Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 086 (The Holy Trinity descends on believers)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 3 - அப்போஸ்தலர்கள் நடுவில் வெளிச்சம் ஒளிர்கிறது (யோவான் 11:55 - 17:26)
இ - மேலறையில் பிரிவுபசாரப் பிரசங்கம் (யோவான் 14:1-31)

2. பரிசுத்த திரித்துவம் தேற்றரவாளன் மூலமாக விசுவாசிகளில் இறங்குகிறார்கள் (யோவான் 14:12–25)


யோவான் 14:12
12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

இறைவனை அறிதல் என்பது ஒரு தத்துவமோ தர்க்க சாஸ்திரமோ அல்ல. மற்ற அனைத்து அறிவுகளும் இறுமாப்பை உண்டுபண்ணும். ஆனால் இந்த அறிவோ இறைவனுடைய அன்பையும் குமாரனுடைய இரட்சிப்பையும் பற்றிய அறிவாகும். அது சேவை செய்வதற்கான விடுதலையைக் குறிக்கிறது. கிறிஸ்து தம்முடைய சீடர்களுக்கு புதிய கட்டளையைக் கொடுத்தார். “வார்த்தையிலும் செயலிலும் தெய்வீக அன்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.”

இயேசு தங்களை விட்டுப் போகப்போகிறார் என்பதைப் புரிந்துகொண்ட சீடர்கள் தங்களுக்குப் பாதுகாப்பும் இறைவனைக் குறித்து இன்னும் அதிக அறிவும் தேவை என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்கள் உலகம் முழுவதும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்குத் தகுதியடையும்படி பிதாவின் மீதான அவர்களுடைய விசுவாசத்தை இயேசு உறுதிப்படுத்தினார்.

இப்போதிருக்கும் அவர்களுடைய கவலைகளை நீக்குவதல்ல முக்கியமானது. அவர்களுக்கு இறைவன் வைத்திருக்கும் பணியைச் செய்வதற்கு அவர்களை ஆயத்தம் செய்ய வேண்டும். பிதாவையும் குமாரனையும் குறித்த அறிவு நம்மைப் பெருமையிலிருந்து காத்து, தாழ்மையுடன் பணிசெய்ய வழிநடத்துகிறது. என்னை விசுவாசிக்கிறவன் எவனும் செயல்படுகிறவனாக இருப்பான். வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிராமல் தியாகத்தின் பாதையில் நடப்பான் என்று இயேசு குறிப்பிட்டார். எவ்வளவு தூரம் ஒரு விசுவாசி தன்னை மறுதலித்து கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறானோ அவ்வளவாக மரித்தோரிலிருந்து எழுந்தவர் அவனில் செயல்பட்டு, பரலோக ஆசீர்வாதங்களை அவன்மீது பொழிந்தருளுவார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது பொழிந்தருளப்பட்ட பிறகு அப்படிப்பட்ட விசுவாசத்தோடு அப்போஸ்தலர்கள் பிணியாளிகளைக் குணமாக்கிப் பாவங்களை மன்னித்ததோடு, இறந்தவர்களையும் இயேசுவின் நாமத்தினால் உயிரோடு எழுப்பினார்கள். அவர்கள் தங்களை வெறுத்தார்கள் கிறிஸ்து அவர்களில் வாழ்ந்தார். அவர்கள் தங்கள் முழு ஆள்த்துவத்தோடும் அவரை நேசித்தார்கள்; தங்கள் நடத்தைகளில் எல்லாம் அவரை மகிமைப்படுத்தினார்கள்.

இந்தப் பரிசுத்த ஊழியங்களுமன்றி, அவர் இவ்வுலகத்திலிருந்த சொற்ப காலத்தில் செய்யமுடியாத பல திருப்பணிகளையும் நிறைவேற்றும்படி அவர்களை கிறிஸ்து அனுப்பினார். அவர்களுடைய பிரசங்கத்தினால் பலர் இரட்சிக்கப்படும்படி அவர் பரமேறிய பிறகு தம்முடைய பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தருளினார். சூரிய உதயத்தின்போது பனித்துளி விழுவதைப்போல பிதாவுக்கு பிள்ளைகள் பிறப்பார்கள். சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவுக்கு நாம் அளிக்கும் சாட்சியைவிட சிறப்பானது வேறு எதுவுமில்லை. இந்த சாட்சியை நம்புவதன் மூலமாக மக்கள் முடிவற்ற வாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்கள். விசுவாசத்தோடு யாரெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்கிறார்களோ அவர்கள் வாழ்நாளெல்லாம் நீதியின் பாதையில் நடந்து தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வந்து அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக்குகிறார்.

யோவான் 14:13, 14
13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

நீங்கள் விண்ணப்பம் செய்கிறீர்களா? நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்களோ, எவ்வளவு பாவம் செய்கிறீர்களோ அவ்வளவு விண்ணப்பம் செய்ய வேண்டும். நீங்கள் இறைவனைத் துதிப்பதற்கும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் எவ்வளவு குறைவான நேரத்தைச் செலவு செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் விண்ணப்பங்கள் சுயநலத்துடன் விண்ணப்பிக்கிறீர்களா அல்லது இறைவன் மீதும் மீட்கப்படாதவர்கள் மீதும் முழு அன்புடன் விண்ணப்பிக்கிறீர்களா?

