Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba
Previous Lesson -- Next Lesson யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)
4. கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12)யோவான் 2:1-10 இயேசு தம்முடைய சீஷர்களை யோர்தான் மலையிடுக்கின் ஸ்நானகனுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய இயேசுவோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். இயேசு யோவான் ஸ்நானகனைப் போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சீஷர்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். திராட்சை இரசத்தை அவர் தடைசெய்யவில்லை. ஏனென்றால் மனிதனுக்குள்ளிருந்து வருகிறதுதான் அவனைத் தீட்டுப்படுத்துமே தவிர, அவனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள் போவது அவனைத் தீட்டுப்படுத்தாது என்று அவர் போதித்தார். இயேசு துறவறத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே காரியம். மதுபான வெறிகொள்ளுதலையும் போதைப் பழக்கத்தையுமே வேதாகமம் தடைசெய்கிறது. இந்த சீஷர்கள் இயேசுவோடு அந்த விருந்துக்குச் சென்றார்கள். ஆனால் நாத்தான்வேலோ கானாவைச் சேர்ந்தவனாகவே இருந்தான் (21:2). மணவாளனுடைய குடும்பத்தை இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு தெரிந்திருக்க வேண்டும். யோசேப்பு ஏற்கனவே மரித்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. மரியாள் விதவையாகிவிட்டபடியால், மூத்தமகனாக இயேசு குடும்பத்துக்குப் பொறுப்பானவராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே தங்களுடைய சொந்தக்காரர்களுடைய தேவையைச் சந்திக்கும்படி மரியாள் அவரிடத்தில் வருகிறார். யோர்தானிலிருந்து திரும்பியதிலிருந்து இயேசு சாதாரண மனிதனாகக் காணப்படவில்லை. பரிசுத்த ஆவியானவரினால் மறுரூபப்படுத்தப்பட்டவராக தன்னுடைய உலகக் கடமைகளிலிருந்து முன்னேறி இறைவனைச் சேவிக்க ஆரம்பித்திருந்தார். அதில் அவருடைய சீஷர்கள் அவரைப் பின்பற்றினார்கள். மரியாள் தன்னுடைய மகனுடைய அன்பையும் கரிசனையையும் அறிந்திருந்த காரணத்தினால் அவரைச் சார்ந்திருந்தார். அவளுடைய அன்பு இயேசுவின் முதலாவது அற்புதத்திற்கு வழிநடத்திச் சென்றது. கிறிஸ்துவின் அன்பின் பேரிலுள்ள விசுவாசம் இறைவனுடைய கரத்தை அசைக்கிறது. இயேசு சொல்லவதைச் செய்யுங்கள் என்று மரியாள் வேலைக்காரர்களிடம் சொன்னாள். ஏதாவது ஒரு வகையில் இயேசு உதவி செய்வார் என்று மரியாளுக்குத் தெரியும். மரியாள் வேலைக்காரர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் திருச்சபைகளின் கோட்பாடாக இருக்க வேண்டும்: அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்! இயேசுவுக்கு மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுவரும். சுமார் 600 லிட்டர் கொள்ளளவுள்ள சுத்திகரிப்பின் தொட்டிகள் நிரப்பப்பட்டன. இது விருந்தாளிகள் சுத்திகரிப்புக்காக அதிக தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இயேசு அங்கிருக்கும்போது வேறு வகையான சுத்திகரிப்பு தேவையாயிருக்கிறது. ஒருவன் முழுவதும் சுத்திகரிக்கப்படாவிட்டால் அவன் ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள முடியாது. முதற் கரிசனையாயிருக்கவில்லை. முதலில் கல்யாண விருந்து தடையில்லாமல் நடைபெறவேண்டும். சுத்திகரிப்பின் தண்ணீரை இயேசு அமைதியாக சுவையுள்ள திராட்சை இரசமாக மாற்றினார். இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய சிந்தப்பட்ட இரத்தம் ஆட்டுக்குட்டியின் கல்யாணவிருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குப் போதிய சுத்திகரிப்பை உண்டுபண்ணும் என்று இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிகிறோம். இது மதுபான வெறிகொள்ளுதலை ஆதரிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் மதுபான வெறியுள்ள நடத்தை எதையும் ஆதரிப்பதில்லை. சுவையுள்ள திராட்சை இரசம் போதிய அளவு பரிமாறப்பட்டது. இது கிறிஸ்துவின் அளவற்ற பாவமன்னிப்பு மனுக்குலமனைத்திற்கும் போதுமானது என்பதை அடையாளப்படுத்துகிறது. அனைவரும் பரலோக மகிழ்ச்சியில் பங்குபெறட்டும். கர்த்தருடைய பந்தியில் எல்லாரும் நன்றியறிதலுடன் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு அடையாளமான அப்பத்தையும் இரசத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பாவமன்னிப்பு நமக்கு ஆறுதலைத் தருவதாக. யோவான் 2:11-12 கிறிஸ்துவின் படைக்கும் சக்தியைப் பார்த்து சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள், இயற்கையின் மீது அவருக்கிருந்த அதிகாரத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவருடைய மகிமையைப் பார்த்து, அவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று அறிந்துகொண்டார்கள். இது அவரை விசுவாசிக்கும்படி அவர்களை வழிநடத்தியது. விசுவாசம் வளருவதற்குக் காலம் தேவை, புரிந்துகொள்வதற்கு கீழ்ப்படிதல் தேவை. இயேசுவின் செயல்களைப் படித்து, அவருடைய பேச்சுக்களை ஆழமாகத் தியானிப்பீர்கள் என்றால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். இயேசு தன்னுடைய குடும்பத்தை விட்டு, இவ்வுலகில் இறைவனுக்குச் சேவைசெய்யும்படி போனார். ஆனால் அவருடைய தாயாருடனும் அவருடைய சகோதர்களுடனும் அவருக்கிருந்த உறவு தொடர்ந்தது. சில காலம் அவர்களும் சீஷர்களுடன் இணைந்து பிரயாணம்பண்ணினார்கள். திபேரியாக் கடற்கரையோரம் இருந்த முக்கிய நகரமாகிய கப்பர்நகூமுக்கு அவருடைய சகோதரர்கள் அவருடன் சென்றார்கள். கானாவூரில் நடைபெற்ற அற்புதத்தினிமித்தமாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் அவரை விசுவாசித்தார்கள். தங்களுக்கு நன்மை ஏற்படும்படி அவர்கள் இயேசுவோடு ஒட்டிக்கொண்டார்கள். விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஐக்கியத்திலும், சந்தோஷத்திலும் நிலைத்திருக்கும்படி, எங்களை கல்யாண விருந்துக்கு அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நீதியிலும் தூய்மையிலும் நிலைத்திருந்து, உம்மை அநேகருக்காக கொடுத்ததைப்போல, நாங்களும் உம்மைப் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்போம். கேள்வி:
கேள்வித்தாள் 1அன்பின் வாசகரே, இந்த 24 கேள்விகளில் 20க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி: Waters of Life Internet: www.waters-of-life.net |