Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 6 - இயேசு எருசலேமிற்குள் பிரவேசித்தலும் அவருடைய கடைசி செயல்களும் (மாற்கு 10:46 - 12:44)
9. மாபெரும் கட்டளை (மாற்கு 12:28-34)மாற்கு 12:28-34 இறைவன் இருப்பதை நீ விசுவாசிக்கிறாயா? விசுவாசிக்கிறாய் என்றால் அவரை நேசி. அவர் உன்னைப் படைத்திருக்கிறார். உனக்கு நன்மைகளைப் பொழிந்தருளுகின்றார். அனுதினமும் உன்னை ஆசீர்வதிக்கிறார். அவர் உன்னை இரட்சிப்பார். உனக்கு வாழ்வு தருவார். உன்னைப் பெலப்படுத்துவார். தமது மகிமைக்குள் உன்னை எடுத்துக்கொள்வார். இறைவனை நேசிக்காதவன் அவருக்கு எதிராக இருக்கிறான். இறைவன் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிகிறாயா? அவர் சர்வவல்லமையுள்ளவர் என்பது உனக்குத் தெரியுமா? அவருக்குரிய கனத்தைச் செலுத்தி, அவருக்கு ஆராதனை செய். அவர் ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார். அவர் எல்லா மனிதர்களையும் அறிகிறார். நல்லோர், தீயோர் அனைவரையும் உனது பெயரையும் அறிந்திருக்கிறார். மிகப்பெரிய பரிசுத்தமான இறைவன் பரிதாபமான மனிதனாகிய உன்னை நேசிக்கிறார். அவர் துன்மார்க்கரை நேசிக்கிறார். அவர்களுடைய பாவங்கள் நிமித்தம் அவர்களை அழிக்க விரும்பவில்லை. அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்துவை விசுவாசிப்பவன் பரிசுத்தமடைந்து அழிவை சந்திப்பதில்லை. அவன் நித்தியவாழ்வைப் பெறுகிறான். இறைவனுடைய அன்பின் ஆழத்தை உன்னால் உணர முடிகிறதா? பரிசுத்தமான பிதா தமது ஒரே குமாரனை நமக்காகத் தந்தார். நாம் இருதயக் கடினமுள்ள, முரட்டாட்ட பாவிகளாக இருந்தோம். நாம் அவரிடம் திரும்பும்படியும் நமது இருதயங்களில் அவர் அன்பு ஊற்றப்படும்படியும் விரும்புகிறார். நாம் பிற மனிதர்களை வெறுக்காதபடி, முழு இருதயத்தோடும் ஒவ்வொருவரையும் நேசிக்கும்படி, அப்படிச் செய்தார். இறைவன் ஒருவரே என்று நீங்கள் சொல்லலாம்? அப்படியென்றால் கிறிஸ்து இறைவனின் குமாரன் என்று எப்படி நாம் சொல்ல முடியும்? அன்பு என்றால் அதில் ஒருமனமும், பன்முகத் தன்மையும் உண்டு. இறைவன் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற ஒருவராக இருக்கிறார். இயேசு கூறுகிறார்: “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 14:9; 10:30). வேதபாரகர்களின் பிரதிநிதி முன்பு கிறிஸ்து இதை சாட்சியிட்டு கூறினார். “நம்முடைய இறைவனாகிய ஆண்டவர் ஒருவரே”. ஆனால் வேதபாரகர்கள் இதைக் கேட்டு திருப்தியடையவில்லை. அவர் மேலும் கூறினார்: “அவரைத் தவிர வேறு ஒருவரும் இல்லை”. இறைவனை அறியாதவன் அவரை ஒரு விக்கிரகம் போல பார்க்கிறான். அவனுடைய குறைந்த அறிவினால் இறைவனுக்கு ஒரு குமாரன் இருப்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய குமாரன் நித்தியம் துவக்கி நித்தியம் வரை அவருடன் இணைந்திருக்கிறார். தன்னுடைய குறுகிய எண்ணங்களின் மத்தியிலும் அவன் கிறிஸ்துவின் ஞானத்தையும், இரக்கத்தையும் உணர்ந்தான். தனது இருதயத்தை அவருக்குத் திறந்தான். அவன் இறைவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவன் அல்ல