Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- John - 041 (Jesus withdraws from the clamor for his crowning; Jesus comes to his disciples in distress)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

2. இயேசு தன்னை அரசனாக்கும் ஆரவாரத்திலிருந்து ஒதுங்குகிறார் (யோவான் 6:14-15)


யோவான் 6:14-15
14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். 15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

மனுக்குலத்தை வென்றெடுக்க இயேசு உலகத்திற்கு வந்தார். அவர் ஐயாயிரம்பேருக்கு உணவளித்த பிறகு மக்கள் ஆவலோடு அவரைச் சுற்றி கூட்டம் கூடினார்கள். அரசராக அவரைக் கருதி அவருக்கு முன்பாக கைகளைத் தட்டி ஆரவாரித்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்தக் கலிலேயன் இறைவனுடைய மனிதன் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். இறைவனுடைய வார்த்தை அவர் மூலமாக பேசியது என்றும் உன்னதமானவருடைய வல்லமை அவரில் வெளிப்பட்டது என்றும் அவர்கள் அறிந்தார்கள். இயற்கை அவருக்குக் கீழ்ப்படிந்தது. மோசே வனாந்தரத்தில் செய்ததுபோல அவர் மக்களுக்கு உணவளித்தார். வெறுக்கப்பட்ட இனத்தை சத்தியத்திற்குள் நடத்தும் தீர்க்கதரிசியாக வாக்குப்பண்ணப்பட்டவர் அவரே (உபா. 18:15). இயேசு அவர்களுடைய அரசனாக வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் வேலைசெய்து களைப்படையத் தேவையில்லை என்றும் அவர்கள் கருதினார்கள். “வேதாகமத்தைப் படிக்கவும் விண்ணப்பம் செய்யவும் நம்முடைய நேரத்தை செலவு செய்யலாம், அவர் நமக்கு இலவசமாக உணவளிப்பார். இப்படிப்பட்ட அரசன் ரோமர்களை நிச்சயம் தோற்கடிப்பார். தங்கள் எதிரிகளை அழித்துப்போடும் நெருப்பை அவர் வானத்திலிருந்துகூட வருவிப்பார். நாம் அவருக்கு முடிசூட்டி, அவரை அரசராக அறிவிப்போம்” என்றார்கள். அவர்கள் அனைவரும் அவரை நெருங்கி அவரைத் தங்களுடைய தோள்களில் சுமக்கப் போனார்கள். அவர்களுக்குத் தேவையானதைக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

மக்களின் இந்த ஆரவாரத்தைக் கண்டு இயேசு என்ன செய்தார்? அவரும் மகிழ்ச்சியுற்று, தன்மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்காக அவர்களுக்கு நன்றி சொன்னாரா? அவர் சோதனையில் இழுப்புண்டு அவிசுவாசிகளுடைய உதவியுடன் தன்னுடைய அரசை கட்ட முனைந்தாரா? இல்லை. அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, வனந்தரத்திற்குப் போய்விட்டார். அவர் மனிதர்களால் சுமக்கப்பட விரும்பாமல், இறைவன் தன்னைத் தாங்கினாலே போதும் என்று கருதினார். ஆர்வக்கோளாறினால் நிறைந்த இந்த மக்களைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும், மனக்கிளர்ச்சியில் மூழ்கிப் போயிருக்கும் இந்த மக்கள் அவருடைய ஆலோசனையைக் கேட்க மாட்டார்கள். ஒரு கருத்தினால் உண்டான அரசியல் ஐக்கியம் இது.

இவ்வுலகத்திற்குரிய ஒரு அரசாங்கத்தைக் கட்டுவது இயேசுவின் விருப்பம் அல்ல. அவர் ஒவ்வொருவராக மனந்திரும்புதலுக்குள்ளும் விசுவாசத்திற்குள்ளும் நடத்த விரும்பினார். இரண்டாவது பிறப்பினாலன்றி ஒருவரும் இறையரசுக்குள் நுழைய முடியாது. அற்புத அடையாளங்களின் நோக்கத்தை அந்த மக்கள் கூட்டம் அறிந்துகொள்ளத் தவறியது. அவர்கள் இவ்வுலகத்தின் உணவைப் பற்றி சிந்தித்தார்கள், அவரோ மனித மனதின் ஆழ்ந்த பசியைத் தீர்க்கும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்துப் பேசினார். அவர்கள் இவ்வுலக ஆளுகையையும் வாடிப்போகிற மகிமையையும் குறித்து சிந்தித்தார்கள், அவரோ தன்னுடைய அரசின் அடிப்படையாக சிலுவையைத் தெரிந்துகொண்டார். மனந்திரும்புதலும் மறுபிறப்பும் இல்லாமல் நீங்கள் ஒருபோதும் கிறிஸ்துவினால் வரவேற்கப்பட மாட்டீர்கள்.

