Waters of LifeBiblical Studies in Multiple Languages |
|
Home Bible Treasures Afrikaans |
This page in: -- Arabic -- English -- Indonesian -- TAMIL -- Turkish
Previous Lesson -- Next Lesson மாற்கு - கிறிஸ்து யார்?
மாற்கு எழுதிய கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - கிறிஸ்துவின் வெளிப்படுதலுக்கான ஆயத்தங்கள் (மாற்கு 1:1-13)
2. யோர்தான் பள்ளத்தாக்கில் யோவான் ஸ்நானகனின் ஊழியம் (மாற்கு 1:2-8)மாற்கு 1:2-8 பாலைவனங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் பொறியாளர்கள் அகலமான சாலைகளை அமைக்கிறார்கள். அவர்கள் பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகளின் மீது பெரிய பாலங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் அவர்களால் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் இணைப்பை வழங்க முடியாது. இறைவன் தம்மிடம் இருந்து உனது இருதயம், உனது குடும்பம் மற்றும் உனது நண்பர்களுக்கு சரியான பாதையை அமைத்துக் கொடுப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? ஆண்டவரின் பணியையும் அவருடைய உடனடி வருகையையும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல நீங்கள் ஆயத்தப்படுகிறீர்களா? அவருடைய உடனடி வருகையை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஆயத்தப்பட வேண்டும். அநேக மக்கள் எழுதுவது மற்றும், ஒளிபரப்புவதின் மூலம் பிரபலமான வழிநடத்துனர்கள் மற்றும் தலைவர்களாக தங்களுடைய மக்கள் மத்தியில் மாற விரும்புகிறார்கள். ஆனால் சிலர் தான் இறைவனால் உண்மையாக அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் சத்தம் வெறுமையானதும், மதிப்பற்றதுமாகவும் இருக்கிறது. ஆனால் கிறிஸ்துவின் செய்தியாளராகிய யோவான் ஸ்நானகன் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் செயல்பட்டான். அவனுடைய ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை அவனது வாயில் வைத்தார். அவருடைய வார்த்தையைக் கொண்டு மக்களுடைய இருதயங்களை உணர்வடையச் செய்து, அவர்களுடைய பாவங்களை சுட்டிக் காண்பித்தான். இறைவனின் கிருபையின் ஆசீர்வாதங்களை விட்டு விலகிய ஆவிக்குரிய பரிசுத்த ஆத்துமாக்களின் நிலையைக் கண்டான். உண்மையான மனந்திரும்புதலை யோவான்ஸ்நானகன் பிரசங்கித்தான். அவர்கள் மனங்களில் மாற்றம், இருதயத்தில் மாற்றம், வாழ்வில் சீர்திருத்தம் இருக்க வேண்டுமென்று கூறினான். அவர்கள் தங்கள் பாவங்களை கண்டிப்பாக அறிக்கையிட வேண்டும். அப்படிச் செய்தவர்கள் யோர்தான் நதியில் அவனிடம் ஞானஸ்நானம் பெற்றார்கள். பொது இடத்தில் பாவங்களை அறிக்கையிட்ட செயல் அவர்களுடைய பெருமையை உடைத்தது. பாவி பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் பழைய மனிதனுடைய செயல்களின் மரணம் ஆகியவற்றின் அடையாளமாக ஞானஸ்நானம் உள்ளது. ஒவ்வொரு மனிதனும், நீங்கள் உட்பட பாவமன்னிப்பிற்காகவும், பரிசுத்தமாக்கப்படுதலுக்காகவும் ஏங்குகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே உங்கள் ஆணடவருக்கு முன்பாக உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். அவரிடம் உண்மையாக உங்களை வெளிப்படுத்துங்கள். பாவத்திற்கான மீட்பைக் குறித்து யோவான்ஸ்நானகன் அறிக்கையிட்டான். அவருடைய ஆவியின் பெலத்தால் வருகின்ற கிறிஸ்துவுக்காக வழியை ஆயத்தம்பண்ணினான். பரிசுத்தமானவருக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளம் நொறுங்கி மனந்திரும்பினார்கள். இருதயத்தில் மனந்திரும்புதல், பாவ அறிக்கை, தண்ணீர் ஞானஸ்நானம், மன்னிக்கும் வார்த்தைகள் இவைகள் மட்டுமே மனிதனில் மாற்றம் கொண்டுவர போதுமானது அல்ல என்பதை யோவான்ஸ்நானகன் அறிந்திருந்தான். பரிசுத்த ஆவியானவர் மட்டுமே இருதயங்களுக்கு ஆறுதல் தருகிறார். மனிதனை சீர்திருத்துகிறார். எனவே இறைவன் விண்ணப்பம் செய்யும் தீர்க்கதரிசியிடம், கிறிஸ்து சீக்கிரம் வருவார் என்று கூறினான். அவர் மனந்திரும்புபவனுக்கு புதிய இருதயத்தைத் தருவார். தமது பரிசுத்த ஆவியினால் அவனுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். துறவி யோவான் தனிப்பட்ட விதத்தில் இறைவனுடைய குமாரனை சந்திப்பதைக் குறித்து நினைத்து கலங்கினான். தான் குறைவுள்ளவன் என்பதை அவன் அறிந்திருந்தான். அவரின் பாதரட்சகளை அவிழ்க்கிறதற்கும் பாத்திரன் அல்ல என்று நினைத்தான். இறைவன் முன்பு ஒருவரும் நல்லவர் இல்லை. மனந்திரும்பும் பாவியை அன்பின் ஆவியினால் நிரப்புவது தான் இறைவனின் திட்டம் ஆகும். உயிருள்ள கிறிஸ்துவில் விசுவாசம் வைக்காமல் எந்த மனிதனும் இந்த ஆவியானவரை பெற்றுக்கொள்ள முடியாது. ஆசீர்வாதமுள்ள ஆவியானவரின் ஊற்று கிறிஸ்துவே, பிதாவுடன் இணைந்திருப்பவர் அவரே. எனவே இயேசுவிடம் வாருங்கள். உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். உங்கள் எல்லா பாவங்களையும் அவர் முற்றிலும் மன்னிப்பார். தமது இரக்கம், தூய ஆவியினால் உங்களை நிரப்புவார். உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர். நீங்கள் அவரிடம் வந்தால் உங்களை அவர் பரிபூரணப்படுத்துவார். விண்ணப்பம்: பரலோகப் பிதாவே, உமது குமாரனுக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி யோவான்ஸ்நானகனை நீர் அனுப்பிதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களை உமது பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினால் உண்மையான மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தும், உமது ஒளியில் எங்கள் பாவங்களைக் காணச் செய்யும். எங்கள் உள்ளான நிலையில் அவைகளில் இருந்து மனந்திரும்ப உதவும். அவைகளை உண்மையாய் அறிக்கையிடுகிறோம். உமது வல்லமையினால் அவைகளை மேற்கொள்ளச் செய்யும். அவைகளை வெறுக்க உதவும். விசுவாசத்தின் மூலம் முழுமையான மன்னிப்பை உமது ஒரே குமாரனின் இரத்தத்தின் மூலம் பெற்றுக்கொள்ளச் செய்யும். உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, பரிசுத்தமடையச் செய்யும். உலகம் முழுவதிலும் உமது அன்பிற்காக ஏங்கும் மக்களோடு சேர்த்து எங்களுக்கும் இரங்கும். ஆமென். கேள்வி:
|