நீங்கள் உங்கள் எதிரிகளையும் ஆசீர்வதிக்கும்படி இறைவனுடைய அன்பு உங்களை மாற்றியிருக்கிறதா? கிறிஸ்துவின் இரட்சிப்பு அவருடைய நாமத்தினால் அநேகரை விடுவிப்பவராக உங்களை மாற்றியிருக்கிறதா? கர்த்தருடைய விண்ணப்பத்திற்கு உகந்தாற்போல உங்களுடைய விண்ணப்பம் இருக்கிறதா? அல்லது இன்னும் நீங்கள் சிலரை மன்னிக்காமல் தொடர்ந்து வெறுக்கிறீர்களா?

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினால் விண்ணப்பிப்பீர்களாயின் அவர் விரும்புகிறபடியே நீங்கள் அவருடைய ஆவியின்படி வாழவும் சிந்திக்கவும் தொடங்குவீர்கள். உங்கள் இருதயம் இரக்க சிந்தனைகளினால் நிரப்பப்படும்.

பரலோகத்தின் வல்லமைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும் வாக்குத்தத்தை கிறிஸ்து நமக்குக் கொடுக்கிறார். அந்த வாக்குத்தத்தத்தோடு ஒரு தெளிவான நிபந்தனையையும் முன்வைக்கிறார். “நான் உங்களை மாற்றும்படி நீங்கள் என்னுடைய வார்த்தைகளுக்கு உங்களைத் திறந்துகொடுத்தால், நான் உங்களில் வலுவாகவும் மேலாகவும் வாசம்செய்வேன். உங்களுடைய விசுவாசத்தினாலும் விண்ணப்பத்தினாலும் அநேகரைத் தீமையிலிருந்து இரட்சிப்பேன். எப்பொழுதெல்லாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்படி என்னிடம் விண்ணப்பிக்கிறீர்களோ அப்போது நான் நேரடியாக பதிலளிப்பேன்.

சகோதரரே, உங்கள் கரங்களில் இயேசு கொடுத்துள்ள இந்த சாவிக்காக நீங்கள் அவருக்கு நன்றி செலுத்துங்கள். பரலோகத்தின் பொக்கிஷங்களை விண்ணப்பத்தினால் திறவுங்கள். “நான் உங்கள் அயலகத்தார் மீதும் நண்பர்கள் மீதும் இரட்சிப்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தருளி, அவர்களுக்கு இறைவனை அறியும் அறிவையும் மனந்திரும்புதலையும் சகாயத்தையும் அருளுவேன்” என்று அவர் உரைக்கிறார். உங்கள் இனத்திலுள்ள அடிமைகளைத் தெரிந்துகொண்டு அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக்கும்படியாக அவரிடம் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிப்பதில் சோர்ந்து போகாதிருங்கள்; விசுவாசமே அநேகரை இரட்சிப்பதற்கான வழி. உங்கள் விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்கும் என்ற விசுவாசத்தோடு ஜெபியுங்கள். கிடைக்கப்போகும் பதிலுக்காக முன்கூட்டியே அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் விண்ணப்பத்திலும் விசுவாசத்திலும் உங்களோடு இணைந்துகொள்ளும்படி உங்கள் சகோதர சகோதரிகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். துதிப்பதிலும் ஆராதிப்பதிலும் இளைப்படையாதிருங்கள். அவர் உங்கள் மீது விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றும்படியும் விண்ணப்பியுங்கள்.

இயேசு உங்கள் விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். அவர் உங்களைச் சுத்திகரிக்கும்படி விண்ணப்பத்திற்கான தடைகளைத் தகர்த்தெறியுங்கள். பரலோகத்தின் முழுமையை பூலோகத்திற்குக் கொண்டுவரும் அதிகாரத்தை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். நீங்கள் விசுவாசத்தோடு விண்ணப்பித்துச் சாட்சியிடும்போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்துகிறீர்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, முதலில் நாங்கள் எங்களைப் பற்றி நினைக்காமல், நாங்கள் அறிந்த, அறியாத மற்றவர்களைப் பற்றி நினைக்கும்படி விண்ணப்பத்தின் ஆவியைத் தாரும். எங்கள் உறவினர்களுக்குப் பணிசெய்யும்படி எங்களை விண்ணப்பிக்கும் விசுவாசிகளாக்கும். நீர் பரலோகத்தைத் திறந்து ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளியமைக்காக உமக்கு நன்றி. பல ஆவிக்குரிய பிள்ளைகள் பிறப்பதன் மூலமாக பிதாவின் நாமம் மகிமைப்படட்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களுடைய பரிசுத்த நடக்கை உம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்தட்டும்.

கேள்வி:

  1. நம்முடைய விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்க அதற்கான முதன்மையான நிபந்தனை என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 17, 2012, at 10:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)