Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
14. அனனியா; சப்பீராளின் மரணம் (அப்போஸ்தலர் 5:1-11)அப்போஸ்தலர் 5:7-11 இறைவனின் இந்த நியாயந்தீர்ப்பினால் திருச்சபை அதிர்ந்தது. ஒவ்வொருவரும் ஆண்டவருடைய வெளிச்சத்தில் தங்கள் சொந்த பாவ வாழ்வின் தீமைகளைக் கண்டார்கள். இறைவனின் கோபத்தினால் அடிக்கப்படுவதை எண்ணிப் பயந்தார்கள். அநேகர் இறைவனுக்கு முன்பாக கண்ணீரோடு, பாவத்திலிருந்து, மனந்திரும்பினார்கள். பயத்துடனும், நடுக்கத்துடனும் பரிசுத்தாமாக்கப்பட்டார்கள். வாலிபர்கள் வந்து மரித்த மனிதனின் சரீரத்தை துணிகளால் சுற்றி கொண்டு போனார்கள். நடுங்கிய இருதயத்துடன் அவர்கள் அவனுடைய சரீரத்தை கொண்டு போனார்கள். இடிமுழக்கம் வந்து தாக்குவதைப் போல பரிசுத்த ஆவியானவரின் வார்த்தை வந்து தாக்கியதை அவர்கள் பார்த்திருந்தார்கள். சரீரத்தை சுமந்து சென்றவர்கள் நிச்சயம் விண்ணப்பம் செய்திருப்பார்கள், இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணித்திருப்பார்கள். அவர்கள் பண ஆசையை முற்றிலும் தவிர்த்துவிட்டார்கள். மரித்த மனிதனின் மனைவியிடம் அவளது கணவனின் வஞ்சகத்தை இறைவன் தண்டித்ததின் மூலம் ஏற்பட்ட சடுதியான மரணத்தைப் பற்றிக் கூற சபை அங்கத்தினர்களில் ஒருவருக்கும் துணிவில்லை. அவளிடம் இதைப் பற்றி அவர்கள் கூறாதபடி பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஓர் தனிப்பட்ட நியாயத்தீர்ப்பை ஆண்டவருடைய ஆவியானவர் கொண்டு வந்தார் என நினைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து சப்பீராள் வந்தாள். அவர்கள் கொடுத்த பெருந்தொகையை எண்ணி சபையார் பாராட்டுவார்கள் என்ற பெருமையுடன் வந்தாள். பேதுரு அவளருகில் உடனடியாக சென்று, “நிலத்தை இவ்வளவுக்குத் தான் விற்றீர்களா?” என்று கேட்டான். அந்தப் பெண்ணுக்கு மனந்திரும்பும் படியான ஓர் வாய்ப்பை கொடுக்கும்படி அப்போஸ்தலர் விரும்பினார். இறைவனைப் பற்றிய சத்தியத்தை அவள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அவள் கணவனுக்கு சரியான ஆலோசனை கொடுக்க தவறினாள். கணவனுடன் இணைந்து அவளது விருப்பத்தின்படி தவறான காரியத்தை செய்தாள். அவள் சத்தியத்திற்காக நிற்கும்படி அவனை வேண்டிக்கொள்ளவில்லை, தன்னை தாழ்த்தவில்லை. அவனது வஞ்சகமான எண்ணத்திற்கு அவளும் துணை நின்றாள். ஒருவேளை அவள் எல்லாப் பணத்தையும் கொடுக்காதபடி அவனிடம் பேசியிருக்கலாம். நம்முடைய குடும்பத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கலாம்.அவள் தனது பொய், பெருமை மற்றும் மாய்மாலத்தினால் தனது கணவனுடன் ஒத்திசைந்தவளாய் உள்ளே பிரவேசித்தாள். பேதுரு அவளது கணவனுக்குச் செய்தது போலவே, இவளுடைய மாய்மாலத்தின் முகத்திரையையும் கிழித்தார். திருச்சபையின் நடுவிலே அவளது வஞ்சக எண்ணத்தில் உருவான தீமையை குறித்து ஆச்சரியத்துடன் அவர் அவளிடம் கேட்டார். ஆண்டவருடைய ஆவியானவரை சோதிக்கிறதற்கு நீயும், உனது கணவனும் ஒருமித்தது என்ன? கணவனுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதற்கு முன் இறைவனுக்கு கீழ்ப்படிவது திருமண வாழ்வில் முக்கியம். நமது குடும்பங்களில் மனிதனுக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவது முக்கியம். கணவன் தீமை செய்யத் தூண்டப்பட்டபோது, அவனது மனைவி அவளை எச்சரித்திருக்க வேண்டும். அவனது வார்த்தையை தவிர்த்திருக்க வேண்டும், அவனுக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்போது அவன் குற்றம், பொறாமை மற்றும் சுயநலத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கக் கூடும். சப்பீராளும், அவளது