Home
Links
Bible Versions
Contact
About us
Impressum
Site Map


WoL AUDIO
WoL CHILDREN


Bible Treasures
Doctrines of Bible
Key Bible Verses


Afrikaans
አማርኛ
عربي
Azərbaycanca
Bahasa Indones.
Basa Jawa
Basa Sunda
Baoulé
বাংলা
Български
Cebuano
Dagbani
Dan
Dioula
Deutsch
Ελληνικά
English
Ewe
Español
فارسی
Français
Gjuha shqipe
հայերեն
한국어
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
Кыргызча
Lingála
മലയാളം
Mëranaw
မြန်မာဘာသာ
नेपाली
日本語
O‘zbek
Peul
Polski
Português
Русский
Srpski/Српски
Soomaaliga
தமிழ்
తెలుగు
ไทย
Tiếng Việt
Türkçe
Twi
Українська
اردو
Uyghur/ئۇيغۇرچه
Wolof
ייִדיש
Yorùbá
中文


ગુજરાતી
Latina
Magyar
Norsk

Home -- Tamil -- Acts - 047 (Saul Baptized at the Hand of Ananias)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
ஆ - சமாரியா, சீரியா பகுதிகளில் இரட்சிப்பின் நற்செய்தியின் விரிவாக்கம் மற்றும் புற இனத்தவரின் மனமாற்றங்களின் ஆரம்பம் (அப்போஸ்தலர் 8 - 12)

5. அனனியாவின் கரத்தினால் சவுல் ஞானஸ்நானம் எடுத்தல் (அப்போஸ்தலர் 9:6-19அ)


அப்போஸ்தலர் 9:6-19அ
6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள்.8 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.9 அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.10 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான்.11 அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்;12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார்.13 அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.14 இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங்கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். 15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்.16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார்.17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.19 அ)பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான்.

சவுல் வெறுமனே பயந்தவனாக மட்டும் இல்லை, கிட்டத்தட்ட அவன் மரணத்திற்கு அருகில் சென்றுவிட்டான். அவனுக்கு ஒவ்வொன்றும் முக்கியமாக இருந்தது. அவனது விசுவாசம், பெருந்தன்மை, நீதி, வைராக்கியம் மற்றும் சித்தம் அனைத்தும் மரித்தோரிலிருந்து எழுந்த இயேசுவின் காட்சி அருளால் உடைக்கப்பட்டது. “நான் குற்றவாளி. நான் இறைவனின் எதிரி, நான் சாத்தானின் கையாள். என்னுடைய எல்லாக் கல்வியும், இறைபக்தியும் எனக்கு உதவவில்லை. நான் கலகக்காரனாக, நன்றியற்றவனாக, மேலும் எதிர்த்து நிற்பவனாக இருக்கிறேன். தன்னில் தானே பக்தியுள்ளவன் என்று சொல்லிக் கொள்பவனின் வீழ்ச்சியைவிட பெரிய வீழ்ச்சி எதுவுமில்லை. வீழ்ச்சியின் போது, சுபாவத்தின்படி ஒவ்வொரு மனிதனும் இறைவனுடைய எதிரி என்று அறிகிற அறிவிற்குள் வருகிறான்.

இருப்பினும் இயேசு, அவருடைய சபையை துன்பப்படுத்தினவனை அழிக்கவில்லை. அவனுக்கு மனந்திரும்ப ஒரு வாய்ப்பை கொடுத்தார். சவுல் முணுமுணுத்தான். “ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?” இந்த நிகழ்வைத் தொடர்ந்து, சவுல் ஒரு போதும் செயல்படாமல் இல்லை. அவனுக்கு சுதந்திரம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இயேசுவின் ஊழியக்காரனாக அவன் மாறினான். அவனுடைய ஆண்டவரைக் கண்டான், நிபந்தனையின்றி, என்றென்றும் அவருக்கு தன்னை ஒப்புக்கொடுத்தான். அவனது ஆவிக்குரிய குருட்டுத்தனத்தை ஆண்டவர் சுகமாக்கினார். அவனது ஒருகடவுள் என்ற நம்பிக்கை செயலற்றுப்போனது. இயேசுவே உயிருள்ளவர், ஒரே ஆண்டவர், அவர் பிதாவுடனும், பரிசுத்த ஆவியானவருடனும் இருக்கிற மெய்யான இறைவன் என்பதை சவுல் உணர்ந்து கொண்டான்.