திரள் கூட்டத்தின் மரியாதை இயேசுவுக்குத் தேவைப்படவில்லை. அவர் மனிதரால் வரும் மகிமையை ஏற்றுக்கொள்ளாமல் தன்னுடைய பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுத்தார். சாத்தானுடைய சோதனைகளுக்கு தன்னுடைய மனக்கதவை அவர் அடைத்துவிட்டார். அவர் அவர்களைவிட்டு விலகி விண்ணப்பம் செய்யச் சென்றார். பிதா தம்முடைய ஆவியின் மூலம் குருடாயிருக்கும் கண்களைத் திறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மனிதரால் மட்டும் முடிசூடப்படுவது போதும் என்று அவர் கருதவில்லை. மனிதர்கள் ஒரு நாளில் “ஓசன்னா” என்றும் மறுநாளில் “சிலுவையில் அறையும்” என்றும் கத்துவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவுக்கு நம்முடைய இருதயங்களைப் பற்றி நன்கு தெரியும், அவர் ஏமாற மாட்டார்.


3. சீடர்களின் துன்பத்தில் இயேசு அவர்களிடம் வருகிறார் (யோவான் 6:16-21)


யோவான் 6:16-21
16 சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப் போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. 19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். 20 அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

கோலனில் இயேசு தனிமையாயிருக்கும்போது, தூரத்தில் தன்னுடைய சீடர்கள் புயல் காற்றில் தத்தளிக்கிறார்கள் என்பதை அவர் கண்டார். இரவானபோது அவர் தன்னுடைய கால்களினாலேயே ஏரியின் அலைகளின் மேல் நடந்து அவர்களிடம் சென்றார். தனிமையில் ஆபத்தைச் சந்திக்கும்படி அவர் அவர்களை விட்டுவிடவில்லை. ஆனால் அவர்கள் அவரை ஆவி என்று கருதி பயந்தார்கள். மீனவர்கள் அதிக நேரத்தை கடலிலே செலவிடுவதால் சில வேளைகளில் தாங்கள் ஆவிகளைக் காண்பதாக கற்பனை செய்வார்கள். இயேசு வந்து அவர்களிடம் தனிப்பட்ட முறையில் இரக்கத்துடன் “நான்தான்” என்றார். இந்த கூற்று அப்போஸ்தலருடைய விசுவாசத்தின் அடிப்படையானது. விசுவாசிகளுடன் இருக்கும் கர்த்தருடைய பிரசன்னத்தைக் குறிக்க பழைய ஏற்பாட்டில் “இருக்கிறேன்” என்பது இதற்கு இணையாகச் சொல்லப்பட்டது. இயேசு இவ்வுலகத்திலுள்ள காரியங்கள் அனைத்தின் மீதும் முழு அதிகாரம் உடையவர் என்பதை சீடர்கள் புரிந்துகொண்டார்கள்: அப்பங்கள் அவருடைய கரத்தில் பலுகிப் பெருகின, அவரை அலைகள் சுமந்து வந்தன, அவருடைய சத்தத்திற்கு புயலும் கீழ்ப்படிகிறது. இவற்றை அவர்கள் அறிந்துகொண்டபோது அவர்கள் இன்னும் பயந்தார்கள். ஆகவே அவர் அவர்களைப் பார்த்து பயப்படாதிருங்கள் என்று சொன்னார். எல்லாக் காலத்திலும் அவரைப் பின்பற்றுபவர்களைப் பார்த்து அவர் “பயப்படாதிருங்கள்” என்று கூறுகிறார். பயப்படாதிருங்கள் என்பது வேதாகமத்தில் 365 முறை வருகிறது, வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒருமுறை வருகிறது. கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம்புதல் நம்முடைய பயத்தை மேற்கொள்ளும். உங்கள் நிலை எதுவாயிருந்தாலும், உங்கள் பிரச்சனை எவ்வளவு பயங்கரமாயிருந்தாலும், “நான்தான், பயப்படாதிருங்கள்” என்று இயேசு சொல்லுகிறார்.

இயேசுதான் அவர் என்பதை அவருடைய சீடர்கள் அறிந்துகொண்ட போது அவரை தங்கள் படகிற்குள் அழைத்தார்கள். உடனடியாக அவர்கள் கரையை அடைந்தார்கள். இது ஒரே நாளில் நடைபெற்ற மூன்றாவது அற்புதமாகும். காலத்திற்கும் இடத்திற்கும் இயேசுவே ஆண்டவர். அவர் தன்னுடைய சபையாகிய கப்பலை அலைகளையும் புயலையும் கடந்து அது சேருமிடத்திற்கு வழிநடத்தக் கூடியவர். அவர் தம்முடைய சீடர்களை நேசித்து அவர்களிடம் வருகிறார், ஆனால் அவர்கள் அவரை முழுமையாக நம்ப வேண்டும். இருளும் சோதனையும் நிறைந்த இடங்களில் அவர் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்துகிறார். அப்போது அவர்களுடைய பயங்கள் நீங்கி எப்போதும் அவரை அண்டிக்கொள்கிறார்கள்.

கேள்வி:

  1. மக்களால் அரசராக்கப்படுவதை இயேசு மறுத்ததன் காரணம் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:22 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)