Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 020 (Jesus' first miracle)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - தெய்வீக ஒளியின் பிரகாசம் (யோவான் 1:1 - 4:54)
ஆ - கிறிஸ்து சீடர்களை மனந்திரும்புதல் என்ற நிலையிலிருந்து திருமண மகிழ்ச்சி என்ற நிலைக்குக் கொண்டு செல்லுகிறார் (யோவான் 1:19 - 2:12)

4. கானாவூர் கல்யாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் (யோவான் 2:1–12)


யோவான் 2:1-10
1 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்ச ரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

இயேசு தம்முடைய சீஷர்களை யோர்தான் மலையிடுக்கின் ஸ்நானகனுடைய மனந்திரும்புதலின் பள்ளதாக்கிலிருந்து, கலிலேயா மலைப்பகுதியிலிருந்த கானாவூர் கல்யாண மகிழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்த 100 கிலோமீட்டர் பிரயாணம் இரண்டு ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள தீவிரமான மாற்றத்தை நமக்குக் காண்பிக்கிறது. இனிமேல் விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தின் நிழலில் வாழ வேண்டிய அவசியமில்லை, அவர்கள் உதய சூரியனும் சமாதானக் காரணருமாகிய இயேசுவோடு நீதியின் மகிழ்ச்சியில் வாழலாம். இயேசு யோவான் ஸ்நானகனைப் போல ஒரு துறவியல்ல. அதனால் அவர் தன்னுடைய சீஷர்களோடு ஒரு கல்யாண விருந்துக்குச் சென்றதே ஒரு அற்புதம்தான். திராட்சை இரசத்தை அவர் தடைசெய்யவில்லை. ஏனென்றால் மனிதனுக்குள்ளிருந்து வருகிறதுதான் அவனைத் தீட்டுப்படுத்துமே தவிர, அவனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள் போவது அவனைத் தீட்டுப்படுத்தாது என்று அவர் போதித்தார். இயேசு துறவறத்தையும் கடுமையான நோன்பையும் புறக்கணிக்கவில்லை, ஆனால் இவ்விதமான வாழ்க்கைமுறையினால் பெரிய பயனில்லை என்று கற்பித்தார். நம்முடைய கெட்டுப்போன இருதயம் புதிய தன்மையுள்ளதாக மாற்றப்பட வேண்டும், புதிய பிறப்பே காரியம். மதுபான வெறிகொள்ளுதலையும் போதைப் பழக்கத்தையுமே வேதாகமம் தடைசெய்கிறது.

இந்த சீஷர்கள் இயேசுவோடு அந்த விருந்துக்குச் சென்றார்கள். ஆனால் நாத்தான்வேலோ கானாவைச் சேர்ந்தவனாகவே இருந்தான் (21:2). மணவாளனுடைய குடும்பத்தை இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு தெரிந்திருக்க வேண்டும். யோசேப்பு ஏற்கனவே மரித்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது. மரியாள் விதவையாகிவிட்டபடியால், மூத்தமகனாக இயேசு குடும்பத்துக்குப் பொறுப்பானவராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே தங்களுடைய சொந்தக்காரர்களுடைய தேவையைச் சந்திக்கும்படி மரியாள் அவரிடத்தில் வருகிறார். யோர்தானிலிருந்து திரும்பியதிலிருந்து இயேசு சாதாரண மனிதனாகக் காணப்படவில்லை. பரிசுத்த ஆவியானவரினால் மறுரூபப்படுத்தப்பட்டவராக தன்னுடைய உலகக் கடமைகளிலிருந்து முன்னேறி இறைவனைச் சேவிக்க ஆரம்பித்திருந்தார். அதில் அவருடைய சீஷர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.

