கள் இரக்கம் மற்றும் அன்பு இல்லாதவர்களாக உள்ளீர்களா? அல்லது இறைவனின் பரிசுத்த ஆவியானவர் அவர் முன்பாக நீ ஒரு ஆசாரியனாக நிற்கும்படி உன்னை புதுப்பித்துள்ளாரா?

நீங்கள் பாவத்திலிருந்து முழுமையாக மனந்திரும்பவில்லையென்றால், மற்றவர்களின் பாவச்செயல்களில் ஒரு திருப்தியை பெறும் அளவிற்கு உங்கள் பாவம் பெருகிவிடும். நீங்கள் பாவத்தை இன்பமாய் செய்வதுமட்டுமல்லாமல், மற்றவர்கள் செய்கின்ற பாவங்களிலும் இன்பம்காண ஆரம்பிப்பீர்கள். அப்பாவச்செயலை செய்யும்படி அவர்களை தூண்டுவீர்கள், வஞ்சிப்பீர்கள். உங்கள் சொந்த பாவங்களின் பாதிப்புகளை அவர்களுக்கு கொண்டு வருவீர்கள். இது மிக மோசமான ஓர் செயல். நீ மட்டும் தீமையுடன் இருப்பது போதாதா? உன்னுடைய சமுதாயத்தையும் நீ பாழ்படுத்த வேண்டுமா? உன்னை நீயே பார். நீ உன் பாவங்களில் திருப்தியற்றிருக்கிறாயா? மற்றவர்கள் கடின இருதயத்துடன் இருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைகிறாயா? அல்லது உண்மையான மனந்திரும்புதலுடன் கண்ணீர் சிந்துகிறாயா? உனக்காக? உன்னுடைய மக்களுக்காக? இறைவனின் ஆவியானவர் உன்னை மெய்யான மனந்திரும்புதலுக்குள் கொண்டு வந்துள்ளாரா? அல்லது இன்னும் நீ இறுமாப்பு உள்ளவனாய் இருக்கிறாயா?

விண்ணப்பம்: இறைவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும். என்னுடைய இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் என்னுடைய செல்களும் பாவத்தால் நிறைந்துள்ளது. தீய சிந்தனைகளின் பிறப்பிடமாக நான் இருக்கிறேன். உமது கோபத்தில் நான் அழியக் கூடியவன். உமது நியாயத்தீர்ப்பு நீதியானது. என் மீது பொறுமையாயிரும். உமது நீதியின்படி என்னை அழித்துவிடாதிரும். நாங்கள் நரகத்திற்கு செல்லாதபடி என் நண்பர்கள், அயலகத்தாருடன் என்னையும் நீர் மாற்றும். பாவத்தைக் குறித்த அறிவை என் மக்களுக்கும், எனக்கும் தாரும். நீர் எனக்கு புதிய இருதயத்தைத் தாரும். புதிய படைப்பாக என்னை மாற்றும். என் மீது இரக்கமாயிரும். இறைவனே உமது மிகுந்த இரக்கத்தின்படி, என்னை விட்டு உமது பரிசுத்த ஆவியானவரை எடுத்துப் போடாதிரும்.

கேள்வி:

  1. நம்முடைய உலகில் இன்று பெரும்பாலும் பொதுவாக காணப்படக்கூடிய பாவப்பட்டியலில் உள்ள ஐந்து பாவங்கள் என்ன?

சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித
அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து
வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

(ரோமர் 1:18)

www.Waters-of-Life.net

Page last modified on August 07, 2021, at 04:37 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)