இவ்விதமாய் தாழ்த்தப்பட்டவனின் விசுவாசத்தை ஆண்டவர் உடனடியாக சோதித்தார். தமஸ்குவிற்கு செல்லும்படி அவனுக்கு கட்டளையிட்டார். சில நிமிடங்களுக்கு முன்பு உறுதிமிக்க, வைராக்கியமுள்ள சீர்திருத்தவாதியைப்போல தனது குதிரையில் ஏறி தலைநகரின் வாசல்களுக்கு பிரவேசிக்க தீர்மானித்திருந்தவன் இந்த சவுல். இப்போது பயந்துபோயிருந்த தனது கூட்டாளிகளால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்குள் தள்ளாடி நுழைந்தான். அவன் சில நண்பர்களின் வீட்டில் நின்றான். அவர்கள் வனாந்தரத்தில் மகிமையுள்ள ஒளியின் மூலம் செய்தியைக் கேட்டதைக் குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டார்கள்.

சவுல் யாருடனும் பேசவில்லை. மாறாக அவன் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டான், விண்ணப்பம் செய்தான். மேலும் உபவாசித்தான். அவன் இறைவனிடம் நெருங்கிச் சேர்வதற்காக தன்னை அனுதின வாழ்வின் நடவடிக்கைகளில் இருந்து பிரித்துக் கொண்டான். உன்னதமானவருக்கு ஒப்புக்கொடுக்கவும், இறைவனுடன் சமாதானமாய் இருக்கவும், அவருக்கு முழுமையாக கீழ்ப்படியவும் அவன் விரும்பினான். ஆண்டவராகிய இயேசு உயிரோடிருக்கிறார் என்றும், அவர் அவனை புறக்கணிக்கவில்லை என்றும் சவுல் அறிந்துகொண்டான். இறைவனுடைய கோபாக்கினையில் இருந்து இரட்சிப்பு மற்றும் அவருடைய மன்னிப்பை அவன் கேட்டான், அதற்காக விண்ணப்பம் செய்தான். மரணத்தில் இருந்து உயிர்த்தெழுதல் மற்றும் சிலுவையில் இரகசியங்கள் குறித்த அர்த்தங்களை, அவன் ஆழமாக தியானித்தான். புதிய ஏற்பாட்டின் சத்தியங்களின் மேல் அவன் தன்னை கட்டினான்.

மனந்திரும்புதலுக்கான அவனது எல்லா விண்ணப்பங்களுக்கும் இயேசு பதிலளித்தார். அவர் உடனடியாக அனனியா என்ற பெயர் கொண்ட விசுவாசிக்கு, உதவும்படி கட்டளையிட்டார். மிகப்பெரிய பணியை செய்வதற்காக ஆண்டவர் ஒரு சிறந்த செய்தியாளரையோ அல்லது ஒரு மகிமையுள்ள தூதனையோ நம்பவில்லை. ஆனால் கடினமான மனிதன் என்று அறியப்பட்டவனை, இருப்பினும் இறைவனுடைய ஒத்தாசையை பெற்றவனை நம்பினான். அதே நேரத்தில் விண்ணப்பம் செய்து கொண்டிருந்த சவுலுக்கு, அனனியா வந்து, இயேசுவின் நாமத்தில் அவன் தலையின் மீது கைகளை வைப்பதை ஆண்டவர் வெளிப்படுத்தினார். அனனியா அவனிடம் வரும்போது, அவனை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக ஆயத்தமாய் இருந்தான்.