மரியாள் தன்னுடைய மகனுடைய அன்பையும் கரிசனையையும் அறிந்திருந்த காரணத்தினால் அவரைச் சார்ந்திருந்தார். அவளுடைய அன்பு இயேசுவின் முதலாவது அற்புதத்திற்கு வழிநடத்திச் சென்றது. கிறிஸ்துவின் அன்பின் பேரிலுள்ள விசுவாசம் இறைவனுடைய கரத்தை அசைக்கிறது. இயேசு சொல்லவதைச் செய்யுங்கள் என்று மரியாள் வேலைக்காரர்களிடம் சொன்னாள். ஏதாவது ஒரு வகையில் இயேசு உதவி செய்வார் என்று மரியாளுக்குத் தெரியும். மரியாள் வேலைக்காரர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் திருச்சபைகளின் கோட்பாடாக இருக்க வேண்டும்: அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்! இயேசுவுக்கு மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிதல் பல்வேறு அதிசயங்களைக் கொண்டுவரும்.

சுமார் 600 லிட்டர் கொள்ளளவுள்ள சுத்திகரிப்பின் தொட்டிகள் நிரப்பப்பட்டன. இது விருந்தாளிகள் சுத்திகரிப்புக்காக அதிக தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இயேசு அங்கிருக்கும்போது வேறு வகையான சுத்திகரிப்பு தேவையாயிருக்கிறது. ஒருவன் முழுவதும் சுத்திகரிக்கப்படாவிட்டால் அவன் ஆட்டுக்குட்டியின் கல்யாண விருந்தில் கலந்துகொள்ள முடியாது.

முதற் கரிசனையாயிருக்கவில்லை. முதலில் கல்யாண விருந்து தடையில்லாமல் நடைபெறவேண்டும். சுத்திகரிப்பின் தண்ணீரை இயேசு அமைதியாக சுவையுள்ள திராட்சை இரசமாக மாற்றினார். இது எவ்வாறு நடத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய சிந்தப்பட்ட இரத்தம் ஆட்டுக்குட்டியின் கல்யாணவிருந்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்குப் போதிய சுத்திகரிப்பை உண்டுபண்ணும் என்று இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிகிறோம். இது மதுபான வெறிகொள்ளுதலை ஆதரிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் மதுபான வெறியுள்ள நடத்தை எதையும் ஆதரிப்பதில்லை. சுவையுள்ள திராட்சை இரசம் போதிய அளவு பரிமாறப்பட்டது. இது கிறிஸ்துவின் அளவற்ற பாவமன்னிப்பு மனுக்குலமனைத்திற்கும் போதுமானது என்பதை அடையாளப்படுத்துகிறது. அனைவரும் பரலோக மகிழ்ச்சியில் பங்குபெறட்டும். கர்த்தருடைய பந்தியில் எல்லாரும் நன்றியறிதலுடன் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு அடையாளமான அப்பத்தையும் இரசத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பாவமன்னிப்பு நமக்கு ஆறுதலைத் தருவதாக.

யோவான் 2:11-12
11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள்.

கிறிஸ்துவின் படைக்கும் சக்தியைப் பார்த்து சீஷர்கள் ஆச்சரிப்பட்டார்கள், இயற்கையின் மீது அவருக்கிருந்த அதிகாரத்தை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். அவருடைய மகிமையைப் பார்த்து, அவர் இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று அறிந்துகொண்டார்கள். இது அவரை விசுவாசிக்கும்படி அவர்களை வழிநடத்தியது. விசுவாசம் வளருவதற்குக் காலம் தேவை, புரிந்துகொள்வதற்கு கீழ்ப்படிதல் தேவை. இயேசுவின் செயல்களைப் படித்து, அவருடைய பேச்சுக்களை ஆழமாகத் தியானிப்பீர்கள் என்றால், அவருடைய ஆளத்துவத்தின் மேன்மையை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.

இயேசு தன்னுடைய குடும்பத்தை விட்டு, இவ்வுலகில் இறைவனுக்குச் சேவைசெய்யும்படி போனார். ஆனால் அவருடைய தாயாருடனும் அவருடைய சகோதர்களுடனும் அவருக்கிருந்த உறவு தொடர்ந்தது. சில காலம் அவர்களும் சீஷர்களுடன் இணைந்து பிரயாணம்பண்ணினார்கள். திபேரியாக் கடற்கரையோரம் இருந்த முக்கிய நகரமாகிய கப்பர்நகூமுக்கு அவருடைய சகோதரர்கள் அவருடன் சென்றார்கள். கானாவூரில் நடைபெற்ற அற்புதத்தினிமித்தமாக மட்டுமன்றி, தனிப்பட்ட முறையில் அவரை விசுவாசித்தார்கள். தங்களுக்கு நன்மை ஏற்படும்படி அவர்கள் இயேசுவோடு ஒட்டிக்கொண்டார்கள்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஐக்கியத்திலும், சந்தோஷத்திலும் நிலைத்திருக்கும்படி, எங்களை கல்யாண விருந்துக்கு அழைத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் நீதியிலும் தூய்மையிலும் நிலைத்திருந்து, உம்மை அநேகருக்காக கொடுத்ததைப்போல, நாங்களும் உம்மைப் பின்பற்றி அவற்றில் நிலைத்திருப்போம்.

