Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Mark - 023 (Jesus' True Family)
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish

Previous Lesson -- Next Lesson

மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - கலிலேயாவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசுவின் பெரிய அற்புதங்கள் (மாற்கு 3:7 - 8:26)

4. இயேசுவின் மெய்யான குடும்பம் (மாற்கு 3:31-35)


மாற்கு 3:31-35
31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; 34 தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே! 35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

இறைவனுடைய ராஜ்யம் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகங்களைப் பிரிக்கின்றது. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்கள் பரிசுத்த ஆவியினால் இறைவனுடைய புதிய குடும்பத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள். அன்பு, பரிசுத்தம், ஐக்கியம் ஆகியவற்றை பரலோகப் பிதாவின் சித்தத்தின்படி செய்யும் புதிய நண்பர்களைக் கொடுக்கிறார்.

யூதமதத் தலைவர்கள் தனது அன்பு மகனை அழிக்கும்படிக்கு கலிலேயா பகுதிக்கு வந்துள்ளார்கள் என்பதை இயேசுவின் தாய் கேள்விப்பட்டாள். அவள் இயேசுவின் சகோதரர்களுடன் வந்தாள். இயேசு தனது ஊழியத்தை விட்டுவிட்டு, குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும்படி வலியுறுத்தினாள். குடும்ப தேவையை சந்திக்கும் யோசேப்பு இறந்து அநேக வருடங்கள் ஆகிவிட்டன. கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் நண்பர்களிடம் சொல்லி அனுப்பினாள். கூட்டத்தை விட்டு உடனடியாக வரச் சொன்னாள்.

ஏழாவது கட்டளையின்படி கீழ்ப்படிதலுள்ள மகனாகிய கிறிஸ்து, உலகப்பிரகாரமான தாய்க்கு கீழ்ப்படிவதைக் காட்டிலும் பரலோகப் பிதாவிற்கு கீழ்ப்படிவதை தெரிந்துகொண்டார். மனித உறவுகளுக்கு தன்னுடைய பொறுப்புகளைவிட இறைவனுடைய குடும்பத்தில் தனது உறவைக் குறித்து வலியுறுத்தினார். இதுவே கட்டளையாகவும், பரிசுத்த ஆவியின் செயலாகவும் இருக்கிறது. மற்ற அனைத்தையும்விட இறைவனுடைய அன்பில் நம்மை உறுதிப்படுத்துவது அவசியம். உலக குடும்பங்கள் கடந்துபோகும். ஆனால் ஆண்டவருடைய ஆவியில் ஐக்கியம் கொண்டிருப்பவன் என்றென்றும் நிலைத்திருப்பான். பரலோகப் பிதாவின் குடும்பத்தில் யார் கனம் பெற்றிருப்பார்? இறைவனுடைய சித்தத்தின்படி செய்பவர் மட்டுமே. இறைவனுடைய சித்தம் என்ன? உங்களை இரட்சிக்கின்ற அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க வேண்டும். தமது அன்பினால் அவர் உங்களை மாற்றுகிறார். உன்னதமானவரின் சித்தத்தை நிறைவேற்ற உங்களுக்கு இறை வல்லமையைக் கொடுக்கிறார். அப்போது நீங்கள் இறைவனுடைய ஆவியின் வல்லமையைச் சார்ந்து கொண்டு, தாழ்மையுடன் நடந்து, சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறுவீர்கள்.

இயேசு உங்களை தனது சகோதரன், அல்லது சகோதரி என்று அழைப்பது எவ்வளவு பெரிய கனத்திற்குரிய காரியம் என்று பாருங்கள். நீங்கள் அவருடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக மாறுகிறீர்கள். இறைவனுடைய குமாரன் இந்த உறவிற்கு உங்களை அழைக்கிறார். நீங்கள் உலக உறவுகளுக்கு மேலாக உயர்ந்து, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் மற்றும் ஞானத்தினால் பெலப்படுத்தப்படுவீர்கள். இறைவனுடைய குடும்பத்திற்குள் நன்றிகளுடனும், துதிகளுடனும் வாருங்கள்.

விண்ணப்பம்: பரிசுத்த இறைவனே, உம்முடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் தகுதியற்றவர்கள். உமது ஒரே குமாரன் உமது குடும்பத்திற்குள் எங்களை அழைத்தார். நாங்கள் அவருடைய சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் இணைந்திருக்கச் செய்கிறீர். எங்களை பரிசுத்தப்படுத்தும். நாம் கறைதிரை இல்லாமல் கிறிஸ்துவைப் போல பரிசுத்தமாக இருக்கும்படி எங்களை பரிசுத்தப்படுத்தும். உமது அன்பைக் காண்பிக்கவும், ஒவ்வொரு நாளும் உமது சித்தத்தை நிறைவேற்றவும் உதவு செய்யும். உண்மையாய் நடக்கும்படி வல்லமையைத் தாரும். எங்கள் சொந்தக்குடும்பத்து உறவுகளிடம் நாங்கள் ஞானம் மற்றும் சமாதானத்துடன் செயல்பட உதவும். அவர்கள் உமது பரிசுத்தப் பெயரை தூஷிக்கும்போது, அவசியமானால் எங்களை அவர்களை விட்டு பிரித்துவிடும் அவர்கள் அனைவரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்கான எங்கள் விண்ணப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும். ஆமென்.

கேள்வி:

  1. கிறிஸ்துவின் சகோதர, சகோதரி யார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 14, 2021, at 07:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)