ஆண்டவரிடம் இருந்து இந்த கட்டளையை அனனியா பெற்றபோது, அவன் மகிழ்ச்சியாக இல்லை. அவன் சவுலுக்கு பயந்திருந்தான், அவனுடைய அதிகாரத்திற்கு நடுங்கினான். எல்லா விசுவாசிகளும் வாலிபனை பரவலாக அறிந்திருந்தார்கள். வேதாகம ரீதியான சவுல் கலகம்பண்ணுபவன், துன்மார்க்கமான பிசாசு மேலும் எருசலேமில் பரிசுத்தவான்களை துன்பப்படுத்தியவன் என்பதை அறிந்திருந்தார்கள். இந்த எதிராளி மீது கைகளை வைப்பது அனனியாவிற்கு கற்பனைக்கு எட்டாத ஒரு காரியமாக காணப்பட்டது. இயேசுவை அறியாத ஒருவனின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் தங்க வேண்டுமோ, மேலும் மெய்யாகவே மனந்திரும்பாதவன் இவன் என்று எண்ணினான். ஆனால் குழப்பத்துடன் தயங்கிக் கொண்டிருந்த அனனியாவிற்கு ஆண்டவர் உணர்த்தினார். அவனுக்கு எளிமையாகக் கட்டளையிட்டார். “போ! இயேசு உன்னை அழைக்கும் போது, ஏதாவது ஒன்றை செய்யும்படி, அவர் உனக்கு கட்டளை இடுகிறார். அது ஒரு வேளை செல்வது, பேசுவது, செய்வது அல்லது விண்ணப்பம் செய்வது என்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஆண்டவருடைய கட்டளையை ஒரே நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுங்கள். உனது ராஜா வெகுநேரம் காத்திருக்க மாட்டார். அவர் உன்னிடம், உடனடியான கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்.

சவுலுக்கு இயேசு காட்சி அருளியதின் நிகழ்வுத் தொகுப்பை, அவர் அனனியாவிற்கு தெளிவுப்படுத்தவில்லை. இருப்பினும் அனனியா சவுலிடம் அனுப்பப்படுவதின் நோக்கத்தை விண்ணப்பம் செய்து கொண்டிருந்த தாழ்மையுள்ள இந்த மனிதனிடம் சொன்னார். அனனியா சவுலை சந்திக்கும்படியாக சென்றான். அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட தூதுவனாக அவனை அனுப்பும்படி சென்றான். இறைவன் கிருபையின் பாத்திரமாகவும், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாகவும் இருக்கும்படி, அவனைத் தெரிந்துகொண்டார்.

இந்த கிருபையின் பணியை நீ புரிந்துகொண்டுள்ளாயா? இறைவன் அவருடைய எதிரியை அப்போஸ்தலனாக மாற்றிவிட்டார். கிறிஸ்துவை வெறுத்த அவனில் இருந்து கிறிஸ்துவை நேசிப்பவன் வெளிப்பட்டான். கொள்கைவெறி, தற்பெருமையின் குருட்டாட்டத்தில் ஆட்கொள்ளப்பட்டிருந்த அவனை இரட்சித்தார். அவர் மில்லியன் கணக்கான மக்களின் ஆவிக்குரிய கண்களைத் திறப்பதற்கு அவனை பயன்படுத்தினார். முன்பு பிசாசினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த இந்த மனிதனில் பரிசுத்த ஆவியானவர் தங்கினார். உலக அஸ்திபாரங்கள் மீது அவன் சார்ந்திருந்த அனைத்திலும் இருந்து அவனை அவர் விடுதலை செய்தார். அவனை உயிருள்ள கிருபையிலும், கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையிலும் உறுதிப்படுத்தினார். தனது உள்ளான மனிதனில் இயேசு என்னும் நாமத்தை சுமந்தவனாக சவுல் வந்தான். அவனுடைய மனம் இயேசு என்னும் நாமத்தினால் நிறைந்திருந்தது. இந்த ஒப்பற்ற நாமத்தினால் சவுல் முழுவதும் நிறைந்திருந்தான்.

யார் உண்மையான கிறிஸ்தவன் என்பது உனக்குத் தெரியுமா? வார்த்தை, நடக்கை, சுயக்கட்டுபாடு, சத்தியம், நீதி, மற்றும் வல்லமையோடு கிறிஸ்து யாரில் தங்கியிருக்கிறாரோ, அவனே உண்மைக் கிறிஸ்தவன். உனது வாழ்வில் கிறிஸ்து முழுமையாக பிரகாசிக்கின்றாரா?