கேள்வி:

  1. இயேசு ஏன் தன்னுடைய சீஷர்களை கல்யாணத்திற்கு அழைத்துச் சென்றார்?

கேள்வித்தாள் 1

அன்பின் வாசகரே, இந்த 24 கேள்விகளில் 20க்கு சரியான பதிலனுப்புவீர்களானால், இப்பாடத் தொடரின் அடுத்த நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

  1. நான்காவது நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்?
  2. நான்காவது நற்செய்திக்கும் மற்ற மூன்று நற்செய்தி நூல்களுக்குமிடையிலான தொடர்பு யாது?
  3. யோவானுடைய நற்செய்தியின் நோக்கம் யாது?
  4. இந்த தனித்துவமான நற்செய்தி யாருக்கு எழுதப்பட்டது?
  5. இந்நூலைப் பகுத்து, அதன் பொருளை ஒழுங்குபடுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்?
  6. யோவான் முதலாம் அதிகாரத்தின் முதலாம் வசனத்தில் திரும்பத்திரும்ப வரும் வார்த்தை யாது? அதன் பொருள் என்ன?
  7. யோவான் தன்னுடைய நற்செய்தியின் ஆரம்பத்தில் முன்வைக்கும் கிறிஸ்துவின் ஆறு குணாதிசயங்கள் யாவை?
  8. ஆவிக்குரிய பொருளில் இருளுக்கும் ஒளிக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?
  9. யோவான் ஸ்நானகனுடைய சேவையின் முக்கிய நோக்கங்கள் யாவை?
  10. வெளிச்சமாகிய கிறிஸ்துவுக்கும் இருளடைந்த உலகத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது?
  11. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு என்ன நடக்கிறது?
  12. கிறிஸ்துவின் மனுவுருவாதலின் பொருள் என்ன?
  13. கிறிஸ்துவின் முழுமை என்பதன் பொருள் என்ன?
  14. எந்தப் புதிய சிந்தனையைக் கிறிஸ்து உலகத்திற்குக் கொண்டு வந்தார்?
  15. யூதர்களால் அனுப்பப்பட்டவர்கள் கேட்ட கேள்விகளின் நோக்கங்கள் என்ன?
  16. யோவான் எவ்வாறு கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்படி மக்களை அழைக்கிறார்?
  17. சனகதரின் சங்கத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு முன்பாக யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு பகர்ந்த சாட்சியின் உச்சகட்டம் என்ன?
  18. தேவ ஆட்டுக்குட்டி என்பதன் பொருள் என்ன?
  19. பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக இயேசு ஏன் வந்தார்?
  20. ஏன் இரண்டு சீஷர்கள் இயேசுவைப் பின்பற்றினார்கள்?
  21. ஆரம்ப சீஷர்கள் இயேசுவின் நாமத்தை எவ்வாறு அறிவித்தார்கள்?
  22. இயேசுவின் பெயரை முதல் சீஷர்கள் மற்றவர்களுக்கு எவ்வாறு அறிவித்தார்கள்?
  23. தேவனுடைய குமாரன் என்ற பட்டத்திற்கும் மனித குமாரன் என்ற பட்டத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு யாது?
  24. இயேசு ஏன் தன்னுடைய சீஷர்களை கல்யாணத்திற்கு அழைத்துச் சென்றார்?

உங்கள் பெயரையும் முகவரியையும் தெளிவாக எழுதி உங்கள் பதிலுடன் அனுப்ப வேண்டிய முகவரி:

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 09:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)