Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Mark - 110 (Faith and Baptism in Salvation)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 9 - இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் (மாற்கு 16:1-20)

7. இரட்சிப்பில் விசுவாசமும், ஞானஸ்நானமும் (மாற்கு 16:16)


மாற்கு 16:16
16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

இரட்சிப்பில் விசுவாசத்தின் விளைவை இயேசு விவரித்தார். விசுவாசம் என்பது வெறுமனே ஓர் சிந்தனை அல்ல. அது இறைவாழ்வைக் குறித்த அறிவு ஆகும். கிறிஸ்துவின் வல்லமையை அனுபவிப்பது, அவரில் இதயப்பூர்வமான நம்பிக்கை வைப்பது, அர்ப்பணிப்பு மற்றும் அவருக்குள் நிலைத்திருத்தல் ஆகும். அவரை விசுவாசிப்பவர்கள் மரணத்தைக் குறித்த கவலை நீங்கி இறைவாழ்வின் இனிமை குறித்துப் பிரசங்கிக்கிறார்கள்.

விசுவாசம் என்பது கிறிஸ்துவுக்குள் வளரும் உறவு ஆகும். அது பெருகும் அன்பினால் உறுதிப்படுத்தப்படுகிறது. நீ தனியாக உள்ளாயா? அல்லது கிறிஸ்துவுக்கு என்றென்றுமாக உன்னை அர்ப்பணித்திருக்கிறாயா? நீ உனது சுயசித்தம், சுதந்திரத்தை விட்டுக்கொடுத்து, கிறிஸ்துவாகிய உன்னுடைய இரட்சகரை உறுதியுடன் பற்றிக்கொண்டிருக்கிறாயா?

நீ இன்னும் சுயநலத்துடன் உனக்காகவே வாழ விரும்புகிறாயா? பெருமைகொள்ளாதே. நீ பாவம் இச்சை, தீய அனுபவங்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறாய். கிறிஸ்து உன்னை இரட்சிக்க வந்தவர். அவருக்கு உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. அவர் தமது வலக்கரத்தினால் உன்னைத்தொட்டு பலவீனங்களை நீக்கி, மரணத்தை மேற்கொள்ளச் செய்வார். அவருடைய அன்பின் மீது பற்றுதலாயிரு. அப்போது உன் கண்கள் திறக்கப்பட்டு மீட்பரை அவருக்குரிய அழகு, நீதி, இரக்கத்துடன் பார்க்க முடியும். இன்று இரட்சகரிடம் வா. அவருக்குள் என்றென்றும் நிலைத்திரு. இயேசுவுடன் நாம் கொண்டிருக்கும் உறவிற்கு வெளிப்படையான அடையாளம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் பெறும் ஞானஸ்நானம் ஆகும். இந்த உறுதியான முடிவின் மூலம், ஞானஸ்நானம் எடுப்பவர் இறைவனின் அன்பை அனுபவிக்கிறார். தனது சுயத்திற்கு மரித்து, பரிசுத்தமானவரின் வல்லமையில் வாழ்கிறார்.

நீ இறைவனை விட்டுவிலகி வாழ்கிறாயா அல்லது அவருக்குள் உறுதியாய் இருக்கிறாயா? உண்மையான ஞானஸ்நானம் பரிசுத்தமான திரியேக இறைவனுக்குள் உன்னை நிலைப்படுத்துகிறது. ஆண்டவர் அருளும் வாழ்வில் பங்குபெறச் செய்கிறது. சடங்காச்சாரமான ஞானஸ்நானம் பயனற்றது. ஞாஸ்நானத்துடன் விசுவாசம் என்பது மிகவும் முக்கியம். நீ உனது விசுவாசத்தை அறிக்கையிட்டு, ஞானஸ்நானத்தில் சாட்சியிடும்போது இறைவனுக்கு நீ சொந்தம் என்பதையும், நீ உனக்கு சொந்தமல்ல என்பதையும் வெளிப்படுத்துகிறாய்.

கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புக்கொடுத்து, உனது பரலோகப் பிதாவிற்கு நீ சொந்தமாக இருக்கிறாயா? குமாரனாகிய இறைவனை விசுவாசிக்கிறவன் பரிசுத்த ஆவியின் ஆறுதலை அனுபவிக்கிறான். அவனுடைய வாழ்வில் இறைவனுடைய அன்பு வழிந்தோடுகிறது. அவன் நித்திய வாழ்வின் இனிமையை அனுபவிக்கிறான்.

விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். கிறிஸ்து “முடிந்தது” என்று உரக்கக் கூறிய போது இரட்சிப்பு கொல்கதாவில் ஆரம்பித்தது. இறைவனுடன் எல்லா மனிதர்களையும் அங்கே அவர் ஒப்புரவாக்குகிறார். இதை ஏற்றுக்கொள்பவன் இரட்சிப்பின் அனுபவத்தை அடைகிறான். எல்லா மனிதர்களுக்குமான உலகளாவிய இரட்சிப்பு மெய்யானது. இரட்சிப்பின் பணி முழுமையடைந்துவிட்டது. கிறிஸ்து இன்னுமொரு முறை மரிக்கத் தேவை இல்லை. விசுவாசிகளின் வாழ்வில் இந்த இரட்சிப்பு உணரப்படுகிறது. விசுவாசமின்றி இரட்சிப்பு இல்லை. கிறிஸ்துவுடனான உனது சந்திப்பு, அவர் மீதான உனது நம்பிக்கை இறைவனின் இரட்சிப்பை உன்னிடம் கொண்டு வருகிறது. முழுமையான இரட்சிப்பின் பணியைத் தொடர்ந்து தனிப்பட்ட இரட்சிப்பின் அனுபவத்தை விசுவாசத்தின் மூலம் ஒரு நபர் அடைவதை நாம் காண்கிறோம்.

