Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 099 (From Troas to Miletus)
This page in: -- Albanian? -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தலைப் பற்றிய அறிக்கையும் அந்தியோகியா முதல் ரோமாபுரிவரை திருச்சபைகள் நாட்டப்படுதலும் - பரிசுத்த ஆவியானவரினால் கட்டளையிடப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தினால் (அப்போஸ்தலர் 13 - 28)
ஈ - மூன்றாவது அருட்பணி பயணம் (அப்போஸ்தலர் 18:23 - 21:14)

8. துரோவாவில் இருந்து மிலேத்துவிற்கு பயணம் (அப்போஸ்தலர் 20:13-16)


அப்போஸ்தலர் 20:13-16
13 பவுல் ஆசோபட்டணம் வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம் பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம்.14 அவன் ஆசோ பட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம்.15 அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து,16 பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்க வேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்து பட்டணத்துக்கு வந்தோம்.

அந்த அற்புதமான இரவில் பவுலும், பல்வேறு சபைகளில் இருந்து வந்தோரும் தூங்கவில்லை. காலையில் அவர்கள் எருசலேம் நோக்கி பயணித்தார்கள். பவுல் அவர்களை விட்டுப்பிரிந்து பெனிசுலாவை சுற்றி அவர்கள் கடலில் பயணம் செய்த போது, வெறுங்காலால் பவுல் ஆசோ பட்டணம் வரைக்கும் 25 கிலோ மீட்டர் நடந்து சென்றான். பவுல் இவ்விதமாக தனியாக நடந்து செல்ல விரும்பினான். அவன் இறைவனுடன் நெருங்கி நடக்கவும், விண்ணப்பத்தில் தரித்திருக்கவும், துதிக்கவும், அற்புதமான இரவில் இயேசு செய்த செயலிற்காக, அவரை மகிமைப்படுத்தவும் எண்ணினான். பவுல் எல்லா மகிமையையும் அவருக்கு கொடுக்க விரும்பினான். அவன் சகோதரர்களை விட்டு, தன்னை பிரித்து தனியே சென்றான். தான் புகழப்படுவதையோ, பிறரை கவர்ந்திழுப்பதையோ அவன் விரும்பவில்லை. அவர்கள் இணைந்து, ஆண்டவராகிய இயேசு துரோவாவில் வாலிபனை உயிரோடு எழுப்பிய செயலை உணரவும், சிந்தித்து அறியவும் செய்தான். இறைவனின் வல்லமை செயல்படுவதற்கான ஆதாரமாக மரித்த மனிதன் உயிரோடு எழுந்த நிகழ்வு இருந்தது. அநேகரை அவர்களுடைய பாவங்களில் இருந்து விடுவிப்பதற்கு இது அடையாளமாகக் காணப்பட்டது. நற்செய்தியின் முழுமையும், தூய்மையும் பிரசங்கிக்கப்படும் இடத்தில் இது நிகழ்கிறது. பவுல் அதிக தூரம் நடந்தே சென்றான். நாம் பெற்றிருக்க நேரத்தை போலவே அவனும் அதிக நேரங்களை பெற்றிருந்தான். நாம் அநேக நாடுகளுக்கு விரைவாய் பயணம் செய்கிறோம். நித்தியத்திலும், கிறிஸ்துவின் அளவற்ற தன்மையிலும் பங்கெடுத்தான்.

வரைபடத்தில் துருக்கி நாட்டை நீங்கள் பார்க்க முடிகிறதா? துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளுக்கிடையேயுள்ள சிறப்புமிக்க மிலேத்து, கீயு மற்றும் சாமு தீவுகளின் பெயர்களைப் பாருங்கள். அங்கே கிறிஸ்து வெற்றிப் பவனியை பிரதிபலிக்கும் பாதைகளை நீங்கள் பார்க்க முடியும்.

சரக்கு பொருட்களால் நிரப்பப்பட்ட கப்பலைப் போல அல்லது விளைச்சலின் தானியங்களை நிரப்பிய கொள்கலன் போல இருந்தது. ஒவ்வொரு சபையின் மக்களோடும் பவுல் வந்திருந்தான். அவனது கையில் இருந்த வெகுமதி கிறிஸ்துவின் பலியை அடையாளமாக காண்பித்தது. தியாகத்துடன் கொடுப்பதை பயிற்றுவிக்கப்பட்ட சபைகள் நடைமுறைப்படுத்தின. சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்திற்கு பின்பு இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இது நிகழ்ந்தது. அவர்கள் தங்களது ஆண்டவருக்கு வெள்ளி மற்றும் பொன்னை மட்டும் கொடுக்கவில்லை. அவர்கள் தேவையுள்ளோருக்கு உதவினார்கள். தங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தார்கள். ஆபத்துகள் மற்றும் பிரச்சினைகள் சூழ இருந்தும் அவர்கள் தங்களது நேரம் மற்றும் பெலனை தியாகம் செய்தார்கள். நீங்கள் உங்களது வாழ்வை கிறிஸ்துவிற்காக முழுமையான பலியாக ஒப்புக் கொடுத்திருக்கிறீர்களா? அல்லது சுயநலத்துடன், மற்றும் கஞ்சத்தனத்துடன் இருக்கிறீர்களா?