என்று இயேசு கூறினார். நீ உண்மையாகவே இறைவனை நேசிக்கிறாயா? அப்படியென்றால் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள். உனது இருதயம், சிந்தனைகளை, எண்ணங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. உன்னை ஒழுங்குப்படுத்திக்கொள். நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் குறித்து கவனமாயிருங்கள். தவறான புத்தகங்களை வாசிக்காதிரு. தொலைக்காட்சி படங்களில் ஆர்வமாயிருப்பதை தவிர்த்திடு. நீ நேசிப்பதற்கு இறைவன் ஒருவரே தகுதியானவர் அவருக்கு உன் முழு இருதயத்தோடும் சேவை செய். அவர் பணிக்கென்று உனது நேரம், பணத்தைக்கொடு. இறைஅன்பை நடைமுறைப்படுத்துவதில் உனது பலவீனத்தை நீ உணர்கிறாயா? நாம் பலவீனர்கள். நாம் அப்போஸ்தலனாகிய பவுலின் கூற்றை இணைந்து சொல்லுவோம். “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ” (ரோமர் 5:5) இறைவனையும், மனிதர்களையும் நேசிப்பதற்கு இந்த பரலோக வல்லமை நமக்கு உதவி செய்கிறது. நேசிக்கின்ற நம்மால் அல்ல, நமக்குள் வாழும் இறைவனால் இது சாத்தியம். உனது பகைவர்கள் உனக்கெதிராக செய்த பாவங்களை நீ மன்னிக்காதவரை பரிசுத்த ஆவியானவர் உனக்கு இளைப்பாறுதலைத் தரமாட்டார். அவர்களுடன் சமாதானமாயிருக்கும்படி உன்னைத் தாழ்த்து. உனது பாவங்களை சிலுவையில் மன்னித்த இறைவனுடைய அன்பை நீ பார். நீ யாருக்கு விரோதமாக தவறு செய்திருந்தாலும், அவர்களிடம் மன்னிப்பு கேள். கிறிஸ்துவிற்கும், வேதபாரகனுக்கும் இடையே நடந்த உரையாடலை நீ கவனித்தாயா? இறைவனுடைய ஒரே தன்மையைக் குறித்து இயேசு பேசினார். இறைஅன்பைக் குறித்துச் சொன்னார். இறைவனுடைய ஒரே தன்மையை இயேசு மறுக்கவில்லை. பரிசுத்தமானவரின் அன்பை அவர் வலியுறுத்தினார். திரியேக இறைவனின் ஒரே தன்மையின் இரகசியம் இதுதான். இறைவன் அன்பாக இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான். இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார். விண்ணப்பம்: பரிசுத்த பிதாவே, நீர் அன்புள்ளவர். உமது அன்பின் அக்கினியை எங்கள் இருதயங்களில் தாரும். உமது உண்மைக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். நீர் உமது குமாரன் மூலமாய் உம்மை வெளிப்படுத்தியிருக்கிறீர். உமது ஆவியை எங்களுக்கு தந்திருக்கிறீர். நாங்கள் உம்மை நேசிக்கவும், மற்றவர்களை நேசிக்கவும் உதவுகிறீர். அன்புடன் பிறருக்கு பணிசெய்யவும், பரிசுத்த திரியேக இறைவனாகிய உமது ஒரே தன்மையின் இரகசியத்தையும், அன்பையும் சாட்சியிட உதவி செய்யும். உமது பரிசுத்த அன்பையும், உம்மையும் அவர்கள் அறிய கிருபை செய்யும். ஆமென். கேள்வி:
கேள்விகள் - 3பிரியமான வாசகரே,
24 கேள்விகளில் 20 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால், நாங்கள் இதன் தொடர்ச்சியான அடுத்த புத்தகத்தை உங்களுக்கு அனுப்புவோம். தயவுசெய்து உங்கள் முழுப்பெயர், முகவரியை தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் பதில்களை பின்வரும் முகவரிக்கு அனுப்புங்கள்: Waters of Life Internet: www.waters-of-life.net |