உனக்குள் இருக்கும் இரட்சிப்பின் ஆரம்பமாக ஞானஸ்நானம் உள்ளது. நீ வளர்ச்சி பெறவும், முதிர்ச்சி அடையவும் ஆண்டவர் விரும்புகிறார். அப்போது நீ அதிக கனி கொடுக்க முடியும். உனது சாட்சியான வாழ்வின் மூலம் அநேகர் இரட்சிப்பை அடைவார்கள். எனவே இரட்சிப்பு என்பது உன்னோடு முடிவது அல்ல, அது மற்றவர்களையும் வழிநடத்துகிறது.

இரட்சிப்பை அடைந்தவன் மற்றவர்களின் இரட்சிப்பையும் விரும்புவான். பெருந்திரளான மக்கள் இரட்சிப்பை அடையும் வரை இறைவனின் ஆவியானவர் ஓய்ந்திருக்கமாட்டார். உனது சூழ்நிலைகள் மத்தியில் அவர் உன்னைப் பயன்படுத்தி இரட்சிப்பை பிறருக்கு கொண்டு செல்ல விரும்புகிறார். இன்று யாரிடம் இயேசுவையும், அவருடைய இரட்சிப்பையும் குறித்து பேச வேண்டும் என்பதைக் காண்பிக்கும்படி உனது ஆண்டவரிடம் கேள்.

இயேசு தனது ஊழிய அனுபவத்தில், எல்லா மனிதர்களும் விசுவாசிக்க ஆயத்தமாய் இருப்பதில்லை என்பதை கண்டிருந்தார். அவர்கள் கடினப்பட்டு, அவரைவிட்டுவிலகி, பரியாசம்பண்ணி, பகைத்து அவருக்கு எதிர்த்து நின்றார்கள். விசுவாசத்தில் வளர தவறினார்கள். இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். முழுமையான இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளாதவன் தன்னையே அழித்துக்கொள்கிறான்.

இயேசு ஒருவரையும் புறக்கணிக்கவில்லை. ஒருவரையும் அழிக்கவில்லை. ஏனெனில் அவர் அன்புள்ளவர் அவருடைய இரட்சிப்பை நிராகரிப்பவன் தனது பாவங்களை தானே சுமக்கிறான். இறைவனுடைய நியாயத்தீர்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. அவரை விசுவாசியாதவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டு ஆயிற்று.

கிறிஸ்துவே இரட்சிப்பிற்கான மெய் வழி. மதம், கட்சி அல்லது தத்துவம் எதுவும் உன்னை இரட்சிக்காது. இறைவனிடம் செல்ல வேறுப்பட்ட வழிகள் கிடையாது. இறைவனிடம் செல்ல பலவழிகள் உண்டு என்று நினைப்பவர்கள் சத்தியத்தை அறியவில்லை. அவன் பொய்யன். கிறிஸ்துவே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். ஒருவனும் பிதாவினிடம் அவரையன்றி வர முடியாது. யூதாஸ் கிறிஸ்துவை விட்டு தொடர்ந்து விலகிச் சென்றான். அவன் தன்னையே அழித்துக் கொண்டான்.

உனது இருதயத்தின் நிலை என்ன? இறைவனின் இரட்சிப்பிற்கான வழியை காண்பிக்க நீ ஆயத்தமா? உனது ஆண்டவருக்குள் நிலைத்திருந்து, அவரையே நேசிக்கிறாயா? அல்லது நீ அவரை புறக்கணித்து மறுதலிக்கிறாயா?

கவனமாயிரு. வாழ்வு அல்லது மரணம், இரட்சிப்பு அல்லது அழிவு ஏதாவது ஒன்றை நீ தெரிவு செய்ய வேண்டும். கிறிஸ்துவை விசுவாசியாதவன் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று இந்தக் கூற்று பொறுமையுடன் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி நம்மைத் தூண்டுகிறது. இந்த உலகம் அவரிடம் திரும்பி, அவருடைய குமாரனை விசுவாசிக்கும்படி இறைவன் அழைக்கிறார். அவரை விசுவாசிப்பவன் வாழ்வடைவான். அவரை ஏற்றுக்கொள்ளாதவன் பாவங்களில் மரித்தவனாக இருப்பான். பிரியமான வாசகனே, நீ எங்கே இருக்கிறாய்?

விண்ணப்பம்: எங்கள் பரலோகப் பிதாவாகிய உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம். உமது நேச குமாரனின் இரட்சிப்பிற்காக உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் உம்மை மகிமைப்படுத்துகிறோம். நீர் பரிசுத்த ஆவியின் மூலம் எங்கள் கண்களைத் திறந்தீர். உமது அன்பினால் எங்களை நிரப்பினீர். இயேசு எங்கள் பாவங்கள், மரண வல்லமை, சாத்தானின் தந்திரத்தில் இருந்து எங்களை விடுவித்திருக்கிறார். பாவங்களில் மரித்திருக்கும் மக்களுக்கு இயேசுவின் வாழ்வை காண்பிக்கும்படி எங்களுக்கு கற்றுத்தாரும். சத்தியத்தை உண்மையாய் நாடி, தேடுவோருக்கு மெய் விசுவாசத்தை தாரும். அவர்கள் ஆக்கினைத்தீர்ப்பு அடையாமல், வாழ்வு பெற கிருபை செய்யும். ஆமென்.

கேள்வி:

  1. எவ்விதம் இரட்சிப்புடன் விசுவாசம் இணைக்கப்படுகிறது?

www.Waters-of-Life.net

Page last modified on August 20, 2021, at 03:02 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)