பெந்தேகொஸ்தே நாளில் பவுல் எருசலேமுக்கு வரும்படி விரும்பினான். அறுவடையின் முடிவில் நன்றி செலுத்தும் யூதர்களின் பழமை வாய்ந்த பண்டிகையாக இது இருந்தது. அதே சமயத்தில் கிறிஸ்தவ சபையின் ஆரம்பமாக இந்த பண்டிகை இருந்தது. பவுல் மிகப்பெரும் அறுவடையுடன் வந்திருந்தார். முழு உலகிற்கும் நற்செய்தியை பிரசங்கிக்கும் ஆரம்ப மையமாக இது காணப்பட்டது. பவுல் செய்ததைப் போல ஒருவரும் அதிகமானவற்றை கொண்டு வந்ததில்லை. விண்ணப்பம் பண்ணின சீஷர்களின் மீது பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்ட பின்பு தான் இது நிகழ்ந்தது. எருசலேம் மற்றும் ரோம் என்ற தலை நகரங்களுக்கிடையில் எல்லா மையங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டது. அவைகளும் ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியினால் நிறையப்பட்டதாகக் காணப்பட்டது. சபை வரலாற்றின் முதற்காலத்தில் மிகப்பெரும் அற்புதமாக இது இருந்தது. இந்த தலைமையகங்கள் இருதயத்தைப் போல இருந்தன. சரீரம் முழுவதும் வாழ்விற்கான இரத்தத்தை நரம்புகளில் கொண்டு செல்வதைப் போல இருந்தன. இவ்விதமாக நற்செய்தியானது எல்லா பகுதிகளிலும் கடந்து சென்றது. இந்தக் காரியமானது பட்டயத்தைக் கையாண்டதினால் நிகழ்ந்தது அல்ல. எந்தவொரு மைய நிறுவனம், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உதவி இல்லாமல் இது நிகழ்ந்தது. நற்செய்தியானது இன்னும் கிரேக்க மொழியில் எழுதப்படவில்லை. இருப்பினும் எல்லா மக்கள் மத்தியிலும் இயேசுவின் நாமம் என்ற இரட்சகரின் ஒளி பிரகாசித்தது. மக்களின் சாட்சிகள் அல்லது கடிதங்கள் மூலம் மட்டுமே இரட்சிப்பின் நற்செய்தி கடந்து சென்றது. புதிய சபைகளை பலப்படுத்தும்படியாக பின்பு நற்செய்திகள் எழுதப்பட்டது. அதன் மூலம் இயேசுவின் வாழ்வு மற்றும் அவரது பணிகள் குறித்த வரலாற்றை அறிய முடிந்தது. சபை காலத்தின் ஆரம்பத்தை உருவாக்கிய முதல் புத்தகங்கள் நற்செய்திகள் அல்ல, அது அப்போஸ்தலர்களால் உருவாக்கப்பட்ட (கடிதங்கள்) நிரூபங்கள் ஆகும். அவர்களது வாழ்வும் இரட்சிப்பின் வல்லமைக்கு ஆதாரமாக இருந்தது.

கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மூலம் வெளிப்பட்ட இறைவனின் வல்லமை மூலமாகவே நாமும் வாழ்கின்றோம். அவர்களது நிரூபங்கள் சபைகளுக்கு வல்லமை மிக்க பிரசங்கங்கள், எச்சரிப்புகள், கண்டனங்கள் மற்றும் ஆறுதல்களாக உள்ளன. ஆரம்ப கால சபைகளின் ஆவிக்குரிய வாழ்வை உணர்ந்துகொள்ளும்படி நீங்கள் விரும்புகிறீர்களா? நிரூபங்களை படியுங்கள். அங்கே பரிசுத்த ஆவியின் நதிகளில் நீங்கள் மூழ்கமுடியும். அவரே இன்று வரை உலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். விசுவாசிகளைக் கட்டியெழுப்புகிறார். அவர்கள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதால், அவர்களை நிலைநிறுத்துகிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். நீர் அநேகரை பாவத்தின் மரணம் மற்றும் தண்டனையிலிருந்து விடுவித்திருக்கிறீர். அவர்களது வார்த்தைகள் மூலம் எங்களை பலப்படுத்தியிருக்கிறீர். அவைகள் உமது கிருபையின் ஆதாரமாக உள்ளது. எங்களது சரீரங்களை உமக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கும்படி உதவிசெய்யும். பேச்சுகள் மற்றும் உணர்வுகளினால் அல்ல, மாறாக செயல்கள் மூலம் உமக்கு உகந்த, நித்திய வாழ்க்கை வாழ உதவும். எங்களது நேரம் மற்றும் பணம் இவைகளைப் பயன்படுத்துவதில் உண்மையாய் இருக்க மற்றும் எங்களையே உமக்கு பலியாக ஒப்புக் கொடுக்கவும், சத்தியத்தில் நடக்கவும் உதவி செய்யும்.

கேள்வி:

  1. பவுல் ஏன் துரோவாவில் இருந்து எபேசுவிற்கு தனியாக நடந்து சென்றான்?

www.Waters-of-Life.net

Page last modified on March 04, 2014, at 12:07 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)