இராஜாக்கள், அதிபதிகள், அதிகாரிகள் முன்பு பவுல் கிறிஸ்துவின் சாட்சியாக செயல்பட்டான். அவனுடைய ஆண்டவரைப்போல, காவற்காரர்களால் கட்டப்பட்டவனாக கொண்டு செல்லப்பட்டான். அவனுடைய ஆண்டவர் ஹெலனிஸ்டிக் யூதர்கள் மத்தியிலும் அவனை அனுப்பினார். பவுல் தன்னுடைய அன்பை புற இனத்தாருக்கும், அவனுடைய நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்தான். அவனுடைய இருதயம் முதலில் இருந்த அறியாமைக்கும், பின்பு ஏற்பட்ட மாற்றத்திற்கும் இடையில் பாடுபட்டது. பவுலின் கடிதங்களை வாசிக்கும் ஒருவர், அவர் இயேசுவின் நாமத்திற்காக எவ்விதம் பாடுபட்டார் என்று அறிந்துகொள்ள முடியும். இருப்பினும் பவுல் தன்னுடைய பாடுகளைக் குறித்து பெருமை பாராட்டவில்லை. ஏனெனில் அவனிடத்தில் எந்த தகுதியும் அல்லது திறமையும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். கிருபையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.

சவுலின் எதிர்காலத்தைக் குறித்த ஆண்டவரின் வெளிப்பாட்டை அனனியா நடுக்கத்துடன் கேட்டான். அவன் ஆண்டவருடைய வார்த்தையை நம்பினான், அவனிடம் சென்றான். ஒருவேளை சவுலுக்கு வழியில் என்ன நிகழ்ந்தது என்று அவன் விசாரித்திருக்கலாம். குருடாய்ப் போன அவனிடம், வழியில் அவனுக்கு காட்சி அருளின ஆண்டவரின் நாமத்தில் அனனியா பேசினான். ஆண்டவராகிய இயேசு அனனியாவின் எதிரியை, இப்போது அவனுடைய சகோதரனாக மாற்றிவிட்டார். கிறிஸ்துவின் கிருபை மக்களை முழுமையாக மாற்றுகிறது. அது பிரிவினை வாதிகள் மத்தியில் சமாதானத்தை கொண்டு வருகிறது. அவர்களை இறைவனின் அன்பின் குடும்பத்தில் சகோதரர்களாக இணைக்கின்றது.

ஆண்டவராகிய இயேசு சவுலின் சரீரக் கண்களைத் திறப்பதற்காக மாத்திரம் தன்னை அனுப்பவில்லை என்பதை விண்ணப்பம் செய்து கொண்டிருந்த அனனியா அறிந்திருந்தான். அவருடைய கரங்களை வைக்கும் அந்த நிகழ்வின் விளைவையும் அவன் அறிந்திருந்தான். அதன் மூலம் பரிசுத்த ஆவியின் நிறைவு, மன்னிப்பின் நிச்சயம், இறைவனுடன் ஏற்பட்ட சமாதானத்தை உணருதல், ஊழியத்திற்கான கட்டளை மற்றும் அன்பை உறுதிசெய்தல் ஆகியவை தாழ்மையின் வல்லமையோடு சவுலுக்கு கிடைத்தது. பவுல் இந்த நற்குணங்களை தன்னில்தானே உருவாக்க இயலாது, அல்லது அவனது கலாச்சாரம் மற்றும் அவன் மக்களிடமிருந்த இனப்பாகுபாடு இவைகள் உருவாக்க இயலாது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு சாதாரண சகோதரனாக அனுப்பும்படி கிறிஸ்து பவுலை தெரிந்துகொண்டார். ஆகவே ஒருவரும் பெருமை பாராட்ட இயலாது.