கணவனும் சாத்தானின் ஆவிக்கு இடம் கொடுத்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக செயல்பட்டார்கள். அவர்கள் பெருமை, பொய் மற்றும் மாய்மாலத்தின் ஆவிக்கு இடம் கொடுத்தார்கள். நீதி மற்றும் இறைபக்தி நிறைந்த வட்டத்திற்குள் இத் தீய ஆவியுடன் அவர்கள் நுழைய முற்பட்டார்கள். அது பரிசோதிக்கப்படவில்லையென்றால் திருச்சபையில் உள்ள பரஸ்பர அன்பை கொன்றுவிடும். சத்தியத்தை அவர்களது காலடியின் கீழ் போட்டுவிடும். நிலத்தை விற்ற தொகையில் முழுப்பணத்தையும் கொடுக்கும்படி அப்போஸ்தலர்கள் கேட்கவில்லை. சபை முன்பு தங்கள் பெருமையை நிலை நாட்ட, அவர்கள் இருவரும் இந்த பொய்யைச் சொன்னார்கள் இந்த வஞ்சகம் நிறைந்த பெண்ணின் மீதும் இறைவனின் நியாயத்தீர்ப்பு வந்தது. வாழ்வு தரும் ஆண்டவர் அப்போஸ்தலர் பாதத்தில் அவள் மரிக்கும்படி செய்தார். தனது வாழ்வை முழுமையான பலியாக ஒப்புக்கொடுக்க விருப்பமற்றவளாக செயல்பட்ட அதே இடத்தில் அவள் மரித்தாள். அவளது வீழ்ச்சி பயங்கரமானதாய் இருந்தது. திருச்சபையில் ஒவ்வொரு பெண்ணும் வீட்டில் கணவன் முன்பு தங்கள் ஆவிக்குரிய பொறுப்பின் அர்த்தத்தை குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்கள். பெண்கள் தங்கள் கணவன்மாரை பரலோகிற்கு நேராக ஈர்க்க முடியும் அல்லது நரகத்தில் தூக்கி எறிய முடியும். இறைவன் மீது நம்பிக்கை வைத்த தாழ்மை மற்றும் கவனமுள்ள பெண்கள் தங்கள் விண்ணப்பங்கள் மூலம் கணவனால் வரும் சோதனைகளை மேற்கொண்டார்கள். தனது கணவனை மேன்மைப்படுத்தும் ஒவ்வொரு பெண்ணும் தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து சாத்தானின் பிடியிலிருந்து புகழ், பகட்டு மற்றும் செல்வவளம் போன்ற காரியங்களில் வீழ்ச்சியடையாமல் தங்களை காத்துக்கொண்டனர். கிதரோன் பள்ளத்தாக்கில் கணவனை அடக்கம் பண்ணிய இடத்திற்கருகில் இப்பெண்ணையும் அடக்கப்பண்ண வாலிபர்கள் சுமந்து கொண்டு சென்றபோது அவர்களின் இருதயம் படபடத்தது. சபை மக்கள் அனைவருக்கும் இச்சம்பவம் ஒரு பாடமாய் அமைந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த திருமணமான தம்பதியர், ஒரு அப்பா, ஒரு அம்மா இருவரும் ஒரே நாளில் ஒரே சபையில் மரித்தார்கள். பரிசுத்த ஆவியானவருக்குள் ஒருவருக்கொருவர் தங்களை பெலப்படுத்திக் கொண்ட விசுவாசிகள் அனைவருக்கும் இது மிகப்பெரிய அடியாக காணப்பட்டது. அவர்கள் பிரமிப்புடன் காணப்பட்டார்கள். இந்த தம்பதியர் மூலம் நாம் பாடம் கற்றுக்கொள்வோம். இச்சம்பவம் தரும் எச்சரிப்பை அலட்சியம் பண்ண வேண்டாம். நமது இருதயங்ளின் நிலையைப் பார்க்கும் போது நாம் அவர்களைவிட சிறந்தவர்களா? எல்லா காலங்களிலும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அனனியா, சப்பீராள் ஓர் எச்சரிப்பாக மாறினார்கள். நமது இறைவன் வைராக்கியமுள்ளவர் மற்றும் பட்சிக்கிற அக்கினி போன்றவர் என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார்கள் விண்ணப்பம்: பரிசுத்தமுள்ள இறைவனே, நீர் சர்வஞானம் உள்ளவர். நீர் எங்கள் கடந்த காலம், நிகழ்காலத்தை அறிகிறீர். எங்கள் சுயத்திலிருந்து எங்களை விடுவியும். எங்களை சோதனைக்குட்படப் பண்ணாதிரும். பணம், அகங்காரம் மற்றும் பொய்யில் இருந்து எங்களை விடுவியும். உமது குமாரனின் இரத்தத்தினால் எங்களை முழுவதும் பரிசுத்தப்படுத்தும். எங்கள் திருச்சபையில் நேர்மையுள்ள குடும்பங்களை உருவாக்கும். ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசும் தம்பதியரைத் தாரும். ஆமென். கேள்வி:
|