அதிகம் கல்வி கற்காத அனனியா வந்தான். தனது கரங்களை நியாயப்பிரமாண மேதையின் தலையின் மேல் வைத்தான். உடனடியாக சவுல் தனது பார்வையை மீண்டும் பெற்றான். இறைவனைத் தேடியவன் ஆண்டவரின் ஆவியினால் நிரப்பப்பட்டான். மருத்துவராகிய லூக்காவைத் தவிர, வேறு எவரும், பவுலின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சியை விவரித்து சொல்ல இயலாது. சவுலின் கண்களில் இருந்து செதிள்கள் போன்றவை விழுந்தன என்று லூக்கா எழுதுகிறார். நித்தியமான நியாயதிபதி தன்னுடைய பரலோக பிதாவாக இருக்கிறார். சிலுவையில் அறையப்பட்டவர் மேலும் அவமதிக்கப்பட்டவர் இறைவனுடைய தாழ்மையான ஆட்டுக்குட்டியாக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய அன்பாகவே இருக்கிறார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து விரைவில் வெளிப்படப்போகின்ற மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார். மனந்திரும்பிய சவுலின் வாழ்வில், இந்நேரத்தில் கிறிஸ்துவின் இரட்சிப்பு உணரப்பட்டது. இருள் நிறைந்த குகையில் மின்சார விளக்கு பிரகாசமாக ஒளிர்வதைப்போல், அவனது இருதயம் ஒளிர்ந்தது.

பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தை சவுல் பெற்றான், பின்பு தண்ணீரிலும் மூழ்கி ஞானஸ்நானம் எடுத்தான். கிறிஸ்துவின் அனைத்து வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிய விருப்பம் உள்ளவனாக இருந்தான். சபை அங்கத்தினர்கள் முன்பு அவன் சாட்சியிட்டான். தான் விட்டுவந்த பழையவாழ்க்கை, அதன் வாழ்வற்ற கொள்கைகள் அடங்கிய முழு உலகத்திற்கும் சாட்சியிட்டான். நித்திய வாழ்விற்குள்ளாக அவன் பிரவேசித்தான். புதிய ஏற்பாட்டில் உறுதியுடையவனாக மாறினான். தனது கடந்தகாலம் அடக்கம்பண்ணப்பட்டு விட்டது என்று சவுல் கருதினான். ஒரு புதிய மனிதனாக பவுல் என்ற பெயரில் எழுந்தார்.

இதைத் தொடர்ந்து ஆர்வமூட்டும் நிகழ்வு ஒன்றை நாம் வாசிக்கிறோம். மீட்கப்பட்ட அவன் ஆர்வமூட்டும் துதிகளை ஏறெடுக்கவில்லை. அல்லது அந்நிய பாஷைகளில் பேசவில்லை. அவன் ஆகாரம் வேண்டுமென்று கேட்டான். மூன்று நாளாய் பகலும், இரவும் உபவாசம் இருந்த அவன் நன்றாக சாப்பிட்டான். பரிசுத்த ஆவியானவரின் ஆசைக்குள் வந்துவிட்ட பின் அவனது சரீரமும், ஆத்துமாவும் புதுப்பிக்கப்பட்டது. அவன் சாதாரண மனிதனாக மாறினான். பவுல் துறவற வாழ்வு மேற்கொண்டவனாக நடக்க ஆரம்பிக்கவில்லை. அவன் சாப்பிட்டான், குடித்தான். அவருடைய மகிமையுள்ள ஆண்டவருக்காக வாழ்ந்தான்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, தனது கரங்களை வைப்பதன் மூலமாக பரிசுத்த ஆவியினால் சவுல் நிரப்பப்படும்படி, நீர் அனனியாவை சவுலிடம் அனுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உண்மையான மனந்திரும்புதலுக்கு நேராக எங்களை வழிநடத்தும். எல்லா உண்மையோடும் உம்மிடத்தில் திரும்ப எங்களுக்கு உதவும். உமது இரக்கத்தின் ஆவி எங்களை நிரப்புவாராக! நாங்கள் உமது நாமத்தினாலும், உமது நற்குணங்களாலும் நிறையப்படவும், பலப்படவும் உதவும்.

கேள்வி:

  1. பரிசுத்த ஆவியினால் சவுல் நிரப்பப்பட்டது எதைக் குறிக்கின்றது?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:58 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)